சித்த(ர்)த் துளிப்பு – 21-Dec-2020


பாடல்

நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்ப்பதென்றோ
நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்த்தாலும்
காட்டானை மேலேறி என் கண்ணம்மா!
கண்குளிரக் காண்பேனோ!

அருளிய சித்தர் : அழுகணிச் சித்தர்

பதவுரை

கண்ணம்மா! நாகரிகமற்றவன், அயலான், காட்டான்  எனும் பொருளில் இயங்கிக் கொண்டிருக்கும் காற்றானது மூலாதாரத்தில் இருந்து இயங்கி யோக மார்க்கமாக ஆஞ்ஞை கடந்து சகஸ்ராரம் வரையில் கடைத்தெருவின் வழியே செல்வது போன்று  அனைத்து ஆதாரங்களையும் கடந்து செல்கின்றது. ஊர்சபைக்காரார் எனும் உடலோடு இருப்பவர்களும், அண்டத்தில் இருப்பவர்களாகிய எமனால் ஏவப்பட்டவர்களும் நமது யோக சித்தி நிறைவேறாமல் இருப்பதன் பொருட்டு இந்த முறைகள் குறித்து புன்னகை புரிந்து எள்ளி நகையாடுவார்கள்; அவ்வாறு நம்மை கட்டுப்படுத்துவர்களாகிய அந்த நாட்டார்கள் நம்மை  கண்டு எள்ளி நகையாடினாலும் காற்றினை மேலேற்றி உன்னுடைய திருநடனத்தினைக் காண்பேனோ!

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *