மெய்ப் பொருள் – 3. சக்தி கணபதி

புகைப்படம் : திருவாடுதுறை ஆதினம்

 

சக்தி கணபதி

வடிவம் பச்சை நிறத்தவளான தேவியைப் பரஸ்பரம் ஆலிங்கனம் செய்த திருக்கோலம். தேவியும் அவ்வாறே பரஸ்பரம் தழுவிக் கொண்டிருப்பார்.
மேனி வண்ணம் மாலை நேரச் சூரியனின் இளமஞ்சள் நிறத் திருமேனியை உடையவர்
திருக்கைகள் பாசம், அங்குசம் ஆகியவற்றைத் தாங்கி அஞ்சேல் எனும் அபயகரமும் உடையவர்
பலன் வழிபடும் பக்தர்களின் அச்சத்தைப் போக்குபவர்

 

மந்திரம்

ஆலிங்க்ய தேவீம் ஹரிதாம் நிஷண்ணம் பரஸ்பராஸ்லிஷ்ட கடெளநிவேஸ்ய:|
ஸந்த்யாருணம் பாஸஸ்ருணிம் வஹந்தம் பயாபஹம் ஸக்தி கணேஸமீடே: ||

விளக்கம்

மாலை நேர செவ்வந்தி வானம் போன்ற நிறம் உடையவராகவும், பச்சை நிறமான தேவியை தழுவிக் கொண்டவராகவும், அவ்வாறே தேவியாலும் பரஸ்பரம் தழவிக் கொள்ளப்பட்டவராகவும், பாசம், பூமாலை இவற்றை தாங்கிய திருக்கரத்துடன் அபய முத்திரை கொண்டிருப்பவருமான கணபதியை வணங்குகிறேன்.

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *