
பாடல்
நீடும் தண்டாயுதம் நித்தம் தண்டாயுதம் நித்தம் அன்பர்
தேடும் தண்டாயுதம் ஈரேழுலகமும் சேவித்துக் கொண்
டாடும் தண்டாயுதம் அண்டாது பேய்கள் அலறிவிழச்
சாடும் தண்டாயுதனே காழியாபதுத்தாரணனே
ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்
கருத்து – தண்டாயுதத்தின் சில பெருமைகளை உரைத்து, அதைக் கொண்டிருக்கும் பைரவரை வணங்கி நிற்கும் பாடல்.
பதவுரை
காழியாபதுத்தாரணனே, நீண்டதான தண்டாயுதம், தினமும் தண்டாயுதம், நித்தமும் தன் வினைகளை அறுக்க அன்பர்கள் தேடும் தண்டாயுதம் , ஈரேழு பதினான்கு லோகமும் வணங்கி கொண்டாடிடும் தண்டாயுதம், தீமை தரத்தக்க பேய்களை அலறி விழச் செய்யும் படியான தண்டாயுதம் எனும் பெருமைகளை உடைய தண்டாயுத்தை ஏந்தியவனாக இருக்கிறாய்.