அமுதமொழி – விளம்பி – தை – 9 (2019)

பாடல்

நெஞ்சம்உமக் கேயிட மாகவைத்தேன் நினையாதொரு போதும் இருந்தறியேன்
வஞ்சம்இது வொப்பது கண்டறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட
நஞ்சாகிவந் தென்னை நலிவதனை நணுகாமல் துரந்து கரந்தும்இடீர்
அஞ்சேலும்என் னீர்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

திருக்கெடில நதிக்கரையிலே திருவதிகையிலே திருவீரட்டானத்திலே  எழுந்தருளும் அம்மானே! என் நெஞ்சத்தை உன்னிடத்திலேயே உறையுமாறு பண்படுத்தி வைத்துவிட்டேன். இனி ஒரு பொழுதும் உம்மை நினையாமல் இருக்க மாட்டேன். இச்சூலைநோயையின் காரண காரியத்தை அறியாமல், அதனால் ஏற்படும் கொடுநோயை அடியேன் இதுகாறும் அனுபவித்தறியேன்; வயிற்றினோடு சேர்த்து மற்றைய ஏனைய உள்ளுறுப்புக்களையும்க் கட்டி அவை செயற்படாமல் மடக்கி இடுவதைப் போல வந்த விடம் போல வந்து என்னைத் துன்புறுத்தும் நோயை விரட்டியோ, செயற்பாடு இல்லாமல் மறைத்தோ,அஞ்சேல் என்று எனக்கு அருளியும் அபயம் அளித்திலீர்;  இதற்கு நிகரான வஞ்சகத்தினை யான் கண்டறியேன்.

விளக்க உரை

  • வல் + து + அம் = வஞ்சம் – பொய். நெஞ்சத்தினை இடமாக நினைக்கும் செயல் என் அநுபவத்தில் பொய் போல் இல்லாமல் மெய்யே என்றவாறு.
  • நஞ்சு ஆகி – நஞ்சின் இயல்புடையதாகி.
  • ஆகி – போன்று
  • என்னீர் – என்று சொல்லீர்

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *