சஞ்சிதம்

அறுவடைக்குப் பின்னும்
தனித்து கிடக்கின்றன
பொம்மைகள்.

*சஞ்சிதம் – எஞ்சியது.


Click by : Harish Kumar

Loading

சமூக ஊடகங்கள்

காற்றில் ஆடும் விழுதுகள்

உடைந்து கிடக்கும்
ஒவ்வொரு பொருளும்
ஒன்றை நினைவு படுத்துகின்றன.
எரியும் நெருப்புகள் அனைத்தும்
ஒன்றை நினைவு படுத்துகின்றன.
அறைக்கும் அசையும் காற்றுகள் அனைத்தும்
ஒன்றை நினைவு படுத்துகின்றன
நீரும், நீர்த் துடிப்பும்
ஒன்றை நினைவு படுத்துகின்றன.
கூடும் நீல மேகங்களும்
ஒன்றை நினைவு படுத்துகின்றன.
ஒன்றிலும் நிலைபெறாமலும்
ஒன்றாமலும் மனம் மட்டும்.

Click by : Ramaswamy Nallaperumal (Ramaswamy N)

Loading

சமூக ஊடகங்கள்

வீடு பேறு – 2

பறவைகள் பறந்த பின்னும்
இருக்கின்றன
வெறும் கூடுகள்.

வீடு பேறு * – முக்தி
Click by : Devadhai Thozhan (a) Mahendran Thiru

Loading

சமூக ஊடகங்கள்

வீடுபேறு

வெட்டப் படுவதற்காக
செல்லும் போதும்
இலைகளைத் தின்கின்றன ஆடுகள்.

Click by : SL Kumar

Loading

சமூக ஊடகங்கள்

வளியும் வலியும்

வெடிக்கும் பலூன் சப்தம்
கைக் கொட்டிச் சிரிக்கும் குழந்தைகள்,
கலைகின்றன கனவுகள்.


Click by Ram (a) Ramaswamy Nallaperumal

Loading

சமூக ஊடகங்கள்

கடலோடு கலத்தல்

விட்டுச் சென்ற பின்னும்
இருக்கின்றன
பழைய வீட்டின் வாசனைகள்.

Click by : Santhosh Kumar VG

Loading

சமூக ஊடகங்கள்

அலைகள் அற்ற கடல்

பெரு நீர்ப்பரப்பின் மேல் பறத்து
மீனைக் கொத்திச் சென்றபின்னும்
அமைதியாக இருக்கிறது நீர்ப்பரப்பு.

Click by : Karthik Pasupathy

Loading

சமூக ஊடகங்கள்

தரிசனம்

யாரும் அற்ற நிலவொளி

மீண்டும் ஒரு வாய்ப்பு நமக்காக,
நமக்காக மட்டும்.
சுற்றி ஒலிக்கின்றன வண்டின் ஒலிகள்.
‘சந்தோஷத்தின் கால அளவு பெரிதா,
வலியுடன் கூடிய காயங்களின் 
கால அளவுகள்  பெரிதா’ என்கிறேன்.
‘காலடித் தடம் படா இடங்கள் உண்டு
காயம் படா இதயங்கள் உண்டா’ என்கிறாய்.
நிலையற்று போகிறது நினைவுகள்.
எங்கிருந்தோ ஒலிக்கிறது ஒரு குரல்.
‘எவ்வளவு நேரமா டீவீ பொட்டில
பொம்பளய பாப்பீங்க’


Click by : Karthik Pasupathi

Loading

சமூக ஊடகங்கள்

அனாகத நாதம்

மிகச் சிறந்த ஒலிகள் எல்லாம்
அடங்கி விடுகின்றன
சிறு கொலுசுகளின் ஒலிகளில்.

*அனாகத நாதம் – மனிதனுடைய முயற்சியின்றி இயற்கையிலேயே கேட்கப்படும் நாதம்

Click by : Devadhai Thozhan (a) Mahendran Thiru

Loading

சமூக ஊடகங்கள்

சலனம்

எல்லா இரவிற்குள்ளும் இருக்கின்றன
பல அழுகை ஒலிகள்.

Click by : Devadhai Thozhan (a) Mahendran Thiru

Loading

சமூக ஊடகங்கள்

அரூபநதி

கனவு
கனவுக்குள் கனவு.
நனவு,
நனவுக்குள் கனவு.
கனவு நனைவான பொழுதுகளில்
கனவு கலைந்திருந்தது.


Click by : Bragadeesh 

Loading

சமூக ஊடகங்கள்

காசுக் கடவுள்

காசுக் கடவுளை
பொம்மைகளாக்கி
விற்ற பின்னும்
கனவாகவும்
கனமாகவும் இருக்கிறது
விற்பவர்களின் வாழ்வு.

Loading

சமூக ஊடகங்கள்

கொண்டாடுதல்

வினைகளின் வழியே
பிறந்து பார்,
வேறு என்ன இருக்கிறது?
புழுதி நிறைந்த தெருக்களில்
விளையாடு,
வேறு என்ன இருக்கிறது?
உறவுகளோடு சொந்தம்
கொண்டாடு,
வேறு என்ன இருக்கிறது?
கற்றல் தவிர்த்து
அனைத்து விஷயங்களையும் செய்,
வேறு என்ன இருக்கிறது?
பெரு மிருகங்களால்
துரத்தப்படும் சிறு மிருகமாய்
வேலை தேடு,
வேறு என்ன இருக்கிறது?
தனிமை விலக்க
தவறா மணம் செய்,
வேறு என்ன இருக்கிறது?
மனைவியின் வார்த்தைகளால்
வலி கொள்,
வேறு என்ன இருக்கிறது?
குளிரில், ஊன் முழுவதும்
புண்ணாகி குரைத்துச்
செல்லும் நாயினைப் பார்,
வேறு என்ன இருக்கிறது?
தவறாது தமிழ் இலக்கியம் படித்து
தவித்துப் போ,
வேறு என்ன இருக்கிறது?
மகிழ்வின் விளைவாய்
மகிழும் குழந்தை கொள்,
வேறு என்ன இருக்கிறது?
பெருங்குரலுடன் கரைந்து
செல்லும் காகத்தினை உணர்,
வேறு என்ன இருக்கிறது?
கனவுகளில் வாழ்வினை நடத்து
வேறு என்ன இருக்கிறது?
ஒட்டு பீடியும் ஊறுகாயும் கொள்,
வேறு என்ன இருக்கிறது?
மனிதர்களால் விலக்கப்படு,
வேறு என்ன இருக்கிறது?
தடம் மாறாது தனித்துச் செல்லும்
பறவைக் கூட்டங்களை காண்,
வேறு என்ன இருக்கிறது?
தனிமைகளுடன் தனித்திரு,
வேறு என்ன இருக்கிறது?
யாருமற்ற இரவில்
தடயங்கள் அற்று
மரணம் அறிந்து மரித்துப் போ.
வேறு என்ன இருக்கிறது
வாழ்வினை கொண்டாடுதல் தவிர?

Photo : Devadhai Thozhan (a) Mahendran Thiru

Loading

சமூக ஊடகங்கள்

பகுபடுதல்

ஒவ்வொரு நரையும்
உணர்த்துகின்றன
பகுக்கபட்ட வைராக்கியங்கள்
வீழ்ச்சி அடைவதை.











Photo : Devadhai Thozhan (a) Mahendran Thiru

Loading

சமூக ஊடகங்கள்

கனவுகளில் தேடல்

இலக்கு நோக்கிய தேடல்கள்,
அடைந்தபின் மீண்டும் தேடல்.
நித்திய தேடல்களில் தொலைகிறது
நிச்சயமற்ற வாழ்வு.














Photo : Devadhai Thozhan (a) Mahendran Thiru

Loading

சமூக ஊடகங்கள்

ரகசியமாய்..

நீண்ட நாட்களுக்கான பிறகான
சந்திப்பு உன்னுடன்.
காற்று உன் கூந்தலைத் தழுவிச் செல்கிறது.
‘என்ன வேண்டும்’ என்கிறேன்.
மௌனத்திருக்கிறாய்.
‘வண்ணமும் வாசமும்
சுவையுடன் கூடிய உணவா வேண்டும்’ என்கிறேன்.
மௌனத்திருக்கிறாய்.
நிறைந்த மலர்கள் வேண்டுமா’ என்கிறேன்.
மௌனத்திருக்கிறாய்.
‘சிறந்த உடைகள் வேண்டுமா’ என்கிறேன்.
மௌனத்திருக்கிறாய்.
நாட்களின் நகர்தலை
ஒத்து இருக்கிறது என் கேள்விகள்.
அப்போதும் மௌனத்திருக்கிறாய்.
‘என்னதான் வேண்டும்’ என்கிறேன்.
பெண்களால் மட்டுமே அறியப்படும்
ரகசிய புன்னகையைச் சிந்தி
‘நீ வேண்டும்’ என்று
என் கன்னத்தில் இதழ் பதிக்கிறாய்.
ரகசியமாய் அழும் ஆண்களின்
வரிசையினில் நானும்.

Loading

சமூக ஊடகங்கள்

ஆத்ம விசாரம்

காற்றினில், கருமை இருளில்
கரைந்திருந்தன உன் கண்கள்
தங்கக் கூந்தலாய் உன் கேசம்.
அனைத்தும் அளிக்கும் உள்ளத்தோடு நீ.
கலங்கிய மனதுடம் நான்,
வினாக்களோடு விடிகின்றன
விடியல்கள் என்று
எனக்கான வினாக்களை அடுக்குகிறேன்.
விழி அசைத்து அனைத்துக்கும்
விடைஅளிக்கிறாய்.
உறு பொருள் உரைக்குமாறு கேட்கிறேன்.
காற்றில் ஆடுகின்றன வார்த்தைகள்
‘வட்டி காசுக் கட்டச் சொல்லி
வக்கில் நோட்டீஸ் வந்திருக்குன்னு
உங்கப்பனான்ட சொல்லு.

Loading

சமூக ஊடகங்கள்

இல்லானை இல்லாளும் வேண்டாள்

பொருளற்றவனை
எளிதில் புரிந்து கொண்டு
குரைக்க துவங்கி விடுகின்றன
மிருகங்களும்.

*இல்லானை இல்லாளும் வேண்டாள் – ஔவை

Loading

சமூக ஊடகங்கள்

தனித்த எச்சங்கள்

நீண்ட நெடும் பயணத்தில்
பாதங்களைப் பதித்து
நம் இருவரின் பயணமும்
தொடர்கிறது.
என் பாத சுவடுகள் மட்டும்
தனித்திருக்கிறது.
காரணம் கேட்கிறேன்.
எச்சங்களை விட்டுச் செல்வதால்
நீ பிம்பம்,
தனித்திருப்பதால் நான் மூலம் என்று கூறி
விழி வழியே வரும்
வினாக்களைப் பரிசளிக்கிறாய்.
அங்கீகாரமாக கண்ணீர் முத்துக்கள் என்னில்.

Loading

சமூக ஊடகங்கள்

சொல் பிறந்த கதை

சொற்களின் வேர் தேடி புறப்பட்டன
சிந்தனைகள்.
உன்னிடம் இருந்தா பிறக்கிறது என்று
ஆகாயத்திடம் வினவினேன்.
காற்று என்னுள் இருப்பதால் காற்றினை
கேட்கச் சொன்னது.
பற்றி எரிவதாலும், படர்ந்து எரிவதாகும்
நெருப்பு பெரியது என்றும் அதனிடம்
கேட்கச் சொன்னது காற்று.
கடந்து செல்ல துணைசெய்வது நீராவதால்
நீர் பெரியது என்றும் அதனிடம்
கேட்கச் சொன்னது நெருப்பு.
இயக்கம் அனைத்தும் பூமியில் என்பதால்
நிலம் பெரியது என்றும் அதனிடம்
கேட்கச் சொன்னது நீர்.
பிரபஞ்சங்களின் சேர்க்கையால் ஆனது
மனிதக் கூடு என்பதால்
மனிதனிடம் கேட்கச்சொன்னது நிலம்.
நாபிச் சுழியில் இருந்து சூல் கொள் வார்தைகள்
தொண்டைதாண்டி,
வாயினின் வழி வரத்துவங்குகையில்
சொற்களின் முடிவுகள் பூரணத்துவத்துடன்.

Loading

சமூக ஊடகங்கள்