சித்த(ர்)த் துளிப்பு – 07-Oct-2021


பாடல்

சிவன்ற னடியாரை வேதிய ரைச்சில
சீர்புல ஞானப் பெரியோரை
மவுன மாகவும் வையா தேயவர்
மனத்தை நோகவும் செய்யாதே

கொங்கணச் சித்தர்

பதவுரை

சிவபெருமானின் அடியார்களையும், வேதங்களைப் பின்பற்றி நடப்பவர்களையும், சிறப்புக்குரிய ஞானம் கொண்டு புலமை பெற்ற பெரியோர்களையும் மனதளவிலும் கூட (அகத்தளவில்) வையாதே; அவர்களின் மனம் புண்படும்படியாக எதையும் செய்யாதே(புறத்தளவில்).

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.