அமுதமொழி – விளம்பி – மார்கழி – 12 (2018)

பாடல்

ஆமப்பா குருவுக்குத் திருநேத்திரங்கள்
அப்பனே காளகண்ட மான்மழுவினோடு
தாமப்பா புலித்தோலா லாடைசாத்தி
தந்தியுட தோல்போற்றிக் கண்டந்தன்னில்
வாமப்பா அரவமணிந்து விபூதி சாத்தி
மாதுசிவ காமியொரு பாகராய்
ஓமப்பா ரிஷபவா கனத்திலேறி
இச்சைபெறச் சொரூபசித்தி கொடுத்தாள்வாரே

அகத்தியர் பூஜா விதி – 200 – அகத்தியர்

பதவுரை

ஈசன் குருவாய் வரும் பொழுது, மூன்று கண்கள், கருமை நிறம் உடைய கண்டம் கொண்ட மான் மற்றும் மழுவினை கைகளில் ஏந்தி, புலித் தோல் ஆடை உடுத்தி, மெல்லியதான அரவமாகிய பாம்பினை கண்டத்தில் அணிந்து, விபூதி தரித்து சிவகாமி உடன் உமை ஒரு பாகனாய் ரிஷப வாகனத்தில் ஏறி விரும்பியதை அருள சொரூப காட்சி கொடுத்து அருள்வார்.

விளக்க உரை

  • ஈசன் குருவாய் வரும் திறம் சொல்லியது

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *