முக்தி

பெரியதாய் இழக்க
எதுவும் இல்லை
நினைவுகளைத் தவிர.







புகைப்படம் : R.s.s.KClicks

Loading

சமூக ஊடகங்கள்

பிம்பங்கள்

காற்றில் ஆடும்
குமிழிகளை உடைத்து
விளையாடுகிறது குழந்தை
தன் தோழமையும்
தன்னைப் போல் இருப்பதாய்
மகிழ்வுறுகிறார் கடவுள்.







புகைப்படம் : Karthik Pasupathi

Loading

சமூக ஊடகங்கள்

ஸர்வமந்த்ர ஸ்வரூபிணீ

ஒரு விடியலின் பொழுதுகளில்
விருப்பத்தோடு என்னை எழுப்புகிறாய்.
நேற்றைக்கான என் கனவில்
ஆயிரம் முத்தங்கள் தந்தாய் என்கிறாய்.
கனவினை நிஜமாக்கி
தருவதில் மகிழ்வுறும்
தகப்பனாகவே 
நானும் என் நினைவுகளும்.
ஸர்வமந்த்ர  ஸ்வரூபிணீ * – லலிதா சகஸ்ரநாமம்
புகைப்படம் : R.s.s.K Clicks

Loading

சமூக ஊடகங்கள்

இரட்சித்தல்

பல பறவைகள்
காற்றை கிழித்து
சென்ற பின்னும்
தடயங்கள் அற்று இருக்கிறது வானம்.

நிழற்படம் – சித்திரம் நிழற்படம்

Loading

சமூக ஊடகங்கள்

கரை ஏற்றம்

குளித்துக் கரை ஏறிய
பின்னும் இருக்கின்றன
நீரும் சில நினைவுகளும்.









புகைப்படம் : Bragadeesh Prasanna

Loading

சமூக ஊடகங்கள்

இற(ர)த்தல்

கடைக்காரனிடம்
கடன் சொல்லி வாங்கிவந்த
காகிதத்தில் கர்ணன்.
புகைப்படம் :  Karthik Pasupathy

Loading

சமூக ஊடகங்கள்

பூக்கள் முளைத்த பாதைகள்

மாலைச் சூரியன்
செந் நெருப்பாகிக்
கொண்டிருக்கிறது.
முடிவற்ற ஒரு பயணத்திற்கான
தொடக்கத்தில் நீயும் நானும்.
உனக்கான மௌனத்தில் நீயும்
எனக்கான மௌனத்தில் நீயும்.
வார்த்தைகளை உடைத்து
கடைசியான ஒரு கவிதை கேட்கிறாய்.
அஸ்தமனத்திற்கான பின் விடியல் ஏதுஎன்கிறேன்.
உடைப்பட்ட வார்தைகளில் வலி
உன் கண்களில்.
என்றோ ஒரு நாளின்பயணத்தில்
உனக்கான சூரிய அஸ்தமனம்தெரியலாம்.
எனக்கான சூரிய அஸ்தமனம்தெரியலாம்.
அந்த நாளில் நம் இருவருக்கும்
மௌனம் பொதுவாக இருக்கலாம்
அழகிய கனவுகளையும்
சலனம் கொண்ட நிஜங்களையும்
தனித்தனியே சுமந்து

புகைப்படம் & Model : Stri

Loading

சமூக ஊடகங்கள்

ஜனித்தல் – நினைவுகளுக்கு மட்டும்

பாதம் தொடும்
எல்லா அலைகளும்
இழுத்து வருகின்றன
பழைய நினைவுகளை.













புகைப்பட உதவி: Mahendran Thiru

Loading

சமூக ஊடகங்கள்

புனிதத்துவம்

சிறகுகள் அற்று 
வானில் பறக்கும் போதே
அறிய முடிகிறது
பூமியின் புனிதத்துவம்.











Click by : Bragadeesh Prasanna

Loading

சமூக ஊடகங்கள்

மௌன நாதம்

வெண் நிலவு காய்ந்து கொண்டிருக்கிறது.
ஆற்றில் நீர் சலசலக்கிறது.
அருகருகே நீயும் நானும்.
அறிதல் பற்றிய வாதங்கள் தொடர்கின்றன.
நிலத்தை அறிய நிலமாக மாறு;
நீர் அறிய நீராக மாறு;
தீ அறிய தீயாக மாறு;
காற்றை அறிய காற்றாக மாறு;
ஆகாயம் அறிய ஆகாயமாக மாறு;
என்று உரைக்கிறாய்.
எனில் உன்னை அறிவது எப்படிஎன்கிறேன்.
என்றைக்கும் ஆன விழி அசைவு காட்டி
புன்னகைத்து
மௌனத்தைக் கற்றுத் தருகிறாய்.
பிறிதொரு நாளில்
வெண் நிலவு காய்ந்து கொண்டிருக்கிறது.
ஆற்றில் நீர் சலசலக்கிறது.


