அமுதமொழி – விகாரி – ஆனி – 21 (2019)


பாடல்

இனிவார் சடையினில் கங்கையென்
     பாளைஅங் கத்திருந்த
கனிவாய் மலைமங்கை காணில்என்
     செய்திகையிற் சிலையால்
முனிவார் திரிபுரம் மூன்றும்வெந்
     தன்றுசெந் தீயின்மூழ்கத்
தனிவார் கணையொன்றி னால்மிகக்
     கோத்தஎம் சங்கரனே

பதினொன்றாம் திருமுறை – திருஇரட்டைமணிமாலை – காரைக்காலம்மையார்

கருத்து – சங்கரனை நிந்தாத் துதி செய்தல்.

பதவுரை

கோபம் கொண்ட அசுரர்களின் முப்புரத்தையும் செந்தீயினால் வேகுமாறு எரித்த சங்கரனே, உன் சடையினில் தங்கியுள்ள இனிமையத் தரத்தக்க  கங்கையை இடபாகத்தில் இருக்கும் பாகம் பிரியாத மலைமங்கை  என அழைக்கப்படும் உமாதேவியார்  காணநேர்ந்தால் நீ என்ன செய்வாய்?

விளக்க உரை

  • `காணின் என் செய்தி` – `நாணித் தலை குனிவை போலும்`  எனினும், `உயிர்களின் நன்மைக்காக அன்றிப் பிறிதொன்றையும் செய்யாதவன்நீ` என்பதை உணர்த்தும்.  `இதுவும் ஒரு நன்மைக்கே` என்பது உணர்ந்து அவனும் எதுவும் செய்யப் போவதில்லை; நீயும் நாணுதற்குக் காரணம் இல்லை` என்பது இப்பாட்டின் உள் உறையும்  சிறப்பு. (வட மொழியில் – நிந்தாத் துதி, தமிழில் பழிப்பது போலப் புகழ்தல்)
  • முனிவார் – கோபிப்பவர்
  • வார்கணை- நீண்ட அம்பு

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – பங்குனி – 11 (2019)

பாடல்

அடியமர்ந்து கொள்வாயே நெஞ்சமே அப்பம்
இடிஅவலோ டெள்உண்டை கன்னல் வடிசுவையில்
தாழ்வானை ஆழ்வானைத் தன்னடியார் உள்ளத்தே
வாழ்வானை வாழ்த்தியே வாழ்

பதினொன்றாம் திருமுறை –  மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை – காரைக்கால் அம்மையார்

கருத்துவாயினால் வாழ்த்தினால் வாழ்வு உண்டாகாது  ஆகையால், நெஞ்சத்தினால் அவனுடைய அடிகளை விரும்பி உன்னுள் இருத்திக் கொள்வாய் என்பது பற்றி  உரைக்கும் பாடல்.

பதவுரை

நெஞ்சமே! அப்பம், மா, அவல், எள் உருண்டை இவற்றுடன் கரும்பில் இருந்து மிகுந்து  ஒழுகுகின்ற மிகுகின்ற சுவை கூடியதான கருப்பஞ்சாறு இவைகளை உள்ளத்தில் விரும்பி, அதில் அழுந்தி நுகர்வானுடைய அடிகளை விரும்பி உன்னுள் இருத்திக் கொண்டு அவன் திருவடிகளில் அமர்ந்து கொள்வாய்.

விளக்க உரை

  • அமர்தல் – விரும்புதல்
  • இடி – மா.
  • கன்னல் – கரும்பு

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – இடைதல்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  இடைதல்

பொருள்

  • சோர்தல்
  • மனந்தளர்தல்
  • பின்வாங்குதல்
  • விலகுதல்
  • தாழ்தல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

கைக்கும் பிணியொடு, காலன் தலைப்படும்ஏல்லையினில்
எய்க்கும் கவலைக்(கு) இடைந்தடைந்தேன்,வெம்மை நாவளைக்கும்
பைக்கும் அரவரை யான்தந்த பாய்மதயானைபத்துத்
திக்கும் பணிநுதற் கண்திரு வாளன் திருவடியே

மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை

கருத்து உரை

உடலால் ஏற்படும் பிணியொடு, மனதால் ஏற்படும் கவலையால் மனம் தளர்ந்து, சோர்ந்து யான் பாம்பினை இடையில் அணிந்தவனும், நெற்றிக்கண்களை உடையவனுமாகியவன் தந்த யானை முகம் கொண்ட திருவாளனது திருவடிகளையே புகலிடமாக அடைந்தேன்’. அதனால், யான் பிணியும் கவலையும் இல்லாதவன் ஆயினேன். (ஆதலால் நீவிரும் அவனது அடிகளையே புகலிடமாக அடையுங்கள்’ – என்பது குறிப்பு).

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

காட்சி அளவையின் வேறு பெயர்கள் யாவை?
பிரத்தியட்சப் பிரமாணம், காண்டல் அளவை

Loading

சமூக ஊடகங்கள்