இசைக்கருவிகள் அறிமுகம் : பம்பை
ஒவியம் – tamillexion
பாடல்
நெடுஞ் சடை கரந்திட நெறித்த பம்பையும்
விடுங் கதிர் முறுவல் வெண்ணிலவும் மேம்பட
இடும் பலிப் பாத்திரம் ஏந்து கையராய்
நடந்து வேட்கோவர் தம் மனையில் நண்ணினார்
பெரிய புராணம் – சேக்கிழார் (திருநீலகண்ட நாயனார் புராணம்)
பதவுரை
நீண்ட சடையினில் ஒழுங்குபடுத்தப்பட்ட பம்பை எனும் வாத்திய கருவியுடன், வெண்ணிலவில் இருந்து வெளிப்படும் கதிரினை ஒத்தவாறு கூடிய புன்முறுவலுடன், கைகளில் பிட்சைப் பாத்திரம் ஏந்தி நடந்து திருநீல கண்டர் வீட்டிற்கு சென்றார்.
விளக்க உரை
- கரத்தல் – மறைத்தல்