என் இனிய பொன் நிலாவே…

இந்த பாடலை எத்தனை முறை கேட்டிருப்பேன் என்று தெரியவில்லை.

காலை நேரக் காப்பிக்கு என்று ஒரு வாசனை எப்பொழுதும் உண்டு. புது டிகாஷன், புது பால் மற்றும் இத்தியாதிகள். அது போன்றதே இப்பாடலும்.

இசை, காட்சிவடிவம் மற்றும் அனைத்தும் சேர்ந்த ஒரு கலவை இப்பாடல். (இது போன்று மிகச் சில படைப்பாளிகளுக்கே அமைகிறது. மகேந்திரன், பாலு மகேந்திரா, பாலா – பொது அம்சம் – இளையராஜா)

நாயகியை கடத்தி வந்திருக்கிறான். அவளை வீட்டில் அடைத்து வைத்திருக்கிறான்.

காலம் சிறிது கடக்கிறது

அவள் கேட்கிறாள். ‘ உங்களுக்கு பாட வருமா?’
‘கொஞ்சமா’ பதில் வருகிறது.

பாடல் துவங்குகிறது. மெல்லியதாய் கிடார் இழைய ஆரம்பிக்கிறது.
பலப்பல முக பாவனைகள் நாயகி முகத்தில்.

காட்சி அமைப்பில் நம்மை வேறு உலகத்திற்கு அழைத்துச் செல்கிறது இசையும் காட்சியும்.

தலை கோதுதல், நாயகன் கண்ணாடி சரி செய்தல், மழை பெய்யும் வானம் பார்த்தல் ஆகட்டும் அனைத்தும் கவிதையில் சிறந்த வடிவங்களாய்.

நீரினில் பட்டு வெளிச்சம் நாயகி முகத்தில் பிரதிபலிக்கிறது. அது நாயகன் கண் கண்ணாடிகளில்.
கடற்கரையில் இருவருக்குமான நடை. பின் புலத்தில் அலைகள்.

காப்பி அருந்திக் கொண்டே இருவருக்குமான பேச்சுக்கள். கைகள் செயினை சரி செய்து கொண்டே இருக்கின்றன.

காட்சி அமைப்பில் பழைய நிலைக்கு வந்தாலும் இன்னும் ஒலிக்கிறது.

‘இரட்டுற மொழிதல்’ என்பது தமிழின் பயன்பாடுகளில் ஒரு வகை.  அது போல ஒரு பாடல் மிக கனமான அழுத்தம் நிறைந்த மன நிலைக்கும், மிக சந்தோஷமான தருணங்களுக்கும் பொருந்துவது இப்பாடல்.

தரை இறங்கா நிலவு இன்றும் வானிலும் மனத்திலும்.

Loading

சமூக ஊடகங்கள்

வியாபாரம்

மேற்கு மாம்பலத்தில் பரபரப்பான பகுதியில் ஒரு மாலை வேளை.

ரெண்டு எளநி என்ன வில?
60 ரூவா சார்.

ரெண்டு சேப்பு எளநி குடுங்க.
இந்தாங்க சார்.

‘ரொம்ப வருசமா கட வச்சிருக்கீங்ல போல’

‘ஆமாம் தம்பி’.

‘எளநி ரொம்ப நல்லா இருந்துதுங்க, இந்தாங்க பணம்’

‘இதுல 70ரூவா இருக்கு தம்பி’

‘நல்லா இருந்துன்னு நாந்தான் சேத்துக் குடுத்தேன்’

‘வேண்டாம் தம்பி. யாரும் யார் காசயும் புடுக்க முடியாது சார். கடவுள் புண்ணியத்துல யாவாரம் நல்லா போவுதுங்க. பையன் சிங்கப்பூர்ல இருக்கான். பொண்ணு TCSல வேல பாக்குது. எனக்குதான் தம்பி எங்கயும் போவ புடிக்கல. அதனால இத செஞ்சிகிட்டு இருக்கேன். தம்பி நீங்க கம்புட்டர் கம்பெனியிலா வேல செய்ரீங்க’

‘ஆமாம்’

‘நீங்க தான் தம்பி பாவம், ஒங்களுக்கு மாசத்துக்கு ஒரு தபா தான் சம்பளம். ஆனா பாருங்க எங்களுக்கு தினம் சம்பளம், செலவுனாக்க கூட காசு புரட்டிக்கலாம் பாருங்க’

குடித்த இளநீரின் துவர்ப்பில் இன்னமும் இருக்கின்றன அதற்கான அனுபவமும் தர்மத்துடன் கூடிய வியாபார நோக்கமும்.

 
Click by : RamaSwamy N

Loading

சமூக ஊடகங்கள்

மினி பேருந்தும் மினி பயணமும்

ராமாபுரம் மெயின் ரோட்டில் ஒரு மினி பேருந்து

கிடுகிடு வென 30 பேர் பஸ்ஸில் ஏறினர்.

எல்லோர் முகத்திலும் சந்தோஷம்.

‘ஏண்டா, இப்ப மினி பஸ், அப்புறம் 17G, அப்புறம் திரும்பவும் மினி பஸ். அப்புறம் நம்ப பொழப்பு எப்படி ஓடும்’. ஆட்டோ காரர்களின்  மன வெளிப்பாடுகள்.

மனிதர்களை ஏற்றிக்கொண்டு பஸ் புறப்பட்டது.
‘எங்க போவணும்’
‘அரச மரத்தடி’
‘கல்லூரி சாலை ஒன்னு கொடுங்க’
‘அது எங்க இருக்கு’
‘ஏங்க, என்னங்க கண்டக்டர் நீங்க, நிறுத்தம் எல்லாம் உங்களுக்குத் தான் தெரியனும்’.
‘சார் நான் புதுசு சார்’

பஸ் சுட்டுகாட்டுக்கு அருகில் ஸ்டேஜிக்காக நிறுத்தப்பட்டிருந்தது.

‘சார் டிக்கட் வாங்கறவங்கலெம் சீக்கிரம் வாங்குங்க’
பஸ் மைக்கேல் கார்டன் அருகில் வந்திருந்தது.
‘புள்ளயார் கோயில் நிக்குமா சார்’
‘ரெண்டு வீட்டுக்கு ஒரு வீடு நிக்கும்’

‘என்ன சார் செய்யறது, இது தான் பொழப்பு, ஆளாளுக்கு வீட்டுக்கு வீடு நிறுத்த சொல்றாங்க. ஆனா எங்களுக்கு 32 டிரிப்பு அடிக்கணும் சார். இன்னைக்கு இது தான் 18வது டிரிப்பு. அதிக பட்சம் 22 அல்லது 23 தான் முடியும். என்னா, கொஞ்சம் திட்டுவாங்க, வாங்கிக்க வேண்டியது தான்.

டிரிப் ஷீட்டில் 32 என்று எழுதி வட்டம் இடப் பட்டிருந்தது.

பயணம் சிலருக்கு சுகமாகவும், சிலருக்கு சுமையாகவும் மாறிவிடுகிறது. ஆனாலும் பயணம் மட்டும் தொடர்கிறது.

Loading

சமூக ஊடகங்கள்

2038 – இயந்திர மனிதன்,செயற்கை அறிவு, நரம்புகளின் வலைப்பின்னல்

2038 – இயந்திரமனிதன்,செயற்கை அறிவு, நரம்புகளின்வலைப்பின்னல்
(இது முழுவதும் கற்பனையே. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல.

இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)

1.
மிகச் சிறந்த வலைப்பின்னல் மற்றும்அறிவுள்ள உணர்தல் கூடிய நுட்பம்சார்ந்தது.( intelligent sensing systems)
சார், இத வச்சி எம்புருசனுக்கு எப்ப அறிவு வரும்னுசொல்ல முடியுமா?
2.
சார், இது மிகச் சிறந்தஅறிவான வலைப்பின்னல் வகையைச் சார்ந்த கைப்பேசிதான். ஆனா உங்க பொண்டாட்டிஎவ்வளவு நேரத்தில துணி எடுப்பாங்கன்னு சொல்லமுடியாது சார்.
3.
என்னங்கநீங்க, சிறந்த வலைப்பின்னல் கூடியதுஅதால உதட்டால பேசறத எல்லாம்புரிஞ்சிக் முடியும்னு சொல்லி குடுத்தீங்க. ஆனாஎம் புருசன் பேசற கெட்டவார்தைகளை மட்டும் புரிஞ்சிக்க முடியலசார்.
4
மிகச் சிறந்த தொழில் நுட்பவலைப்பின்னலுடன் கூடிய தானியங்கி கார்களைசென்னைக்கு டெமோவிற்கு அனுப்பியது தப்பா போச்சு.
ஏன்?
ஒரு அடி கூட நகரல. எல்லாம் பெயில் ஆயிடுச்சு.
5
சார் எங்களை மன்னிச்சுடுங்க, உங்கமனைவி எப்ப எல்லாம் கோவப்படுவாங்கன்னுநரம்பு சார்ந்த வலைப்பின்னல்ல ஏத்திட்டோம்சார். ஆனா, அதுக்கு மேலநினைவாற்றலை அதிக படுத்த முடியலசார்.
6
என்னாப்பா? போன வாரம் வாங்குன ரோபோசரியா வேலை செய்யல?

அது ரிசஷன் பீரியட்ல செய்ததுசார். அதனால 50 மில்லியன் வலைப் பின்னல்கள் சரியாவேலை செய்யாது சார்.

Loading

சமூக ஊடகங்கள்

சாக்த வழிபாடும் விஜய தசமியும்

சாக்த வழிபாட்டின் (தேவியை – அம்பாளை) மிக மிக முக்கியமான பண்டிகையாக இந்த நவராத்ரி கொண்டாடப்படுகிறது.

மற்ற வழிபாடுகள் போலவே சாக்த வழிபாட்டிலும் பல வழிமுறைகளும் பல நிலைகளும் உண்டு. (உ.ம் வாரகி உபாசனை முறைகள், ஸ்ரீவித்யா உபாசனை முறைகள்).

புரட்டாசி மாதம் வளர்பிறை முதலாவதாக ஒன்பது நாட்களை நவராத்திகளாக கொண்டாடுகிறோம்.

அரக்கர்களை வென்று வாகை சூடிய நாள் என்பதால் விஜய தசமிக்கு சிறப்பு.

வனவாசம் முடிந்து, அஞ்ஞாத வாசம் (மறைந்திருந்த காலமும் முடிந்து)  தங்களது படைக்கருவிகள் அனைத்தையும் வன்னி மரத்திலிந்து அர்ஜுனனும் மற்றவர்களும் எடுத்தது விஜய தசமி அன்று.

இவ்விடத்தில் அர்ஜுனன் துர்க்கையை உபாசனை செய்கிறான்.

மகா பாரதப் போரில் வெல்ல துர்க்கையை உபாசனை செய்யுமாறு கிருஷ்ணன் பணிக்கிறான். அப்போதும் அர்ஜுனன் துர்க்கையை உபாசனை செய்கிறான்.

இரண்டுமே ஒரு தெய்வத்தை பற்றியது என்றாலும் வெவ்வேறு மந்திரங்கள்.

பல ரிஷிகளும் முனிவர்களும் சாக்க வழிபாட்டிற்குப் பிறகே உன்னத நிலையை அடைந்திருக்கிறார்கள்.

லலிதா சகஸ்ரநாமமும் ஸ்ரீ மாதா என்றே துவங்குகிறது.

அன்னையின் கருணை அளப்பரியது.

Loading

சமூக ஊடகங்கள்

கடவுட் கொள்கை – வாதங்கள் – 4

துக்கடா..
நண்பன் 1 : நான் இன்றைக்கு உன்னிடம் விவாதிக்க வந்திருக்கிறேன்.
நண்பன் 2 : எதைப் பற்றி?
நண்பன் 1 : கடவுள் உண்டா இல்லையா என்று?.
நண்பன் 2 : சரிடா. உன் பெயர் என்ன.
நண்பன் 1 : கணபதி.
நண்பன் 2 : ஆங்கிலத்தில் எப்படி எழுதுவாய்.
நண்பன் 1 :  ganappathi
நண்பன் 2 : பேர் ஏண்டா 37ல வரமாதிரி வச்சிருக்க.
நண்பன் 1 : நான் உங்கிட்ட அப்புறமா பேசறேன்.

*****
திருமந்திரம்

மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்துள் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்துள் மறைந்து பார்முதல் பூதம்.

ஒரு அழகான யானை இருகிறது. சில நேரம் கழித்து அது யானை அல்ல சிலை என்ற உணர்வு வருகிறது. அது எதனால் செய்யப்பட்டிருக்கிறது என்பது மறைந்துவிடுகிறது. அழகான யானை என்பதே நினைவில் நிற்கிறது. அதைப்போலவே தனித்தன்மையான ஒப்புவுயர்வு அற்ற என்ற பொருள்படும் பரம் என்பதை பூதங்கள்(பஞ்சேந்திரியங்கள்)  மறைத்துவிடுகின்றன. அவைகளுக்குள்ளும் பரம் என்பது நிறைந்திருகிறது.

முடிவுரை 1 :
கண்டவர், விண்டிலர்..
விண்டவர் கண்டிலர்.
முடிவுரை 2:
இறை அனுபவம் அறியக் கூடியது அல்ல. உணரக் கூடியது.

கடவுட் கொள்கை – வாதங்கள்-3 
கடவுட் கொள்கை – வாதங்கள்-2
கடவுட் கொள்கை – வாதங்கள்-1

Loading

சமூக ஊடகங்கள்

ஒரு பாதி கனவு நீயடி..

எவ்வித இசையும் இன்றி நெஞ்சினில் கத்தி வைப்பது போல் ஆரம்பமாகிறது பாடல். நீ என்பதே நான் தானடி..,

ஒரு வாகனம் நகர ஆரம்பமாவதில் கவிதைகள் (மன்னிக்கவும்) பாடல் ஆரம்பமாகிறது.

ஊடல் பற்றிய நிகழ்வுகள் பல திரைப்படங்களில் பதிவு செய்யப் பட்டிருக்கின்றன. ஆனாலும் இது தனியாக தெரிகிறது.

ஊடல் கொண்ட வேளை. கணவன் தன் நினைவு இன்றி தலைவாருகிறான். மனைவி சீப்பினை எடுத்ததால் அவளுக்கு  மிகக் கோபம். கோபத்தில் கண்களை மூடிக் கொள்கிறான்.

மனைவியை சந்திக்க நோயாளியாக நுழைகிறான். மெல்லிய புன்னகை இருவருக்கும்.

சிறு பயணத்தில் சில தீண்டல்கள்,

வாழ்த்து அட்டைகள், தன்னை தருவதாக முடிகிறது.

மனைவி கணனி கற்றுத்தருகிறாள். தன்னை அறியாமல் தீண்டிவிடுகிறாள். கள்ளப்புன்னகை கணவனுக்கு.(விக்ரமால் மட்டுமே முடியும்).

கணவன் மனைவியின் ஊடல் மிகச் சரியாக, மிகச் சிறந்த கவிதையாக வடிவம் பெற்றிருக்கிறது.

காலம் பெயரிட்டு அழைக்கும் கவிதையில் இது நிச்சயம் இடம் பெறும். வீட்டில் இருந்து மழையை ரசிப்பது போல், யாருமற்ற இரவுகளில் மனதை அதன் வழிகளில் இட்டுச் செல்லும் பாடல்களில் இது நிச்சயம் இடம் பெறும்.

Loading

சமூக ஊடகங்கள்

கடவுட் கொள்கை – வாதங்கள்-3

கதை – 1
முன்னொருகாலத்தில் ஒரு ஆசிரமம் இருந்தது. அதில் ஒரு குருவும் சில சீடர்களும் இருந்தார்கள்.
பயிற்சிக்காலம் முடிந்தது.

குரு         : உங்கள் பயிற்சி முடிந்தது.
மாணவன் : உங்களை விட்டுப் பிரிவது வருத்தம் தருவதாக இருக்கிறது.

குரு         : காலம் எல்லாவற்றையும் மாற்றும் வல்லமை உடையது.
மாணவன் : ……

குரு         : இன்று இரவு உங்களுக்கு ஒரு வாழைப் பழம் தருவேன். அதை யாருக்கும் தெரியாமல் உண்டுவிட்டால் உங்கள் அனைத்து பயிற்சிகளும் முடிவுற்று விடும்.

குரு         : நீ எங்கு உண்டாய்.
மாணவன்  : கிணற்றடியில், அப்போது யாரும் இல்லை.

குரு         : நீ எங்கு உண்டாய்.
மாணவன் : மரத்தடியினில் அப்போது யாரும் இல்லை.

குரு         : நீ எங்கு உண்டாய்.
மாணவன் : ஆற்றங்கரை அருகினில். அப்போது யாரும் இல்லை.

குரு         : நீ எங்கு உண்டாய்.
மாணவன் : உண்ணவில்லை.

குரு         : ஏன்?

மாணவன் : நீங்கள் யாருக்கும் தெரியாமல் உண்ணச் சொன்னீர்கள். கடவுள் எல்லா இடங்களிலும் இருப்பவர் என்றும் நீங்கள் தானே பயிற்றுவித்தீர்கள். அப்படி இருக்க நான் எப்படி யாருக்கும் தெரியாமல் உண்ணமுடியும்.
குரு         : நீயே என் பிரதான சீடன்.

எனது தோழமை குறிப்பிட்டதைப் போல் இருப்பு/இல்லை என்பதை பல வழிகளில் விளக்க முற்படலாம்.

ஓளி என்பது இருளின் மறைவு
வெப்பம் என்பது குளிரின் மறைவு

2907 –
உளன் அலன் எனில் அவன் உருவம் இவ் வுருவுகள்
உளன் அலன் எனில் அவன் அருவம் இவ் வருவுகள்
உளன் என விலன் என இவை குணம் உடைமையில்
உளன் இரு தகைமை யொடு ஒழிவிலன் பரந்தே

அவன் இருக்கிறான் என்றாலும், இல்லை என்றாலும்  அனைத்தும் ‘அவன்’ என்ற ஒன்றில் அடங்கி இருக்கிறது. அஃதாவது ஸ்தூலமாகவும், சூட்சமாகவும் இருக்கிறான் என்பதே பொருள். இஃது அவனது குணம் ஆகும்.

பலவித வேதங்களும், வேதாந்தங்களும் ஒரு பொருளையே குறிப்பிடுகின்றன்.(உ.ம். ப்ரம்மம், புருடன்)

இதை சிறிது விளக்க முற்படுவோம்.

நாடக்காட்சி ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. அதில் சில அழுகைக் காட்சிகள் வருகின்றன. மனதை உருக்குவதாக இருப்பின் நாமும் அழுகிறோம். எனில் காட்சி மற்றும் பிம்பம் என்ற வேறுபாடு அன்றி மனம் ஒரு நிலை கொள்கிறது.

சாந்தி மந்திர கூற்றுப்படி அவர் நம் இருவரையும் காக்கட்டும்.

மீண்டும் தொடர்வோம்.

கடவுட் கொள்கை – வாதங்கள் -2
கடவுட் கொள்கை – வாதங்கள் -1 

Loading

சமூக ஊடகங்கள்

ஆத்மாவின் ராகங்கள்

(இசைஞானி பற்றிய சிறு சிறு செய்திகள். அவர் மூச்சுவிடுவது முதற்கொண்டு அவரைப்பற்றி எழுத ஆட்கள் உண்டு. என்றாலும் இது குழந்தைகள் பொம்மை வைத்து சமையல் செய்வது போன்றது இது).

முதல் முறையாக 100 வயலின்கள் இசைக்கு பயன்படுத்தப்பட்டது தளபதி படத்தில். அப்போது ஒத்திகை நடந்து கொண்டிருந்தது. அனைவரும் வாசித்து கொண்டிருந்தனர்.

அப்போது இசை ஞானி சொன்னார் ‘ஏம்பா, அந்த 38வது வயலின் சரியா வாசிக்கல. அவரை சரியா வாசிக்கச் சொல்லுங்க’ 

Loading

சமூக ஊடகங்கள்

கடவுட் கொள்கை – வாதங்கள்-2

இக்கட்டுரையின் படி இரு பிரிவுகள் மட்டும் விவரிக்கப்படுகின்றன. கடவுள் மற்றும் கடவுள் மறுப்புக் கொள்கை.

இதில் முக்கியமாக உலகாதாயம் (சார்வாகம்) மட்டும் விவாதப் பொருளாகக் கொள்ளப்படுகிறது. ஏனைய பிரிவுகளான ஆசீவகம், பௌத்தம் மற்றும் சமணம் ஆகியவை விவாதத்திற்கு ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

இதுவும் தவிர வேத தரிசனங்களான நியாயம் ,வைசேடிகம் , சாங்கியம்,யோகம்,மீமாம்சை (பூர்வ மீமாம்சை),வேதாந்தம் (உத்தர மீமாம்சை) ஆகியவைகளைப் பற்றிய விவாதங்களும் இதில் இல்லை.

மனிதன் 1 : நீ யார்?
மனிதன் 2 : மனிதன்
மனிதன் 1 : நீ எந்த கொள்கையை உடையவன்.
மனிதன் 2 : கடவுள் மறுப்புக் கொள்கை என்பதே என் நோக்கம்.
மனிதன் 1 : எதை வைத்து இக் கொள்கையை கூறுகிறாய்.
மனிதன் 2 : கடவுள் யாவருக்கும் பொது தானே.
மனிதன் 1 : ஆமாம்.
மனிதன் 2 : அப்படி எனில் நீ கண்ட கடவுளை நானும் காண வேண்டும் தானே.
மனிதன் 1 : மௌனம்…
மனிதன் 2 : என்ன பதில் இல்லையா?
மனிதன் 1 : டெல்லி சென்றிருக்கிறாயா?
மனிதன் 2 : இல்லை.
மனிதன் 1 : நீ போகவே இல்லை. கண்ணால் கண்டதும் இல்லை. ஆனால் டெல்லி என்றொரு இடம் இருப்பதை எப்படி நம்புகிறாய்.
மனிதன் 2 : மௌனம்…
மனிதன் 1 : யோசித்து பதில் அளி. அவசரம் இல்லை.

*************************************************************
குழந்தை : என்ன அப்பா இந்த புத்தகம்.
தந்தை    : இது முப்பரிமாண புகைப்படங்கள் கொண்ட புத்தகம்.
குழந்தை : அப்படீன்னா,
தந்தை    : இந்த புகைப்படத்தை எல்லாம் உற்று கவனித்தால் ஒரு படம் தெரியும்.
குழந்தை : எப்படி
தந்தை    : இந்த படத்தை கண்ணுக்கு சிறிது தூரத்தில் வைத்துக் கொள். உற்று கவனி.
குழந்தை : சரி.
தந்தை    : என்ன தெரிகிறது?
குழந்தை : மேஜையும் அதில் பூச்செண்டும்.
தந்தை    : மிகச் சரி.
நண்பர்    : என்னடா ஒன்னும் தெரியல.
தந்தை    : நீதானட, கண்ணால் காண்பது மெய் என்று சொன்னாய். அப்புறம் ஏன் உனக்கு தெரியல.

கடவுட் கொள்கை – வாதங்கள்-1

இதன் தொடர்ச்சி இன்னும் சில நாட்களில்..

Loading

சமூக ஊடகங்கள்

கடவுட் கொள்கை – வாதங்கள்-1

தமிழ் இரண்டாம் பாடம்

மதிப்பெண்கள் – 10*1 = 10

கடவுள் கொள்கை குறித்து கட்டுரை ஒன்று வரைக.

முன்னுரை : கடவுள் கொள்கை குறித்த சில விஷயங்கள் இங்கு குறிக்கப் படுகின்றன.

நிகழ்வு/கதை –  1
முடித் திருத்தும் நிலையம்.
முடி திருத்துபவர் – கடவுள் இல்லை என்பதே என்கருத்து.
வாடிக்கையாளர் – ஏன்?
முடி திருத்துபவர் – ஏன் இத்தனை விஷயங்களையும் பார்த்து சும்மா இருக்கார்.
வாடிக்கையாளர் – மௌனம்.
முடி திருத்துபவர் –  உங்கள் மௌனமே கடவும் இல்லை என்பதை நிருபிக்கிறது.
வாடிக்கையாளர் – நான் ஒன்று கேட்கட்டுமா?
முடி திருத்துபவர் – சரி.
வாடிக்கையாளர் – இந்த ஊரில் முடி திருத்துபவரே இல்லை என நினைக்கிறேன்.
முடி திருத்துபவர் – எப்படி அதான் நான் இருக்கிறேனே.
வாடிக்கையாளர் – அப்படி எனில் ஏன் பல பேர் அடர்ந்த முடியோடும், தாடியோடும் அலைகிறார்கள்.

நிகழ்வு/கதை –  2
இராமகிருஷ்ண பரமஹம்சர் : வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார்.
பார்வையாளர் : கடவுள் இருக்கிறாரா?
இராமகிருஷ்ண பரமஹம்சர் : இருக்கிறார்.
பார்வையாளர் : அப்படி எனில் நான் எப்படி பார்ப்பது?
இராமகிருஷ்ண பரமஹம்சர் : சரி நீயார்?
பார்வையாளர் : நான் மருத்துவன்.
இராமகிருஷ்ண பரமஹம்சர் : சரிவா, அறுவை சிகிச்சை செய்ய செல்லலாம்.
பார்வையாளர் : அது எப்படி முடியும். அதற்கு படிக்க வேண்டும், பயிற்சி வேண்டும்.
இராமகிருஷ்ண பரமஹம்சர் : அறுவை சிகிச்சை செய்ய பயிற்சி வேண்டும் எனில், கடவுளை காணவும் பயிற்சி வேண்டும்.

இதன் தொடர்ச்சி இன்னும் சில நாட்களில்..

Loading

சமூக ஊடகங்கள்

2038ல் – எரிபொருள்கள்

2038ல் – எரிபொருள்கள்

(இது முழுவதும் கற்பனையே. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல.

இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)

1.
பெட்ரோல் விலை – இன்று காலை 11.00 மணி நிலவரம் – ரூ. 568/லி. அடுத்த விலை அறிவிப்பு 12.00 மணி செய்திகளில்.

2.
என்ன சார் எல்லா பெட்ரோல் பங்க்லேயும் கூட்டம் 2 கி.மிக்கு நிக்குது.
உங்களுக்கு தெரியாதா, பெட்ரோல் விலை அடுத்த அரை அவர்ல 0.13 காசு குறையப் போகுது.

3.
என்ன சார் பேப்பர்ல விசேசம்.
25 லி. பெட்ரோல் போட்டா 0.100கி வெங்காயம் இலவசமாம்.

4.
பேங்க் வாசலில்
பெட்ரோல் அடகு வைக்க எங்கள் கிளைகளை அணுகவும். 1லி. 511/- ரூ.

5.
அரசியல்வாதிகள் – மற்றவர்கள் கூறுவது போல் எங்களிடம் நேற்று ஒரு பேச்சும் இன்று ஒரு பேச்சும் இல்லை. பெட்ரோலிய நிறுவனங்களின் நஷ்டத்தைப் போக்க இன்று முதல் எரிபொருள் விலை ரூ.25 ஏறுகிறது.

Loading

சமூக ஊடகங்கள்

ஆத்மாவின் ராகங்கள்

(இசைஞானி பற்றிய சிறு சிறு செய்திகள். அவர் மூச்சுவிடுவது முதற்கொண்டு அவரைப்பற்றி எழுத ஆட்கள் உண்டு. என்றாலும் இது குழந்தைகள் பொம்மை வைத்து சமையல் செய்வது போன்றது இது).

எனது நண்பர் ஒரு படத் தயாரிப்பாளர்.

ஒரு முறை எனது நண்பர் ரிக்கார்டிங் தியேட்டருக்கு சென்றிருக்கிறார். அங்கிருந்த ஒலி எஞ்ஜினியர் இளைய ராஜா ஒரு பாடலை முடித்து விட்டு மிகவும் சந்தோஷமாக சென்றதாக கூறியிருக்கிறார்.

எனது நண்பர் அப்பாடலை ஒலிக்கச் சொல்லி இருக்கிறார். கேட்டவுடன் எனது நண்பரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்.

அப்பாடல் – என்னைத் தாலாட்ட வருவாளா…

Loading

சமூக ஊடகங்கள்

தொடரும் நினைவுகளும் பாடலும்

ஆகாய கங்கை – இந்த பாடலை எத்தனை முறை கேட்டிருப்பேன் என்று தெரியவில்லை. ஆனாலும் அதன் தாக்கம் இன்று வரை தீர வில்லை.

படம் : தர்ம யுத்தம்(தலைவர் படம்).இசை: இசை ஞானி. எனக்கு மிகவும் விருப்பமான மலேஷியா வாசுதேவன்.(கணவனை  மிகவும் விரும்பும் மனைவியின் ஆரத்தழுவுதல் -அந்த குரலுக்கு இன்னும் உருவகம் தேடிக் கொண்டிருக்கிறேன்).

மெல்லியதாய் ஆரம்பிக்கிறது பாடல்.

ஆண் :  துணையை விரும்புவதாக சொல்கிறான்.
பெண் :  தேடிய ராமனை கண்டதாக உரைக்கிறாள்.

ஆண்        :  ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி பொன்மான் விழி தேடி
மேடை கட்டி மேளம் தட்டி பாடுதே மங்களம் நாடுதே சங்கமம்

பெண்       :  குங்குமத் தேரில் நான் தேடிய தேவன் சீதா புகழ் ராமன்
தாளம் தொட்டு ராகம் தொட்டு பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம்

நான் என்றும் தனித்து இல்லை. என் வாழ்வு உன் துணையோடுதான் என்கிறாள் துணை.

மிக அழகாக தன் காதலைச் சொல்கிறாள்.

பெண் :
தேவை யாவும் ஹே ஹே ஹே
தீர்ந்த பின்னும் ஓஓஒஒ
பூவை நெஞ்சில் நாணம் போராடும்

ஆண் நாசுக்காக மறுத்து பதில் சொல்கிறான்.
ஊர்கூடியே உறவானதும்
தருவேன் பலநூறு

பல பாடல்கள் நினைவில் நீங்காமல் இருந்தாலும், இது முக்கிய இடத்தில்.
காலம் கடந்து  இருப்பவை பொருள்கள் மட்டும் அல்ல. பாடல்களும் அதன் தாக்கங்களும்.

Loading

சமூக ஊடகங்கள்

ஆத்மாவின் ராகங்கள்

(இசைஞானி பற்றிய சிறு சிறு செய்திகள். அவர் மூச்சுவிடுவது முதற்கொண்டு அவரைப்பற்றி எழுத ஆட்கள் உண்டு. என்றாலும் இது குழந்தைகள் பொம்மை வைத்து சமையல் செய்வது போன்றது இது).

ஒரு முறை இசைஞானி ஜப்பான் சென்றிருந்தார். அப்போது ஒரு இசையை கேட்க நேர்ந்தது. அந்த வாத்தியத்தை பற்றியும், அதை வாசிக்கும் கலைஞரைப் பற்றியும் கேட்டறிந்தார். அவரை சந்தித்து சென்னை வரும் போது தன்னை சந்திக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

அந்த கலைஞர் சென்னை வந்த போது 5 நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து, அந்த கருவியை 15 நாட்களில் வாசிக்கும் திறமையை பெற்றார்.

அந்த கருவியை வாசிக்க முழுமையாக 2 ஆண்டுகள்  ஆகும்.

Loading

சமூக ஊடகங்கள்

வினாயகர் சிலையை கரைப்பு ஏன்?

வினாயகர் சிலையை கரைப்பு ஏன்?

ஆன்மீகம் – முன்பெல்லாம் பெரும்பாலான சிலைகள் குளம் சார்ந்த பகுதியில் இருந்து எடுக்கப்பட்டு களிமண்ணால் செய்யப்பட்டன. வேதிப் பொருள்களால் செய்யப்பட்டவை அல்ல.  ப்ரம்மத்திலிந்து தோன்றியவை மீண்டும் ப்ரம்மத்தில் என்பதே அடிப்படை.

அறிவியல் :
1. வினாயகர் சிலையுடன் சேர்த்து பூக்கள் மற்ற பொருள்களையும் குளத்தில் இடுவார்கள். அவைகள் மீன்களுக்கு உணவாகும். மீன்கள் இனப் பெருக்க காலம் மற்றும் வளர்ச்சி அடையும் காலம் இம் மாதம். எனவே பொருள்கள் குளத்தில் இடப்படும்.

2. மீண்டும் குளத்தில் அவை சேர்க்கப்படுவதால் மண் அரிப்பு தடுக்கப்படும்.

மற்றவை :
1. அந்த அந்த பகுதி மக்கள் சிறு வியாபாரம் செய்து பலன் அடைவார்கள்.
2. பால கங்காதர திலகர் சுதந்திர போராட்டத்தில் மக்களை ஒன்று சேர்ப்பதற்காக இவ் விழாவினை சிறப்பாக கொண்டாடத் துவங்கினார்.

Loading

சமூக ஊடகங்கள்

குடிப் பிறப்பு

நான்மணிக்கடிகை  – நான்கு விஷயங்களை சொல்லும். அவை அனைத்தும் ஒன்று சேர்ந்து மிக நுட்பமானப் பொருளைத் தரும். நான்கு வித மலர்கள் ஒரு மாலை போல்.

கள்ளி வயிற்று இன் அகில் பிறக்கும்;   மான் வயிற்று ஒள் அரிதாரம் பிறக்கும்; பெருங் கடலுள் பல் விலைய முத்தும் பிறக்கும்;
அறிவார் யார், நல் ஆள் பிறக்கும் குடி?

பொருள் அனைவரும் அறிந்ததே.

கள்ளி போனற செடியில் வாசனை மிகுந்த அகில் பிறக்கும். வாசனை திரவியங்கள் மானின் வயிற்றில் இருந்து பிறக்கும். விலை உயர்ந்த முத்துக்கள் கடலில் இருந்து கிடைக்கும்.நல்ல மனிதர்களின் குடிப் பிறப்பினை எவர் அறியக் கூடும்.

எனவே மனித வாழ்வே மகத்துவம், குடிப் பிறப்பு அன்று.

Loading

சமூக ஊடகங்கள்

மோட்டார் வாகனம் – சில குறிப்புகள்.

1.எரிபொருளைபாதி அளவில் நிரப்புங்கள். (50ரூ, 100 ரூ என நிரப்ப வேண்டாம்.)
Please fill fuel at least half tank. (Do not fill for Rs. 50 or Rs.100)
2.காற்றினைசரியான அளவில் நிரப்பவும்.(முன்பக்கம் – 20, பின் பக்கம் – 30, காரணம்25,35 எனில் டயருக்கு எதுவும் ஆகாது. ஆனால்முதுகுத்தண்டில் வலி வரும்.)
Air pressure for two wheeler – front – 20, back – 30 (with pillion also). When you ride with more than this, it will not affect the tyre.  It will affect our spinal cord .
3. 1500 கி.மி மேல் ஒருமுறைஆயில் மாற்றவும். (மிக அதிக அளவு– 2000 கி.மி)
Change the oil for every 1500 K.M(Max – 2000 K.M)
4. 5000 கி.மிக்கு ஒருமுறை ஆயில்பில்டரை சுத்தப் படுத்தவும்.
Clean the oil filter for every 5000 K.M
5. ப்ரேக்சரி இல்லாமல் வாகனத்தை இயக்காதீர்கள்.
Do not ride your vehicle without break.
6. சிக்னல்மிக அருகினில் சென்று ப்ரேக் செய்யாதீர்கள். எரிபொருள் நஷ்டம் ஏற்படும்.
Do not ride your vehicle with high speed and stop near the signal. This will make energy/fuel loss.
7. குறிப்பிட்டவேகத்தில் எல்லா நேரங்களிலும் இயக்கவும். (.ம்எல்லா நேரங்களிலும்– 50 கி.மி)
Ride your vehicle with constant speed at all times (Ex. 50 K.M)
8. எரிபொருளைவிடுமுறை நாட்களின் இறுதியில் நிரப்பிவிடவும்.
Fill the fuel during the week ends/holidays.
9. முடிந்தவரைமற்றவர்களுக்கு வாகனத்தை கடன் கொடுப்பதை தவிர்க்கவும்.
Kindly avoid to give your vehicle to your friends.
10. வாகனத்திற்கானஅனைத்து நகல்களையும் எப்போதும வாகனத்தில் வைத்திருங்கள்.
Keep all your photo copy of your documents (RC book, insurance, driving license and pollution certificate etc.,)
11. எப்பொழுதும்ஹெல்மெட் அணிந்து செல்லவும்.
Always wear helmet. (Rule or not)
10. அதைமிகவும் உரிமையான நண்பனாக நேசியுங்கள்.
Treat your vehicle as your friend.

Loading

சமூக ஊடகங்கள்

2038 – மின்னணு மூலம் விற்பனை

மின்னணு மூலம் விற்பனை –    e- sale  

இது முழுவதும் கற்பனையே. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல.

இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.

1. நட்சத்திர ஆமைகள் மற்றும் நாய்கள் விற்பனைக்கு.

2. சார், என் பொண்டாட்டிய விக்க முடியுமா சார்?

3. வயதானவர்களை இடம் மாற்றி விற்க, இங்கே அணுகவும். 50 முதல் 60 வயதான பெண்களுக்கு முன்னுரிமை அளித்து விற்றுத்தருகிறோம்.

4. புளுட்டோ கிரகத்தில் இடம் விற்பனைக்கு.

5. வெங்காயம் என்ற சொல்லுக்கு, நாங்கள் காப்புரிமை பெற்றிருக்கிறோம். அதை நீங்கள் 10 முறை பயன்படுத்த எங்களிடம் அணுகவும். 

Loading

சமூக ஊடகங்கள்

2038 – இயந்திர மனிதன்,செயற்கை அறிவு, நரம்புகளின் வலைப்பின்னல்

இது முழுவதும் கற்பனையே. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல.

இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.

1.
அப்பா ரோபோ : என்னடா, 100 மில்லியன் pages ஒரு செகன்டபடிக்கிற. 2*2 = 4ன்னு தெரியாதா?
2.
 ரோபோ  1 : என்னட்ராபிக்டா இது. இதுக்கு முதல்லஒரு ப்ரொக்ராம் எழுதனும்.
3.
காதலித்தபெண் கைவிட்டதால் ஆண் ரோபோ தற்கொலை.
4.
  ரோபோ  gen xyz – எங்கவீட்ட ஒரு பழைய மாடல்ரோபோ இருக்கு. 2013 மாடல் சார். அத  mercy killing  பண்ண என்ன procedure?
5.
தொகுப்பாளர்  ரோபோ  – யார்பேசிறீங்க.
மனிதன் :  நான் 1993ல்இருந்து உங்க குரல கேக்கிறேன். நீங்க, 12 May 1994 வியாழக்கிழமை கட்டிகிட்டு வந்த பச்ச கலர்பூப் போட்ட சுடிதாரும் சின்னபொட்டும் சூப்பர்ங்க. 14 May 1995 ம் தேதி ரிலீஸ்  ஆன மோக முள் படத்திலிருந்து பாட்டு போடுங்க.
ரோபோ X : மனுஷங்க data  பாத்துமயக்கம் போட்டுடுத்து சார்.
6.
  ரோபோ 1 : நமக்காவது டெய்லி 50 யூனிட் கரண்ட் வேணும். அவனுக்கு 1யூனிட் போதும். அவன்ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறான்.
7
  ரோபோ 1 : ஏன்டா ஓடிவர?
  ரோபோ 2 : என் பொண்டாட்டி ரொம்பகொடும காரியா இருக்காடா. டெய்லி1 யூனிட் கரண்ட் கூட குடுக்கமாட்டேங்கிறாடா?

Loading

சமூக ஊடகங்கள்
error: Content is protected !!