படைப்புகளின் வழியே பயணம்

நினைவுகளை திரும்பி பார்க்க வைத்த தீபக்கிற்கு நன்றி.

எனக்கான பயணம் பல மனிதர்களால் பக்குவப்படுத்தப் பட்டிருக்கிறது என்பதே நிஜம்.

எனது 8ம் வகுப்பு என்று நினைவுபாரதி பற்றிய கட்டுரையில்என்று புதுக்கவிதை பாடி இருப்பார் என்று எழுதி இருந்தேன். எனது ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.

அந்த கால கட்டங்களில் பட்டினத்தார் பாடல்களை எனது தாத்தா கற்று தந்து இருந்தார்கள்.

எனது 10ம் வகுப்பில் பாடம் கற்றுத் தந்த திரு. ரங்க ராஜன் அவர்கள் ஒருமுறை பிரபந்தம் ஓதினார்கள். (பச்சைமா மலை போல் மேனி..)

எனது 11 மற்றும 12 வகுப்புகளில் கம்பன் கவி இசைச் செல்வர் புலவர் திரு இராம பத்திரன் அவர்கள் தமிழ் குறித்து மிக அழகாக விளக்கங்களையும், வழிவங்களையும் கற்றுத் தந்தார்கள்.

எனது கல்லூரிக் காலம் என்னை மிகவும் செதுக்கியது.
மதிய இடைவேளைக்குப் பிறகு, கரும்பலகையில் நிச்சயமாக ஒரு கவிதை இடம் பெற்றிருக்கும். அப்போது எழுதப்பட்டவை கவிதை அல்ல என்றும் ஒரு கவிதைக்கான கட்டுமான அமைப்புகள் இல்லை என்றும் இப்போது தோன்றுகிறது.

ஒரு முறை திரு. வீரமணி அவர்கள் எங்கள் கல்லூரிஆண்டு விழாவிற்கு வந்திருந்தார்கள். அப்போது கல்லூரி புத்தகத்தில் எனது கவிதை இடம் பெற்றிருந்தது. (தன் எதிர் காலம் கணிக்கத் தெரியா ஜோதிடன் மற்றவர்களுக்காக மரத்தடியில்). அவர்கள் அக் கவிதையினை மிகவும் பாராட்டினார்கள்.

தோழிஉன்னுடைய கவிதைகளில் நிறைய பிழைகள் உள்ளன. அதுமட்டும் அல்ல அதில் செறிவு இல்லை. பக்தி இலக்கியம் படித்துப்பார். புரியும். (இது இன்று வரை தொடர்கிறது)

சுமார் 10 வருட காலம் படைப்பு என்று ஒருவரி கூட எழுதாமல், படித்தல் மட்டும் தொடந்தது
உத்தேச வாசிப்புகள்
அசோகமித்திரன்,இந்திரா பார்த்தசாரதி,எஸ். வைத்தீஸ்வரன் எஸ்.ராமகிருஷ்ணன்((பெரும்பாலான படைப்புகள்)) .நா.சு,கரிச்சான் குஞ்சு, கலாப்ரியா,கல்யாண்ஜி, கி ராஜநாராயணன், கு. அழகிரிசாமி கு..ரா, சா.கந்தசாமி, சி.சு. செல்லப்பா சுஜாதா சுந்தர ராமசாமி,ஜெயகாந்தன்,ஞானக்கூத்தன்,தி. ஜானகிராமன்,தேவதச்சன்,.பிச்சமூர்த்தி, நகுலன்,பிரபஞ்சன் பிரமிள்,புதுமைப்பித்தன்,மகாகவி பாரதியார் மனுஷ்யபுத்திரன்,மாலன்,ராஜ மார்த்தாண்டன்,,லா.. ராமாமிருதம்((பெரும்பாலான படைப்புகள்))வண்ணதாசன் வண்ணநிலவன் வல்லிக்கண்ணன் விக்ரமாதித்யன் நம்பி ,வெங்கட் சாமினாதன், பாலகுமாரன்((பெரும்பாலான படைப்புகள்)), இந்திரா சௌந்தர்ராஜன், ராஜேஷ் குமார், ராஜேந்திர குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா மற்றும் பலர்
மனைவி : உங்களுக்கு கவிதை எழுத தெரியுமா?
சுந்தர்: சிறிதளவு எழுதுவேன்.
மனைவி : உங்கள் கவிதைகளை தாருங்கள், நான் பத்திரிக்கைகளுக்கு அனுப்புகிறேன்.
எனது தோழன் மற்றும் உறவினர் சரவணன் : அண்ணே, நீங்க கவிதை எல்லாம் நல்லா எழுதுறீங்க, இதை ஒரு ப்ளாக் ஆரம்பித்து அதில் போடலாம் அண்ணே. வேணும்ணா, புகைப் படமும் சேத்துக்குங்க.

எழுத ஆரம்பித்த பின் பார்வையாளர்கள் சுமார் 3000. CBCக்கு பின் சுமார் 15000
இங்கு (CBC) பலருடைய எழுத்துக்களைக்(தமிழ் மட்டும்) கண்டு பிரமித்து போயிருக்கிறேன். பிரசன்னா, மதி, ரவி PS , முத்து, கோபால கிருஷ்ணன், கணேஷ், தீபாஐயர், காயு வெங்கட்வெகு சிலரை மட்டும் குறிப்பிட்டிருக்கிறேன்.

இவை எல்லாவற்றிற்கும் மேல் எனது குருநாதருக்கு மிகவும் கடமைப்பட்டவன்


எனக்கான எல்லாப் படைப்புகளும் இன்னும் நிறைய கற்க வேண்டும் என்ற உந்துதலையே ஏற்படுத்துகின்றன. அதனால்தான் படைப்புகளின் வழியே பயணம் தொடர்கிறது.

புகைப்பட உதவி : SLKumar

Loading

சமூக ஊடகங்கள்

நிறைவு

ஒவ்வொரு பளபளப்பிற்கும்
பின்னும் இருக்கின்றன
பல பசி நிறைந்த பட்டினிகள்


Click by : Harish Kumar

Loading

சமூக ஊடகங்கள்

முன் குறிப்புகள்

மகள் விரும்பும்
காகித மலர்களில்
தெரிகிறது
வாழ்வின் வாசனைகள்.









புகைப்பட உதவி :  Swathika Senthil

Loading

சமூக ஊடகங்கள்

பூத்தல் – நினைவுகளுக்கு மட்டும்

என்ன செய்து கொண்டிருக்கின்றன
நினைவுகள்
ஒவ்வொரு வினாடியும்
தன்னை இழத்தல் தவிர.











புகைப்பட உதவி : Karthik Pasupathi


Loading

சமூக ஊடகங்கள்

வரவேற்றலில் மரணம்

கிளைகளில் இருந்து 
உதிரத் துவங்கும்
பூக்களின் அடுத்த நிலை
என்னவாக இருக்க கூடும்?








