அமுதமொழி – குரோதி – ஆடி – 29 (2024)


பாடல் 5.

மூலம்

கண்டேனிப் பாசங் கழிந்தேன் அமுதைமுகந்
துண்டேன் சுகானந்தத் துள்ளிருந்தேன் – வண்டிமிர்காத்
தேனைப் பொழிகமலைச் செங்கமலப் பொற்பாத
ஞானப்ர காசனையே நான்

பதப்பிரிப்பு

கண்டேன் இப் பாசம் கழிந்தேன் அமுதை முகந்து
உண்டேன் சுகானந்தத்து உள்ளிருந்தேன் – வண்டுமிகாத்
தேனைப் பொழி கமலைச் செங்கமலப் பொற்பாத
ஞானப்ரகாசனையே நான்

சிவபோகசாரம் – தருமபுர ஆதின ஸ்தாபகர் ஸ்ரீலஸ்ரீ குருஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்

கருத்து – அருட்குரவன் ஆகிய ஞான ஆசிரியரை அடைந்ததன் பயனை விளக்கிக் கூறும் பாடல்.

பதவுரை

வண்டுகள் தேனைப் பொழிகின்ற கமலையில் வாழும் ஞானப் பிரகாசனின்பொற்பாத திருவடிகளைப் பற்றி நான் மெய்யானதைக் கண்டேன், பற்றுதலை ஏற்படுத்துவதும், சைவ சித்தாந்தத்தால் விளக்கப்படுவதும் ஆகிய பாசம் நீங்கப் பெற்றேன்; அமுதத்தை உண்டேன்; அதனால் சுகானந்தத்தினுள் இருந்தேன்.

விளக்கஉரை

பாசம் – உலகமாய் தோன்றுதல்
வண்டுமிகாத்தேனைப்பொழிகமலை – தன்னைஅடைபவர்களை போற்றும் ஞானம்
பொற்பாதம் – அருமை, பெருமை மற்றும் தூய்மை பற்றி நின்றது.

#அந்தக்கரணம்  #அமுதமொழி #குரு  #குருவின்_பெருமை #சிவபோகசாரம் #சைவம்

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *