அமுதமொழி – பிலவ – புரட்டாசி – 20 (2021)


பாடல்

எழுதியவாறே தான் இரங்கும் மட நெஞ்சே!
கருதியவாறு ஆமோ கருமம்?-கருதிப் போய்க்
கற்பகத்தைச் சேர்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்தில் செய்த வினை

மூதுரை – ஔவையார்

கருத்து – முன் ஜென்ம வினைவழியே அனைத்தும் நிகழும் என்பதைக் கூறும் பாடல்.

பதவுரை

தான் எண்ணியவாறு  நடக்கவில்லையே என்று வருந்தும்  மட நெஞ்சமே! விரும்பியதை எல்லாவற்றையும் தரும்  கற்பக மரத்திடம் சென்று வேண்டி நின்றாலும் அது   எட்டிக் காயைக் கொடுக்கிறது எனில் அது அவர்கள் முன் பிறவியில் செய்த வினையின் பயன்.

விளக்க உரை

காஞ்சிரங்காய் – எட்டிக் காய்

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.