புகைப்பட உதவி : R.s.s.K Clicks

Loading

சமூக ஊடகங்கள்

நகர மறுக்கும் நினைவுகள் – 11 – பற்றுக் கணக்கு

சொந்த ஊர் பற்றி நினைத்தாலே சுகம் எனில் அதைப்பற்றி எழுத வேண்டும் எனில்
மற்ற ஊர்களுக்கு இல்லாத ஒரு பெருமை மாயூரத்திற்கு உண்டு. அதுஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகுமாஎன்பதே. இது மாயூர மனிதர்களுக்கே உண்டான கர்வம். காவேரி தண்ணீர், கும்ப கோணம் வெத்திலை, புகையிலை மற்றும் மிகச் சிறந்த அக்கப்போர்கள்
அப்போதுஎனக்கு சிறுவயது.(இப்போது மட்டும் என்ன. இப்போதும் அப்படித்தான்)
தாத்தா ஸ்ரீராம் சைக்கிள் கம்பெனியில் கணக்குபிள்ளையாக  வேலை பார்த்து வந்தார். சிறு வயதில் இருந்தே அவருக்கு மாலை டிபன் உண்ணும் பழக்கம் உண்டு.
தாத்தாவுக்கு மயூரா லாட்ஜில் கணக்கு உண்டு. தினமும் சாப்பிட்டு விட்டு அவரே தனது நோட்டில் எழுதி விடுவார்கள். மாதம் பிறந்ததும் கணக்கு செட்டில் ஆகி விடும்.
அப்போதுமணிகூண்டுபக்கத்தில் வரும் போது சாம்பார் வாசனை வரும்.(சுமார் 200 மீட்டர் தூரம்). பெரும் வியாதிஸ்தர்கள் உள்ளே வரக்கூடாதுஎன்று பலகை வேறு
இன்னைக்குசாயங்காலம் பூரி சாப்பிட்டேன். நல்லா இருந்துது. நாளைக்கு உன்னையும் அழச்சிகிட்டு போரேன். இதழ்கள் புன்னகைக்கும்தும்பைப்பூவினைப்போன்ற ஒரு புன் சிரிப்பு. அப்பா எத்தனை பளீர்
ஆயி (தற்போது வழக்கு ஒழிந்து கொண்டிருக்கும் ஒரு அருமையான சொல்அம்மா என்ற பதத்தில் வரும் பாட்டி)
ஆயி : உங்களுக்கு இதே வேல, புள்ளைகள் கிட்ட இத வந்து சொல்லிகிட்டு.
யாரும் அற்ற ஒரு மதிய வேளையில் தாத்தா இறந்து போனார்கள்.
அவருக்குப் பின்  அவருடைய பெட்டியினை(எத்தனை பொக்கிஷம்) திறந்தோம். ஒரு சில பேப்பர்கள், சில பேனாக்கள் இத்யாதிகள். கூடவே மயூரா லாட்ஜ் கணக்கு பேப்பர்.
அன்றைய தேதியில் ரூ 80 பாக்கி இருந்தது.
ஒரு மாலைப் பொழுதின் பின்   பொழுதினில் நானும் எனது தந்தையும் மயூரா லாட்ஜ் சென்றோம்.
கல்லாவில்ஒரு அழகாக ஒரு மனிதர். வெள்ளை சட்டை, விபூதி மற்றும் குங்குமம்.( அப்பா எத்தனை அழகு)
முதலாளி: என்ன வேணும்?
அப்பாநான் தங்கவேல் பையன். அப்பா தவறிட்டாங்க. அவங்க கணக்கு எழுதி வைத்திருந்தார்கள். ரூ 80 பாக்கி இருக்கிறது. அத குடுக்க வந்தோம்.
தீர்க்கமான ஒரு பார்வை. வினாடி மௌனம்.
முதலாளிஅவர் எனது நீண்ட கால வாடிக்கையாளர். அதோட மட்டும் இல்ல அவர் எனது நண்பரும் கூட. மீக நீண்ட நாள் பழக்கம் உண்டு. இன்னைக்கு வரைக்கும் அவர் கணக்கில் தவறே வந்தது இல்லை. அந்த நல்ல மனிதருக்காக நானே அந்த செலவை ஏத்துக்கிறேன். நீங்க கொடுக்க வேண்டாம்.
உண்ட பிறகு வீசி எறியும் உணவுப் பண்டங்களின் உறைகளில் சில உணவுத் துகள்கள் ஒட்டியிருக்கும். அப்படித்தான் காலம் வீசி எறிந்த நிகழ்வுகளில் இன்னும் நினைவுகள் ஒட்டி இருக்கின்றன.

புகைப்பட உதவி :  Mahendiran Thiru

Loading

சமூக ஊடகங்கள்

ஆற்றுப்படுதல்

நட்சத்திரங்களுக்கு
உறவில்லை
தன்னைத் தவிர.














புகைப்பட உதவி : Vinod VV

Loading

சமூக ஊடகங்கள்

ஈர்ப்பு

உதிர்ந்த உடல் மீது
எதைத் தேட 
முற்படுகின்றன ஈக்கள்?









புகைப்பட ஆக்கம் :  SLKumar

Loading

சமூக ஊடகங்கள்

கானல் காட்சிகள்


அறையில் எழிலினை
எவரும் அறியக்கூடும்.
கலைந்த புத்தகங்கள்,
கசங்கிய ஆடைகள்,
புகை படிந்த ஜன்னல்கள்,
உதிர்ந்த சில சாம்பல்கள்,
முயக்கம் முன்னிருத்திய வீச்சங்கள்,
காலி மதுக் கோப்பைகள்,
அங்கொன்றும் இங்கொன்றுமாய் பீடித்துளிகள்,
பெரும் பசியினை மறுதலிக்கையில்
வாடா சாப்டஎன்ற நண்பனின் அழைப்புகள்,
பின் தொடரும் குளியலறை அழுகைகள்,
கள் வெறி கொள்ளும் இலக்கிய பேச்சுக்கள்
இப்படியாகத்தான் கழிகிறது
இன்றைய இருப்பும்.
பிறிதொரு நாளில் தங்குபவன்
இருப்பும் இப்படியாகவே இருக்கலாம்.

Click by : R.s.s.K Clicks

Loading

சமூக ஊடகங்கள்

விதியின் புனைதல்


எல்லா கனமில்லா பொருள்களும்
உனக்கானவையாக இருக்கின்றன.
எல்லா கனத்த நினைவுகளுக்கும்
எனக்கானவையாக இருக்கின்றன.

உனக்கான பொருள்கள்
கலைந்து கிடக்கின்றன.
கலையாமல் இருக்கின்றன
என் நினைவுகள்.
யாருமற்ற பொழுதுகளில்
இப்புகைப்படம் பார்த்து
நினைகளைக் கோர்ப்பாய்.
அந்த நாளில் நினைவுகளும்
இன்றைக்கு பத்திரமாய் என்னிடம்.

Click by : Swathika. Photo : Senthil Tiruvarasan and Samyuktha. 

Loading

சமூக ஊடகங்கள்

வழிப்போக்கன்

எல்லாம் கடந்தபின்னும்
எஞ்சி இருக்கும்
எச்சத்தில் கழிகிறது வாழ்வு.












Click by : R.s.s.KClicks

Loading

சமூக ஊடகங்கள்

உயிரின் மொழி

உயிரின் மொழி பேசி
மழலை மொழி பேசி,
பிள்ளை மொழி பேசி,
கனவு மொழி பேசி,
காதல் மொழி பேசி,
வியாபார மொழி பேசி,
மூன்றாம் தலைமுறையுடன் மொழி பேசி,
பேசிப் பேசி பின்
பேச்சு அற்ற மௌனமாகி
பிணமாகி போகையில்
நிறைவு பெறுகிறது அழகியல் வாழ்வு.

