
பாடல்
செய்யப்பா யிப்படியே பூஜைகொண்டு
திறமாகச் செய்யவல்லோ பலத்தைக்கேளு
மெய்யப்பா அவனுடைய பிதிர்களெல்லாம்
மிகக்கோடி நரகசென்ம மல்லவல்ல
பொய்யப்பா செல்லவில்லை தேர்ந்துபாரு
புலத்தியனே உந்தனுக்க்குக் கருவைச்சொன்னேன்
வையப்பா பூஜையிலே என்னைவைத்து
மவுனமாய் சிவனைவைத்து நோக்குநீயே
அகஸ்தியர் சிவலிங்க பூஜா விதி
கருத்து – சிவபூஜை முறைகளைக் கூறி, அதை செய்வதால் அவர்கள் முன்னோர்கள் நரக ஜன்மத்தில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்பதை உணர்த்தும் பாடல்.
பதவுரை
இவ்வாறு உரைத்த படி திறமையாக சிவ பூஜை செய்வதன் பலன்களைக் கேட்பாயாக; கோடி ஜன்மங்களாக நரக ஜன்மத்தில் அழுந்தி இருக்கும் அவனுடைய முன்னோர்கள் இந்த சிவ பூஜை செய்வதால் விலக்கப்படுவார்கள்; இதை பொய்யாக உரைக்கவில்லை; இதை பயிற்சி செய்து பார்ப்பாயாக; புலத்தியனை உந்தனுக்கு இவ்வாறான சிவபூஜை செய்வதன் கருவைச் சொன்னேன்; இந்த பூஜை முறையில் என்னை வைத்து சிவனைவைத்து மௌனமாக அந்த சிவத்தை நோக்குவாயாக.
விளக்க உரை
- திறம் – திறமை, புலமை