புகைப்பட உதவி :  R.s.s.K. Clicks

Loading

சமூக ஊடகங்கள்

என்றைக்குமான குளம்

குளத்தின் அழகு
தொடங்குகின்றது
அதன் அலை அடங்குதலில்.








புகைப்படம் : Karthik Pasupathy

Loading

சமூக ஊடகங்கள்

கசியும் நினைவுகள்

மழை நீரில் கரைகிறதோ
இல்லையோ நினைவுகள்;
வலி கொண்ட தனிமையில் மட்டும்.












Click by : R.s.s.K Clicks

Loading

சமூக ஊடகங்கள்

சொற்கள் அற்ற இரவு

விளையாட்டாய் ஆரம்பிக்கிறது
உனக்கும் எனக்குமான சண்டை.
உன் கோபங்கள் என்னை
மகிழ்வு கொள்ளச் செய்கின்றன.
மகிழ்வான நிமிடங்கள்
முற்றுப் பெறும் முன் உரைக்கிறாய்
நான் உன்னுடன் பேசப் போவதில்லை
கண்ணீருடன் கலக்கின்றன
எனக்கான கவிதைகள்.
உறக்கத்தில்  கைகளால்
எதையோ தேடுகிறாய்.
என்ன இருந்தாலும் நீ என் அப்பா
உன்னை பிடிக்காமல் இருக்குமா
என்கிறாய்.
பிறிதொரு நாளில்
இதை நீ உணர்ந்து சிரிக்க
கவிதையாக்கி வைத்திருக்கிறேன்
என்னையும் நினைவுகளையும்.

புகைப்படம் மற்றும் இருப்பு : ராதா கிருஷ்ணன்

Loading

சமூக ஊடகங்கள்

உள் ஒலி

காகிதத்தில் வண்ணத்துப் பூச்சி
தாவும் குழந்தை
புன்னகைக்கும் இறை.












புகைப்பட உதவி:  SL Kumar

Loading

சமூக ஊடகங்கள்

ஜன்னல் பிடித்த படி

பெரும் காற்றும் உடனான மழையும்
எழுதிச் செல்கிறது
சில நீர் வடிவங்களையும்
பல நினைவுகளையும்.










புகைப்பட உதவி :  R.s.s.KClicks

Loading

சமூக ஊடகங்கள்

நிறைவு

ஒவ்வொரு பளபளப்பிற்கும்
பின்னும் இருக்கின்றன
பல பசி நிறைந்த பட்டினிகள்


Click by : Harish Kumar

Loading

சமூக ஊடகங்கள்

முன் குறிப்புகள்

மகள் விரும்பும்
காகித மலர்களில்
தெரிகிறது
வாழ்வின் வாசனைகள்.









புகைப்பட உதவி :  Swathika Senthil

Loading

சமூக ஊடகங்கள்

வரவேற்றலில் மரணம்

கிளைகளில் இருந்து 
உதிரத் துவங்கும்
பூக்களின் அடுத்த நிலை
என்னவாக இருக்க கூடும்?








புகைப்பட உதவி : R.s.s.K Clicks

Loading

சமூக ஊடகங்கள்

ஈர்ப்பு

உதிர்ந்த உடல் மீது
எதைத் தேட 
முற்படுகின்றன ஈக்கள்?









புகைப்பட ஆக்கம் :  SLKumar

Loading

சமூக ஊடகங்கள்

கானல் காட்சிகள்


அறையில் எழிலினை
எவரும் அறியக்கூடும்.
கலைந்த புத்தகங்கள்,
கசங்கிய ஆடைகள்,
புகை படிந்த ஜன்னல்கள்,
உதிர்ந்த சில சாம்பல்கள்,
முயக்கம் முன்னிருத்திய வீச்சங்கள்,
காலி மதுக் கோப்பைகள்,
அங்கொன்றும் இங்கொன்றுமாய் பீடித்துளிகள்,
பெரும் பசியினை மறுதலிக்கையில்
வாடா சாப்டஎன்ற நண்பனின் அழைப்புகள்,
பின் தொடரும் குளியலறை அழுகைகள்,
கள் வெறி கொள்ளும் இலக்கிய பேச்சுக்கள்
இப்படியாகத்தான் கழிகிறது
இன்றைய இருப்பும்.
பிறிதொரு நாளில் தங்குபவன்
இருப்பும் இப்படியாகவே இருக்கலாம்.

Click by : R.s.s.K Clicks

Loading

சமூக ஊடகங்கள்