Click by : SL Kumar

Loading

சமூக ஊடகங்கள்

நகர மறுக்கும் நினைவுகள் – 10 – மாலைப் பொழுதின் மயக்கத்திலே

பல ஆயிரம் முறை கேட்ட பிறகும் மாறாமல் இருக்கிறது அந்தக் குரலில் உள் ஒலிந்திருக்கும் வலிகள், அழுத்தங்கள், காயங்கள், சொல்லொண்ணா துயரங்கள்.
பெண்ணுக்கான மன வலிகள் எப்போழுதும் தனித்தே இருக்கின்றன.
ஒரு அழகிய வீணையின் இசையுடன் பாடல் ஆரம்பமாகிறது.
கண்ணதாசன்வரிகள் ஆரம்பம் ஆகின்றன.
மாலைப் பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு கண்டேன் தோழி (மாலைப்பொழுதின்)
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை
காரணம் ஏன் தோழி
மாலைப் பொழுது பெரும்பாலும் மயக்கம் தருவதாகவே இருக்கும். நாளுக்கான முடிவின் தொடக்கம் அல்லவா. அப்போது கனவு காணுவதாக தோழியிடம் உரைக்கிறாள். அச்சம், நாணம் போன்ற குணங்கள் சேர்ந்து தன் மனதில் தன்மையை மாற்றி வார்த்தைகள் அற்றுச் செய்து விடுகிறதாக உரைக்கிறாள்.
இன்பம் சில நாள் துன்பம் சில நாள்
என்றவர்யார் தோழி
இன்பம் கனவில் துன்பம் எதிரில்
காண்பதுஏன் தோழி
இன்பமும்துன்பமும்கலந்தே வாழ்வு. அதைப் போன்றே வாழ்வு அமைகிறது என்று என்னிடன் உரைத்தவர் யார்?. கவிஞனின் கற்பனை இங்கு மிக அழகாக விளக்க்கப் பட்டிருக்கிறது. இன்பம் நிஜமற்ற கனவிலும், துன்பம் நிதர்சமான உண்மையிலும் தான் காண்பதாக உரைக்கிறாள்.
மணம் முடித்தவர் போல் அருகினிலேஓர்
வடிவு கண்டேன் தோழி
மங்கை என் கையில் குங்குமம் தந்தார்
மாலையிட்டார் தோழி
வழி மறந்தே நான் வந்தவர் நெஞ்சில்
சாய்ந்துவிட்டேன்தோழி
அவர் மறவேன் மறவேன் என்றார் உடனே
மறந்து விட்டார் தோழி
தனக்கான காந்தர்வ விவாகம்நடந்து விட்டதை தெரிவுக்கிறாள். அவர் என்னை மணம் முடித்தது போல் அவரின் வடிவம் கண்டேன். மங்கையான என்னிடம் குங்குமம் தந்தார், மாலையிட்டார்.இவைகள் பெரும்பாலும் கணவர்கள் செய்யும் காரியம் என்பதால் அதைக் குறிப்பிடுகிறாள். இதனால் நான் செல்லும் (வாழ்க்கை) வழியை மறந்துவிட்டேன்அவரிடம்அடைக்கலம்ஆனேன். அப்போது மறவேன் மறவேன்  என்று கூறி மறைந்து விட்டார் என்கிறாள். (வார்த்தைகள் இரு முறை கூறப்படும் போது அது சத்தியம் ஆகிறது, இவ்வாறு சத்யம் செய்து மறந்து விட்டதைக் குறிப்பிடுகிறாள் தலைவி)
கனவில் வந்தவர் யாரெனக் கேட்டேன்
கணவர் என்றார் தோழி
கணவர் என்றால்அவர்
கனவு முடிந்ததும்
பிரிந்ததுஏன் தோழி
இளமையெல்லாம் வெறும் கனவு மயம்
இதில் மறைந்தது சில காலம்
தெளிவும்அறியாமல்முடிவும்தெரியாமல்
மயங்குதுஎதிர் காலம்
மயங்குதுஎதிர் காலம் ((துக்கடா)இசைஞானிக்கு பிடித்த வரிகள்
இப்படி கனவு வாழ்வில் வந்தது யார் என்று கேட்கிறாள். அனைத்து பதில்களும் உரைக்கப் படுகின்றன.
கொஞ்சு தமிழின் அழகியல் விளையாடத் துவங்குகிறது. இளைமை வெறும் கனவாகவே இருக்கிறது அதுவும் மறைந்திருக்கிறது. அறிவு தெளிவு அறியாமல் இருக்கிறது. முடிவும் எடுக்கவும் முடியாமல் இருக்கிறது. இவ்வாறான நிலையில் எதிர் காலம் மயக்கம் தருவதாக இருக்கிறது என்பதை உரைக்கிறாள்.
இடை இடையே வரும் வரும் இசை அந்த வலிகளை இன்னும் அதிகப்படுத்துகிறது.
(தத்துவார்தகமாக பார்த்தால் ஜீவாத்மா, பரமார்த்தாவை அடையத் துடித்தலை வெளிப்படுத்தும் வார்த்தைகளாக கொள்ளலாம்)
இப்பாடலைக் கேட்டு ஈரத் தலையனையுடன் உறங்கிய பல பெண்களை எனக்குத் தெரியும்.

யாருமற்றஇரவில் தனிமையில் இப்பாடலை ஒருமுறை கேட்டுப்பாருங்கள். மனதில் வலிகள் எல்லாம் ஒரு பாடலாக உருப்பெற்றிருப்பதை அறியலாம்.
இப்பாடல்புகைவண்டிப் பயணத்தில்யாசம் விரும்பி கேட்டுச் செல்லும் கண்கள் அற்றவனில் பாத்திரத்தில் உருளும் ஒற்றை நாணயமாய் வரிகள் உறுத்துவதை உணரமுடியும்.
ஏனெனில்வலிகள் அனைவருக்கும் பொதுவானவை தானே.

Loading

சமூக ஊடகங்கள்

வான் விளிம்பு

தேக மாற்றத்தில்
தேய்ந்து போகின்றன
தேவைகளும் நினைவுகளும்.













Click by : Karthik Pasupathy

Loading

சமூக ஊடகங்கள்

வாழ்வின் விளிம்பு

ஒவ்வொரு பயணமும்
இழுத்துச் செல்கிறது
சில மனிதர்களையும்
பல நினைவுகளையும்.







Click by : R.s.s.K clicks

Loading

சமூக ஊடகங்கள்

கிலுப்தம்

மனதினைச் சொல்லி
பிரயோஜனமில்லை
உடல் இருக்கும் வரை.












* கிலுப்தம்நிச்சயமாக

Click by : R.s.s.K Clicks

Loading

சமூக ஊடகங்கள்

எச்சங்கள்

நினைவுகள் கடந்த பின்னும்
மிச்சமிருக்கின்றன 
எச்சங்கள்














Click by : HarishKumar

Loading

சமூக ஊடகங்கள்

பூரணம்

அழகிய ஓவியம் ஒன்றை
வரையத் துவங்குகிறேன்.
எழுதப்படா பக்கங்களை
எடுத்து வந்து என்னிடம் தந்து
ஓவியம் எப்படி என்கிறாய்‘.
மகளாகிய உன்னால்
ஒவியங்கள் முழுமை பெறுகின்றன.








Click by : R.s.s.K clicks

Loading

சமூக ஊடகங்கள்

அலையும் அலைகள்


நம் எதிரே கடல் அலைகள்,
நம்முள் மன அலைகள்.
நம் பிரிவிற்கான காரணங்களை அடுக்குகிறாய்.
கடைசியான கவிதைக் கேட்கிறாய்.
அஸ்தமனத்திற்கான பிறிதொரு விடியல்
எப்பொழுது நிகழும் என்கிறேன்‘.
மௌனித்து என் பரிசுப் பொருள்களை
எல்லாம் கொடுத்து
உனக்கானப் பொருள்களை
எல்லாம் எடுத்துச் செல்கிறாய்.
அனைத்தையும் கொடுத்தப் பிறகும்
எச்சங்களாய் மீந்து இருக்கும்
நினைவுகளை என்ன செய்வாய்.

Click by : Chithiram Photography 

Loading

சமூக ஊடகங்கள்

என்னவெனில்

கடக்கும்காலங்களில்
கடந்தகாலத்தைத்தேடும்
கனவுவாழ்க்கை.












Click by : R.s.s.K Clicks

Loading

சமூக ஊடகங்கள்