சித்த(ர்)த் துளிப்பு – 03-Oct-2021


பாடல்

மாங்காப் பாலுண்டு மலைமேல் இருப்போர்க்கு
தேங்காப் பால்ஏதுக்கடி? குதம்பாய்!
தேங்காப் பால் ஏதுக்கடி?

அருளிய சித்தர் : குதம்பைச் சித்தர்

பதவுரை

இந்திரிய சக்தியை வீணாக்காமல், மூலாதாரத்திலிருந்து எழும் குண்டலினி சக்தியை மேலெழுப்பி, சஹஸ்ராரத்தை அடையுமாறு செய்யும் போது அங்கேயுள்ள சிவனுடன் இணைகிறது. அவ்வாறு இணைவதன் காரணமாக நிலைத்ததும்  என்றும் பொலிவானதுமான அமிர்தத் தேன் உடல் எங்கும் பரவுகிறது. இதுவே மாங்காதப் பால். இதனை உணர்ந்தவர்கள் தேங்காப்பால் போன்றதாகிய சிற்றின்பத்தை விரும்ப மாட்டார்கள்.

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

error: Content is protected !!