பாடல்
அடியமர்ந்து கொள்வாயே நெஞ்சமே அப்பம்
இடிஅவலோ டெள்உண்டை கன்னல் வடிசுவையில்
தாழ்வானை ஆழ்வானைத் தன்னடியார் உள்ளத்தே
வாழ்வானை வாழ்த்தியே வாழ்
பதினொன்றாம் திருமுறை – மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை – காரைக்கால் அம்மையார்
கருத்து – வாயினால் வாழ்த்தினால் வாழ்வு உண்டாகாது ஆகையால், நெஞ்சத்தினால் அவனுடைய அடிகளை விரும்பி உன்னுள் இருத்திக் கொள்வாய் என்பது பற்றி உரைக்கும் பாடல்.
பதவுரை
நெஞ்சமே! அப்பம், மா, அவல், எள் உருண்டை இவற்றுடன் கரும்பில் இருந்து மிகுந்து ஒழுகுகின்ற மிகுகின்ற சுவை கூடியதான கருப்பஞ்சாறு இவைகளை உள்ளத்தில் விரும்பி, அதில் அழுந்தி நுகர்வானுடைய அடிகளை விரும்பி உன்னுள் இருத்திக் கொண்டு அவன் திருவடிகளில் அமர்ந்து கொள்வாய்.
விளக்க உரை
- அமர்தல் – விரும்புதல்
- இடி – மா.
- கன்னல் – கரும்பு