குருவும் தற்போதமும் – 4


புகைப்படம் : திரைப்பட இயக்குநர் திரு.ஐயப்ப மாதவன் அவர்கள்

ஒருமுறை குருநாதர் மாவட்ட அளவில் ஆன மருத்துவ காப்பகத்திற்கு சென்று இருக்கிறார்.

ஒரு பெண் மிகவும் துயரத்தோடு இருந்திருக்கிறார்.
குரு நாதர் : என்ன விஷயம்,இவ்வளவு சோகமாக இருக்கிறீர்கள்?
பெண் : சொன்னால் மட்டுமா தீர்ந்துவிடப் போகிறது?

குரு நாதர் : பரவாயில்லை சொல்லுங்கள்
பெண் : எதிர் வீட்டில் இருப்பவர்கள் இயலாதவர்கள். அங்கு இருப்பவருக்கு உடம்பு சரியில்லை, இரண்டு மாத்திரைகள் இங்கு எடுத்துக் கொடுத்தேன். இது தவறா? நீங்கள் வேண்டுமானால் CCTV காமிராவினை வைத்து சரிபாருங்கள்.

குரு நாதரும் பார்த்து உறுதி செய்து கொண்டார்கள்.

குரு நாதர் : நான் வேண்டுமானால் உங்கள் உயர் அதிகாரியிடம் பேசிப் பார்க்கவா?
பெண் : இல்லை, அவர் ஒத்துக் கொள்ளமாட்டார்,ஏற்கனவே நான் பேசிவிட்டேன், பயன் இல்லை.
குரு நாதர் : நான் முயற்சி செய்து பார்க்கிறேன்.

குருநாதர் மருத்துவரிடம் : ஏன் இப்படி செய்கிறீர்கள். இது நல்லது அல்லவே.
மருத்துவர் : இதை கேட்க நீங்கள் யார், உங்கள் வேலையை பாருங்கள்
குருநாதர் : உங்கள் மேல் அதிகாரியிடம் உரைப்பேன்.
மருத்துவர் : நீங்கள் எவரிடம் உரைத்தாலும் அது பற்றி கவலை இல்லை.
குருநாதர் : ஒருவினாடிக்குப் பிறகு (ஒரு பெண் பெயரினை குறிப்பிட்டு) அந்த பெண்ணிற்காகவா இத்தனை சேர்த்து வைக்கிறீர்கள். இது உங்கள் மனைவிக்கு தெரியுமா?
அத்தனை குளிரூட்டப்பட்ட அறையிலும் மருத்துவருக்கு வியர்த்துவிட்டது.

மருத்துவர் : உங்களுக்கு எப்படி தெரியும்?
குருநாதர் : புன்னகையோடு அந்த இடம் விட்டு அகன்றார். அந்த புன்னகைக்குள் அவர் குரு நாதரும் இணைந்திருந்தார்.

அடியேன்: இதை மற்றவர்களுக்கு பகிரலாமா?

குரு நாதர் : பெண்கள் சக்தியின் ரூபம். அன்னை பரமேஸ்வரியின் ஸ்வரூபங்களை நாம் வணங்கத்தக்கவர்களாவதால் குறை காண்பது அவலம் என்பதால் இதுபோன்ற பிறப்புகள் எடுத்து அவர்கள் துன்பமுறாவண்ணம் ப்ரார்த்தனை செய்து கொள்வது நன்று அல்லவா? நல்லவை பிறருக்கு பயன் தருபவைகளாக இருந்தால் பகிரலாம்.

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *