அமுதமொழி – சுபகிருது – மாசி – 26 (2023)


பாடல்

நானதேது நீயதேது நடுவில் நின்றதேதடா
கோனதேது குருவதேது கூறிடும் குலாமரே
ஆவதேது அழிவதேது அப்புறத்தில் அற்புதம்
ஈனதேது ராம ராம ராமா என்ற நாமமே

அருளியச் சித்தர் : சிவவாக்கியர்

கருத்து – அகம், புறம் அனைத்தும் மாயைக்கு உட்பட்டது எனவும், இதை கடந்து நிற்பது ராம எனும் நாமம் என்பதை உரைக்கும் பாடல்.

பதவுரை

செல்வத்தின் மீது பற்று வைத்து இருக்கும் குலாமரே! மும்மலங்களுக்கு உட்பட்டு பேதப்பட்டு நான் என்றும் நீ என்றும் நாம் பேசும் பொருட்கள் எல்லாம் எவை? புறப் பொருளுக்கும், அகப் பொருளுக்கும் நடுவில் நாம் இருவரும் அல்லாமல் இருப்பது எது? நான், நீ மற்றும் புறப்பொருள் ஆகியவற்றுக்கு கோனாகிய தலைவன் யார்? இவற்றை காக்கும் குரு யார்? எல்லாப் பொருள்களையும் தன்னில் கொண்டு அண்டத் தோற்றம், ஒடுக்கம் ஆகியவற்றுக்கு காரணமாக இருந்து இவற்றில் இருந்து விலகி இருப்பது யார்? எல்லாவற்றையும் கடந்து கடைசியில் நிற்பது எது எனில் அது இராம இராம என்னும் நாமமே என்பதை அறிவீர்களாக.

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *