குற்றி

யாசம் அற்ற பொழுதுகளில்
வந்து சேர்கின்றன
பெரும் செல்வங்கள்.











குற்றிபசுக்கள் நிற்கும் இடத்தில் அவைகள் உராய்ந்து கொள்வதற்காக நடப்படும் மரம் அல்லது கல்

புகைப்படம் : இணைய தளம் 

Loading

சமூக ஊடகங்கள்

நக்கன்

வினா
பதில்கள்
வினாக்கள், வினாக்கள்,
பதில்
வினாக்கள், வினாக்கள்,வினாக்கள், வினாக்கள்
..
பிரிதொரு நாளில்
மௌனத்தில் பிரபஞ்சம்.

*நக்கன் – நிர்வாணி.
**நக்கன் என்றேத்திடு நாதனைதிருமந்திரம் – 3

புகைப்படம் : இணையத்தளம்/FB

Loading

சமூக ஊடகங்கள்

மீன் கொத்திகள்

பெரு நீர்ப்பரப்பில்
மீன் கொத்திகள்.
பல மீன்களை
இழந்தபின்னும்
அசைவற்று
தனித்திருக்கிறது நீர்ப்பரப்பு.







புகைப்படம் : Bhavia Velayudhan

Loading

சமூக ஊடகங்கள்

கரையும் இளமைகள்

இருப்பதாய் நினைத்த இளமை
கடந்த காலங்களில்
கரைந்து கலந்திருந்தது
பிரிதொரு நாளில்
பிரபஞ்சத்தின் வடிவம் தேடி.
















புகைப்படம் :  Bhavia Velayudhan

Loading

சமூக ஊடகங்கள்

பிரபஞ்சத்தின் சொற்கள்

எனக்கென்று கவிதை
எதுவும் இல்லை
பிரபஞ்சத்தின் சொற்களைத் தவிர.











புகைப்படம் :  Bhavia Velayudhan 

Loading

சமூக ஊடகங்கள்

சூன்யத் தேடல்கள்

தேகங்கள்
தேவைகள்
தேய்கிறது காலங்கள்
பின்னொரு நாளில்
சூன்யங்கங்கள்.









புகைப்படம் : SL Kumar



Loading

சமூக ஊடகங்கள்

சாரல் நினைவுகள்

மழை பெய்து முடித்தபின்னும்
இருக்கின்றன
முன்னொரு நாளின் நினைவுகள்










புகைப்படம் :  Bhavia Velayudhan 

Loading

சமூக ஊடகங்கள்

அனுபவக் கூடுகள்

காலங்களில் கரைந்தபின்
எஞ்சி இருக்கின்றன
அனுபவக் கூடுகள்










புகைப்படம் : Chithiram Photography 

Loading

சமூக ஊடகங்கள்

நீங்கா அலைகள்

சிறு பயணத்தில்
புத்தகம் புரட்டும்
நிமிடங்களில் நகர்ந்து போகிறது
குழந்தையின் புன்னகையோடு
அதன் அழகு அலை










புகைப்படம் :  R.s.s.K Clicks

Loading

சமூக ஊடகங்கள்

ஆகாய அலைகள்

ஆற்று நீரின் வாசம்
மனதுக்குள்.
நேர் எதிரில் நிலா.
மெதுவாய் பாதம் பிடித்து விடுகிறேன்.
இதழ் வழி புன்னகைப் பூக்கிறாய்.
பேச்சுக்கள் தொடர்கின்றன.
நேர் மேலே நிலா.
‘தேகம் பொய்’ எனில்
‘நினைவுகளும் பொய்யா’ என்கிறேன்;
என்றைக்குமான புன்னகையை வீசுகிறாய்.
சுற்றிலும் கொட்டிக்கிடக்கின்றன
பூக்களும் நினைவுகளும்.
பதிலுக்காக மீண்டும்
கேள்வி தொடுக்க துவங்குகிறேன்.
அறை எங்கும் ஒலிக்கிறது ஒரு குரல்.
வேளா வேளைக்கு சோறு தின்னுட்டு
சாமி கும்பிடாம
என் உயிர எடுக்கிறான் உங்கப்பன்‘.

புகைப்படம் : R.s.s.KClicks

Loading

சமூக ஊடகங்கள்

முக்தி

பெரியதாய் இழக்க
எதுவும் இல்லை
நினைவுகளைத் தவிர.







புகைப்படம் : R.s.s.KClicks

Loading

சமூக ஊடகங்கள்

பிம்பங்கள்

காற்றில் ஆடும்
குமிழிகளை உடைத்து
விளையாடுகிறது குழந்தை
தன் தோழமையும்
தன்னைப் போல் இருப்பதாய்
மகிழ்வுறுகிறார் கடவுள்.







புகைப்படம் : Karthik Pasupathi

Loading

சமூக ஊடகங்கள்

ஸர்வமந்த்ர ஸ்வரூபிணீ

ஒரு விடியலின் பொழுதுகளில்
விருப்பத்தோடு என்னை எழுப்புகிறாய்.
நேற்றைக்கான என் கனவில்
ஆயிரம் முத்தங்கள் தந்தாய் என்கிறாய்.
கனவினை நிஜமாக்கி
தருவதில் மகிழ்வுறும்
தகப்பனாகவே 
நானும் என் நினைவுகளும்.
ஸர்வமந்த்ர  ஸ்வரூபிணீ * – லலிதா சகஸ்ரநாமம்
புகைப்படம் : R.s.s.K Clicks

Loading

சமூக ஊடகங்கள்

இரட்சித்தல்

பல பறவைகள்
காற்றை கிழித்து
சென்ற பின்னும்
தடயங்கள் அற்று இருக்கிறது வானம்.

நிழற்படம் – சித்திரம் நிழற்படம்

Loading

சமூக ஊடகங்கள்

கரை ஏற்றம்

குளித்துக் கரை ஏறிய
பின்னும் இருக்கின்றன
நீரும் சில நினைவுகளும்.









புகைப்படம் : Bragadeesh Prasanna

Loading

சமூக ஊடகங்கள்

இற(ர)த்தல்

கடைக்காரனிடம்
கடன் சொல்லி வாங்கிவந்த
காகிதத்தில் கர்ணன்.
புகைப்படம் :  Karthik Pasupathy

Loading

சமூக ஊடகங்கள்

பூக்கள் முளைத்த பாதைகள்

மாலைச் சூரியன்
செந் நெருப்பாகிக்
கொண்டிருக்கிறது.
முடிவற்ற ஒரு பயணத்திற்கான
தொடக்கத்தில் நீயும் நானும்.
உனக்கான மௌனத்தில் நீயும்
எனக்கான மௌனத்தில் நீயும்.
வார்த்தைகளை உடைத்து
கடைசியான ஒரு கவிதை கேட்கிறாய்.
அஸ்தமனத்திற்கான பின் விடியல் ஏதுஎன்கிறேன்.
உடைப்பட்ட வார்தைகளில் வலி
உன் கண்களில்.
என்றோ ஒரு நாளின்பயணத்தில்
உனக்கான சூரிய அஸ்தமனம்தெரியலாம்.
எனக்கான சூரிய அஸ்தமனம்தெரியலாம்.
அந்த நாளில் நம் இருவருக்கும்
மௌனம் பொதுவாக இருக்கலாம்
அழகிய கனவுகளையும்
சலனம் கொண்ட நிஜங்களையும்
தனித்தனியே சுமந்து

புகைப்படம் & Model : Stri

Loading

சமூக ஊடகங்கள்

ஜனித்தல் – நினைவுகளுக்கு மட்டும்

பாதம் தொடும்
எல்லா அலைகளும்
இழுத்து வருகின்றன
பழைய நினைவுகளை.













புகைப்பட உதவி: Mahendran Thiru

Loading

சமூக ஊடகங்கள்

புனிதத்துவம்

சிறகுகள் அற்று 
வானில் பறக்கும் போதே
அறிய முடிகிறது
பூமியின் புனிதத்துவம்.











Click by : Bragadeesh Prasanna

Loading

சமூக ஊடகங்கள்

மௌன நாதம்

வெண் நிலவு காய்ந்து கொண்டிருக்கிறது.
ஆற்றில் நீர் சலசலக்கிறது.
அருகருகே நீயும் நானும்.
அறிதல் பற்றிய வாதங்கள் தொடர்கின்றன.
நிலத்தை அறிய நிலமாக மாறு;
நீர் அறிய நீராக மாறு;
தீ அறிய தீயாக மாறு;
காற்றை அறிய காற்றாக மாறு;
ஆகாயம் அறிய ஆகாயமாக மாறு;
என்று உரைக்கிறாய்.
எனில் உன்னை அறிவது எப்படிஎன்கிறேன்.
என்றைக்கும் ஆன விழி அசைவு காட்டி
புன்னகைத்து
மௌனத்தைக் கற்றுத் தருகிறாய்.
பிறிதொரு நாளில்
வெண் நிலவு காய்ந்து கொண்டிருக்கிறது.
ஆற்றில் நீர் சலசலக்கிறது.


புகைப்பட உதவி :  R.s.s.K. Clicks

Loading

சமூக ஊடகங்கள்