அமுதமொழி – சுபகிருது – வைகாசி – 26 (2022)


பாடல்

கண்டாரை நோக்கிக் கருத்தோடு இருப்போர்க்குக்

கொண்டாட்டம் ஏதுக்கடி – குதம்பாய்

கொண்டாட்டம் ஏதுக்கடி ?

காலனை வென்ற கருத்தறி வாளர்க்குக்

கோலங்கள் ஏதுக்கடி – குதம்பாய்

கோலங்கள் ஏதுக்கடி ?

அருளியச் சித்தர் : குதம்பைச் சித்தர்

கருத்துஅகக்கண் கொண்டு கண்டவர்களுக்கு புறத்தில் கொண்டாட்டங்களும், புறத் தோற்ற அழகு செய்தலும் எதற்காக என்பதை விளக்கும் பாடல்.

பதவுரை

குதம்பை எனும் ஆபரணத்தை காதில் அணிந்தவளே! ஞானத்தினால் மெய் உணர்வு கொண்டு நாம் காணும் போது நம்மைக் கண்டு அருளுபவரை அகக் கண் கொண்டு அதில் ஒன்றி கருத்தோடு இருப்பவர்களுக்கு புறக் கொண்டாட்டங்கள் எதற்காக? காலன் எனும் எமனை வெல்லக்கூடிய கருத்தினை கொண்டு அவனை வெல்லக்கூடியவர்களுக்கு புறத்தினால் அமையப்பெறும் கோலங்கள் எதற்காக?

கண்டாரை நோக்குதல், கருத்தோடு இருத்தல், காலனை வெல்லுதல் போன்றவை மிகவும் சூட்சமமானவை. இவைகள் குரு மூலமாக உபதேசம் செய்யப்பட்ட முறைகளுடன் செய்யப்பட வேண்டும்.

Loading

சமூக ஊடகங்கள்

சித்த(ர்)த் துளிப்பு – 03-Oct-2021


பாடல்

மாங்காப் பாலுண்டு மலைமேல் இருப்போர்க்கு
தேங்காப் பால்ஏதுக்கடி? குதம்பாய்!
தேங்காப் பால் ஏதுக்கடி?

அருளிய சித்தர் : குதம்பைச் சித்தர்

பதவுரை

இந்திரிய சக்தியை வீணாக்காமல், மூலாதாரத்திலிருந்து எழும் குண்டலினி சக்தியை மேலெழுப்பி, சஹஸ்ராரத்தை அடையுமாறு செய்யும் போது அங்கேயுள்ள சிவனுடன் இணைகிறது. அவ்வாறு இணைவதன் காரணமாக நிலைத்ததும்  என்றும் பொலிவானதுமான அமிர்தத் தேன் உடல் எங்கும் பரவுகிறது. இதுவே மாங்காதப் பால். இதனை உணர்ந்தவர்கள் தேங்காப்பால் போன்றதாகிய சிற்றின்பத்தை விரும்ப மாட்டார்கள்.

Loading

சமூக ஊடகங்கள்
error: Content is protected !!