தல வரலாறு(சுருக்கம்)/சிறப்புகள் – கூவம்
· சிவன் சுயம்பு மூர்த்தி
· மூலவர் – தீண்டா திருமேனி
· இறைவன் மேருவை கையால் வில்லாக பிடித்த தலம் – திரு+வில்+கோலம்
· சிவன் – காளிக்காக ரக்க்ஷா(காத்தல்) நடனம் ஆடிய இடம்
· சிவனால் வதம் செய்யப்பட்ட தாரகன், வித்யுன்மாலி – துவார பாலகர்கள்
· கஜபிருஷ்ட விமானம்
· இயற்கை பேரழிவுகளான மழை, வெள்ளம் வரும் போது சுவாமி வெண்மையாகவும், போர்நிகழும் காலத்தில் செம்மை நிறம் உடையதாகவும் மாறும் அதிசயம் நிகழும்..
· அம்பாளுக்கு முன் புறத்தில் ஸ்ரீசக்கரம்
· கூரம்(ஏர்க்கால்) முறிந்த இடமாதலால் இது கூரம். பின்னாளில் மருவி கூவம் என்றானது.
· பைரவர் – நாய் வாகனம் இல்லாமல் காட்சி
தலம்
|
கூவம்
|
பிற பெயர்கள்
|
கூவரம், திருவிற்கோலம், கூபாக்னபுரி
|
இறைவன்
|
திரிபுராந்தகர், சோமாஸ்கந்தர், புராந்தகேசுவரர்
|
இறைவி
|
திரிபுராந்த நாயகி, புராந்தரியம்மை
|
தல விருட்சம்
|
தனியாக ஏதுமில்லை. நைமிசாரண்ய ஷேத்திரம்
|
தீர்த்தம்
|
அக்னி, அச்சிறுகேணி மற்றும் கூபாக்கினி தீர்த்தம்
|
விழாக்கள்
|
· சித்திரை – பிரம்மோற்ஸவம்
· ஆடி – பூ பாவாடை திருவிழா
· சிவராத்திரி
· ஆருத்ரா தரிசனம்
|
மாவட்டம்
|
திருவள்ளுர்
|
திறந்திருக்கும் நேரம் / முகவரி
|
காலை 6 மணி முதல் 12 மணி வரை
மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை
அருள்மிகு திரிபுராந்தகேஸ்வரர் திருக்கோயில்,
கூவம் – . பேரம்பாக்கம் வழி,திருவள்ளூர் மாவட்டம்.
|
பாடியவர்கள்
|
திரு ஞான சம்பந்தர், கூவப்புராணம்
|
நிர்வாகம்
|
திரு ராஜேந்திரன் – 93818-65515
|
இருப்பிடம்
|
சென்னையில் இருந்து அரக்கோணம் செல்லும் வழியில் கடம்பத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து 9 கி,மீ தூரத்தில் உள்ளது
|
இதர குறிப்புகள்
|
தேவாரத் தலங்களில் வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது 14 வது தலம்.
|
திரிபுராந்தகர்
திரிபுராந்த நாயகி
(இப்பதிகத்தில் 8வது பாடல் இல்லாததால் 5வது பாடலும், 9வது பாடலும் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது)
பாடியவர் திருஞானசம்மந்தர்
திருமுறை 3ம் திருமுறை
பதிக எண் 023
திருமுறை எண் 5
பாடல்
முந்தினான் மூவருள் முதல்வன் ஆயினான்
கொந்துலா மலர்ப்பொழிற் கூக மேவினான்
அந்திவான் பிறையினான் அடியர் மேல்வினை
சிந்துவான் உறைவிடம் திருவிற் கோலமே
கொந்துலா மலர்ப்பொழிற் கூக மேவினான்
அந்திவான் பிறையினான் அடியர் மேல்வினை
சிந்துவான் உறைவிடம் திருவிற் கோலமே
பொருள்
இறைவன் எல்லாவற்றிக்கும் முற்பட்டவன்.படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் தொழிகளை உடைய மூவருக்கு முதலாவது ஆனவன். கொத்தாக பூக்கும் சோலைகளை உடைய கூகம் என்ற ஊரில் உறைபவன். அந்தி வானத்தில் தோன்றும் பிறை சந்திரனை தன் தலையில் சூடியவன். அடியவர்களுடைய வினைகளை முழுவதுமாக நீக்குபவன். அவன் உறையும் இடம் திருவிற்கோலம் ஆகும்.
* * * * * * * * * * * * * * * * * * * *
பாடியவர் திருஞானசம்மந்தர்
திருமுறை 3ம் திருமுறை
பதிக எண் 023
திருமுறை எண் 9
பாடல்
திரிதரு புரம்எரி செய்த சேவகன்
வரியர வொடுமதி சடையில் வைத்தவன்
வரியர வொடுமதி சடையில் வைத்தவன்
அரியொடு பிரமனதாற்ற லால் உருத்
தெரியலன் உறைவிடம் திருவிற் கோலமே
தெரியலன் உறைவிடம் திருவிற் கோலமே
பொருள்
இறைவன் முப்புரங்களை அழித்து தேவர்களைக் காத்தவன். வரிகள் உடைய பாம்பினையும் சந்திரனையும் தலையில் தரித்தவன். தங்களது கர்வத்தால் தங்களை பெரிதாக்கிக் கொண்டதால் ப்ரம்மா மற்றும் திருமால் இவர்களால் காணமுடியாதவன். இப்படிப்பட்ட இறைவன் வீற்றிருக்கும் இடம் திருவிற்கோலம்.
கருத்து
திருதரு – வானத்தில் பறந்து திருந்து கொண்டிருந்த; அட்டவீரட்டானத்தில் ஒன்று – திரிபுர தகனம்
சேவகன் – சிவன் எளிமையானவன் என்பதைக் குறிக்கிறது.
வரி அரவோடு – வரிகள் உடைய பாம்பு(மிகுந்த நஞ்சு உடையது)
புகைப்பட உதவி : தினமலர்
புகைப்பட உதவி : தினமலர்