தாடகை

‘எங்கு சென்றாய் என்னை
தவிர்த்தும் தன்னித்தும் விட்டு’
என்கிறேன்.
தவிர்த்தல் உன்நிலை அன்றி
எனதில்லை என்கிறாய்.
வார்த்தைகள் ரசவாதம் கொள்கின்றன.
உதடுகள் முணுமுணுக் தொடங்குகின்றன

அங்கம் ஹரே:புனகபூஷன
      மாச்ரயந்தீ *

எங்கிருந்தோ வருகிறது
நெருப்பின் கங்குகள்
‘செட்டியார் கடைக்குப் போய்
நோட்ல எழுதிட்டு
சேமியா வாங்கிகிட்டு வர சொல்லு உங்கபன’.

*ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்

Loading

சமூக ஊடகங்கள்

லீலாவினோதினி

உணவுப் பரிமாற்றத்தில்
நடக்கிறது ஒரு உணர்வு பரிமாறம்.
‘ஒங்க அப்பன் பாட்டு எழுதறேன்னு
திரிறான். ஒழுங்கா திங்கச் சொல்லு’
என்கிறாள் உன் அன்னை.
‘அப்படீன்னா பாபா ப்ளாக்ஷீப் கூட தெரியுமா’
என்கிறாய்.
தொட்டுவிடம் தூரத்தில் சொர்க்கம்.

Loading

சமூக ஊடகங்கள்

குருஷேத்ரம்

திருமணங்கள் சொர்கத்தில்
நிச்சயிக்கப் பட்டாலும்,
பிரிவுகள் மட்டும்
பூமியில் நிச்சயிக்கப்படுகின்றன.

Loading

சமூக ஊடகங்கள்

ப்ரேமரூபா

யாருமற்ற இரவில்
வெற்றுப் புள்ளியாய் நீ.
மனம் காட்டி மோனமிட்டிருக்கிறாய்.
உன் கண்ணசைப்பில்
கைக்குழந்தையாகிறேன்.
என் காதலைச் சொல்ல துணிகிறேன்.
‘ஸ்துலத்தையா, சூட்சமத்தையா’ என்கிறய்.
விழி அருவி மடைதாண்டி
பெரும் சப்தத்தோடு விரைந்து செல்கிறது.
இராவணன் இராமனான பொழுதினை ஒத்து
தன்னை இழத்தல் நிகழ்கிறது.
ஊழிப் பெருங்காற்றின் ஓலிகள் என் காதினில்.
“கிழத்துக்கு இழுக்குது,
இருக்கிற காசை அழிக்கிறத்துக்குன்னு வந்திருக்கிறான்
செத்தாலும் நிம்மதியாய் இருப்பேன்,
போய் டாக்டர கூட்டிகிட்டு வாடா”.

Loading

சமூக ஊடகங்கள்

உபாதி

நீண்ட நாட்களுக்குப் பின்
கடவுளுடன் நெருக்கம்.
வாழ்விற்கான மாறுதலுக்கு வழி என்ன என்றேன்.
மறுதலித்தலே வாழ்வினை மாற்றும் என்றார்.
மனைவியிடம் தொடங்கலாமா என்றேன்.
‘விதி வசப்பட்டவர்கள் மாந்தர்கள்,
நீயும் விலக்கல்ல’
என்று கூறி அவ்விடம் அகன்றார்.

Loading

சமூக ஊடகங்கள்

லயம்

எனக்கான கடை நாள் வலிகளை
கண்ணீருடன் விவரிக்கிறேன்.
நித்தியமானவனுக்கு
நித்தம் வலி ஏனோ
என்று விரல் பிடித்து
தலையினைக் கோதி
முத்தம் பதிக்கிறாய்.
எங்கிருந்தோ ஒலிக்கிறது ஒரு குரல்.
கிழம் பாயில படுத்து
அழுது அழுது
உயிரை எடுக்குது.

போய் சேர்ந்தாலும் நிம்மதியா இருப்பேன்.
தூரத்தில் நாய்களின் அழுகை ஒலி.

Loading

சமூக ஊடகங்கள்

அவித்யா

தூரத்தில் நிலவொளி.
வீசிக் செல்லும் பனிக்காற்று.
குளிர் தவிர்த்தலுக்கான உடைகள்
மெல்லிய விரும்பிய இசை.
காவியம் முதல் காப்பியம் வரை
பேசும் உன் திறமைகள்.
விரும்பிய உணவினை
உண்ணத் தொடங்கி
பேச முற்படுகையில்
ஒலிக்கிறது ஒரு குரல்.
நாஷ்டா துன்ன கூட வராம
தூங்குற உங்கப்பனை
எழுந்திருக்க சொல்லுடா.

Loading

சமூக ஊடகங்கள்

வல்லமை தாராயோ

நீண்ட நெடும் தூக்கதிற்கு
தயாரய் மனமும் உடலும்.
எதிர்படும் தலைவலிகள்
என்றைக்குமான தொடர்ச்சியாய்.
வலி பெரியதா, மருந்திடவா
என்கிறாய்.
வலியினை நீக்கும் மருந்தாய்
விரல்களும் உன் வார்தைகளும்.
இன்னும் இருக்கும் வலியை
உரைக்கிறேன் உன்னிடத்தில்.
அடுத்தவங்கள பாடா படுத்தினா
வலி எப்படி போவும்.
வார்தைகளின் முடிவில்
முடிவில்லா பயணம்.

Loading

சமூக ஊடகங்கள்

கவிதையின் தோற்றம்

ஒரு முறை கடவுளை
சந்திக்கையினில்
லட்சிய கவிதைகள்
எப்பொழுது வாய்க்கும் என்றேன்.
காதலித்துப் பார்
கவிதை வரும் என்றார்.
மறுதலித்து மற்ற
வழியினைக் கேட்டேன்.
கணவனாகிப் பார்.
லட்சம் கவிதைகள் வரும் என்றார்.
எழுதப் படாத கவிதைகள்
எண்ணிலி என்றும் பகன்றார்.

Loading

சமூக ஊடகங்கள்

தொடரும் நினைவுகள்

என்னுள்ளே எட்டிப் பார்த்தத்
என்றொ கடந்த அனுபவ மேகங்கள்
வழிந்தொடும் ஆறு
அதனுள் குதித்தாடிய நினைவுகள்,
வாய்க்கால் தாண்டி வயல்,
பனியுடன் கூடிய பஜனைப் பாடல்கள்,
பாடல்களை தொடரும்
பட்டாம் பூச்சிகள்
அனைத்தும் தாண்டி….
ஒங்கி ஒலிக்கும்
என்றைக்குமான ஒரு குரல்
‘லீவு நாள்னா இதுதான் வேலை’

Loading

சமூக ஊடகங்கள்

நரகம் எனில்


கடவுளை உணரத்துவங்கிய
தருணங்களில்
இருமைக்கான வினா எழந்தது.
நரகம் எனில் என்னவென்றென்.
மனைவியின் வார்த்தைகளை
மறுதலித்துப் பார்.
உணர்வாய் பொருள் அதனை
என்று உரைத்து
புன்னகைத்தார்.

Loading

சமூக ஊடகங்கள்

பிரபஞ்சமும் இயக்கமும்

மலை அளவு
செய் உதவி மறந்து
உளுந்து அளவு
உதவியின்மைக்காக
உறவுகளை சிக்கலாக்கும்
உன்னதமான மனைவி உறவை
என்ன செய்வது என்று
கடவுளிடம் கேட்டேன்.
பிரபஞ்சமும் இயக்கமும்
யாவர்க்கும் பொது என்று
பொருள் உரைத்து கரைந்தார்.

Loading

சமூக ஊடகங்கள்

நிஜமும் நிழலும்


எதோ ஒரு கணத்தில்
எனது குரல்
கடவுளுக்கு கேட்டிருக்க கூடும்.
இல்லை எனில் நிகழ்ந்திருக்குமா
இனிய எண்ணப் பரிமாற்றம்.
இல்லை எனில் நிகழ்ந்திருக்குமா
வேதனையற்ற சந்தோஷ சிரிப்புகள்.
இல்லை எனில் நிகழ்ந்திருக்குமா
புன்னகைப் பூக்கள்.
அனைத்தும் தாண்டி
அடுத்த அறையினில்
என் மகளின் படிப்புக் குரல்
‘கிட்டாதாயின் வெட்டன மற’


Loading

சமூக ஊடகங்கள்

இளித்த வாயன்


வழி தவறிய நாய் குட்டியாய்
எதோ ஒரு கணத்தில் வந்து சேர்ந்தது
கிழிந்த ரூபாய் நோட்டு
உலகின் நடனம் கண்டு வியக்கும்
பொழுதுகளில்
செவிகளில் செய்தி
‘நெத்தியில எழுதி ஒட்டியிருக்கும் போல
இளித்த வாயன் என்று’

Loading

சமூக ஊடகங்கள்

நிஜம்

மனம் விட்டு பேசிய நிமிடங்கள்
மனதில் நிழல் ஆடுகின்றன
கைகோர்த்து நடந்த நிமிடங்கள்
காலங்களோடு கரைகின்றன
உணர்வு கொண்டு
உணவு பரிமாறிய தருணங்கள்
உயிர் வரை ஊடுருவுகின்றன
காலம் கரையேற்றியதா என் மனைவியை
நினைவு உலகத்துள் கேள்வி
எங்கிருந்தோ வந்தது பதில்
எட்டு மணிக்கு தூக்கத்த பாரு உங்கப்பனுக்கு

Loading

சமூக ஊடகங்கள்

விழியருவி

தங்க சங்கிலி பட்டாசாய்
மகளின் சந்தோஷம்
மனைவியின் விழியருவி

Loading

சமூக ஊடகங்கள்

காவல் தெய்வங்கள்


காக்கதான் தெய்வங்கள் எனில்
எனது திருமணத்தின் போது
எங்கே சென்றிருந்தன?

Loading

சமூக ஊடகங்கள்

இடமும் பொருளும்

ஊடல் கொண்டு நீ
உணவு பரிமாறிய வேளையில்
ஓற்றைக் கேசம்

Loading

சமூக ஊடகங்கள்

கவிதையின் கருப்பொருள்கள்


எல்லா நிலைகளிலும்
வெளிப்படுகின்றன கவிதைகள்.
எண்ண ஓட்டத்திலும்
எதிர் கொள்ளும் வெற்றியிலும்
கவிதைக்கான கருப்பொருள்கள்.
வெற்றியிலும் பாராட்டிலும்
வெறுமைக்கான நிமிடங்களிலும்
சந்தோஷத்தின் சாயல் காட்டும்
சக தர்மினியிடமும்
உணர்வுகளை உள்வாங்க
துவங்கிய வேலைகளில்
உள்ளிருந்து ஒலிக்கிறது குரல்
நாலு காசு சம்பாதிக்க வக்கிலைனாலும்
நாற்பது பக்கம் எழுதுவாரு உங்கப்பாரு.

Loading

சமூக ஊடகங்கள்

சுயம் இழத்தல்


வாழ்வினில் என்ன
சுவாரசியம் இருக்கிறது
சுயம் இழத்தல் தவிர

Loading

சமூக ஊடகங்கள்