அலையும் அலைகள்


நம் எதிரே கடல் அலைகள்,
நம்முள் மன அலைகள்.
நம் பிரிவிற்கான காரணங்களை அடுக்குகிறாய்.
கடைசியான கவிதைக் கேட்கிறாய்.
அஸ்தமனத்திற்கான பிறிதொரு விடியல்
எப்பொழுது நிகழும் என்கிறேன்‘.
மௌனித்து என் பரிசுப் பொருள்களை
எல்லாம் கொடுத்து
உனக்கானப் பொருள்களை
எல்லாம் எடுத்துச் செல்கிறாய்.
அனைத்தையும் கொடுத்தப் பிறகும்
எச்சங்களாய் மீந்து இருக்கும்
நினைவுகளை என்ன செய்வாய்.

Click by : Chithiram Photography 

Loading

சமூக ஊடகங்கள்

என்னவெனில்

கடக்கும்காலங்களில்
கடந்தகாலத்தைத்தேடும்
கனவுவாழ்க்கை.












Click by : R.s.s.K Clicks

Loading

சமூக ஊடகங்கள்

முன்னேற்றம்

என்ன செய்து கொண்டிருக்கிறது
உடல்
இறப்பு நோக்கி முன்னேறுவது தவிர.









Click by : Karthik Pasupathy

Loading

சமூக ஊடகங்கள்

புன்னகைக் பூக்கள்

கர்வம் கொண்டு
கனவு காண்பவனைக்
கண்டு சிரிக்கின்றன மயானங்கள்.











Click by : RssK Clicks

Loading

சமூக ஊடகங்கள்

காயம் படிந்த காயங்கள்

மௌனித்திருக்கும்
மனித உடல் எங்கும்
புலப்படா காயங்கள்.











Click by : R.s.s.K Clicks

Loading

சமூக ஊடகங்கள்

தொடுவானம்

முந்திச் செல்லும் மழையினில்
நனைந்தபடி நானும்,
சிறு குடை பிடித்த படி நீயும்.
வாகனங்கள் ஒலி எழுப்பி
கரைகின்றன.
யாரும் அற்ற பொழுதுகளில்
குடைக்குள் இருந்து திரும்பிப்பார்த்து
புன்னைக்கிறாய்.
காலங்களும் உறைந்து நிற்கின்றன.
பிறிதொரு மழை நாளில்
மழை நீருடன் உன் நினைவுகளும்.

Click by : SL Kumar

Loading

சமூக ஊடகங்கள்

கரையில் நீந்தும் மீன்கள்

மனிதர்களோடு
மூடப்படுகின்றன
அவற்றின் கதவுகள்







Click by : R.S.S.K Clicks

Loading

சமூக ஊடகங்கள்

மினுமினுப்புகள்

தெருவில் பார்த்துவிட்டு
புழக்கடைக்கு திரும்பிய பின்னும்
தெரிகிறது நட்சத்திரங்கள்.









* பல நேரங்களில் வீட்டின் வாசலில் நட்சத்திரங்களை எண்ணிவிட்டு கொல்லைப் புறத்தில் வந்து சரிபார்த்திருக்கிறேன். மாற்றி அமைக்கப்பட்ட நிகழ்வுகளில் கடந்த காலங்களில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட நினைவுகள்.

Click by R.s.s.K Clicks

Loading

சமூக ஊடகங்கள்

வாழ்வின் அர்த்தங்கள்

மகளின் உறக்கத்தில்
தகப்பனை தலையணைக்குள் தேடுகையில் வாழ்வு முற்றுப் பெறுகிறது.








Click by : Vinod V

Loading

சமூக ஊடகங்கள்

நாற்றம்

மலராமல் இருக்கிறது
மலர் விற்பவர்களில்
வாழ்வு

நாற்றம்*மணம்




Click by : R.S.S.K Clicks

Loading

சமூக ஊடகங்கள்

மீதமிருக்கும் பிரபஞ்சம்

ஆற்றில் வழிந்தோடும் நீரை
கைகளில் அள்ளிய பிறகும்
மீதமிருக்கிறது பிரபஞ்சம்.











Click by : VG Santhosh Kumar

Loading

சமூக ஊடகங்கள்

ஆதி நிகழ்வுகள்

விளக்க முடியா காலத்தில்
சொற்களின் பரிச்சயமும்
அதன் பயன்பாடுகளும்
உண்டானது.
விசித்திரம் அறியும் முன்னே
கொட்டிக்கிடக்கும் எழுத்துகள்
குவிந்து தோன்றின.
வார்த்தைகளின் அடுக்குதலை
அறிவித்தான் ஒருவன்.
கலைந்த எழுத்துக்களைக்
கவிதை ஆக்க கற்றுத் தந்தான் மற்றொருவன்.
சுழலும் கலைடாஸ் கோப்பாய்
வார்த்தைகளின் ருசியில்
வண்ணங்களின் வார்ப்புகள்.
வாள் வித்தை காட்ட
வயிறு ஒடுங்கிய ஒருவனை விரும்பி தேர்ந்தேடுத்தேன்.
வித்தைகளுக்கு முன்பான ஒரு தருணத்தில்
விரும்பி கற்றுத் தந்தான் மௌனத்தை.
காலடித் தடயங்களை
அழித்துச் செல்லும் கடல் அலைகளாய் மனம்.
பிறகு சொற்கள் அற்று, வார்த்தைகள் அற்று

மௌனத்தின் பாஷைகள் மட்டும்.


Click by : Bragadeesh Prasanna.

Loading

சமூக ஊடகங்கள்

கர்ணன்

தட்டில் விழும் சிறு சில்லறையினை எடுத்து
இது எத்தனை ரூபா அம்மா
எனும் கண்கள் அற்ற சிறு குழந்தைகளின்
வார்த்தைகளிலும் வழிந்தோடுகிறது வலிகள்.













Click by : Karthik Pasupathy

Loading

சமூக ஊடகங்கள்

தான் தொலைதல்

அட ஏரோப்ளேன்என்பது மாறி,
‘இத்தானே’ என்னும் கணத்தில்
தொலைகிறது இளமைகள்.




Click by : Karthik Pasupathy

Loading

சமூக ஊடகங்கள்

வார்த்தைகளின் விடுதலை

சொல்லுக்கும் சொல் பிறக்கும்
இடத்திற்கும் இடையில் போராட்டம்
முடிவில் வென்றது மௌனம் மட்டுமே.

Click by : Karthik Pasupathy

Loading

சமூக ஊடகங்கள்

நாடக முடிவு

வினாக்கள் பல திசைகளில்
விடைகள் மட்டும்
சூன்யத்தில்

Click by : Karthik Pasupathiy

Loading

சமூக ஊடகங்கள்

மகிழம்பூக்கள்

மகள் கைப்பிடித்துச் செல்லும்
ஒவ்வொரு நடையிலும்
தெரிகிறது
வாழ்வின் அருமைகள்


Photo & Click by : Prakash Thiagarajan

Loading

சமூக ஊடகங்கள்

அக்லிஷ்டா

வீடு பேறு அடையக் காத்திருக்கின்றன
தெய்வங்கள்
வீதிகளில்














அக்லிஷ்டாஉலக இன்பத்தில் இருந்து நாம் மீள உதவுகிறவை.

பதஞ்சலி யோக சூத்திரம் – 5


Click by Vinod VV

Loading

சமூக ஊடகங்கள்

பிம்பங்களின் ஜனனம்

படர்ந்து செல்லும் காற்று
மரங்களில் பட்டு
மழையாய் மாறி
இலைகளின் வழியே
வ……
       ழி……
   ய……
த்…… 
துவங்குகையில்
வாழ்வு இனிக்கத் துவங்குகிறது.










Click by : Vinod Velayudhan

Loading

சமூக ஊடகங்கள்

மண் கவுச்சி

நான் வாசனையாக இருக்கிறேனா
என்று கேட்டுவிட்டு மகள் சென்ற பின்னும்
குறையாமல் இருக்கிறது
வாசனைகளும் நினைவுகளும்.

Click by : SL Kumar

Loading

சமூக ஊடகங்கள்