சைவத் திருத்தலங்கள் 274 – திருஎருக்கத்தம்புலியூர்

274

தல வரலாறு(சுருக்கம்) / சிறப்புகள் – திருஎருக்கத்தம்புலியூர்

  • தனது தாயை மீனப் பெண்ணாக சபித்ததற்காக முருகன் வேதாக நூல்களை கடலில் வீசி எறிந்தார். இதனால் சாபம் பெற்ற முருகன் மதுரையில் தனபதி என்பவரின் மகனாக உருத்திரசர்மர் என்ற பெயரில் ஊமைப்பிள்ளையாக பிறந்து இத்தலம் வந்து வழிபாடு செய்து பேசும் திறன் பெற்றார்.
  • குமரன் வழிபட்டதால் சிவன் திருநாமம் திருக்குமாரசாமி
  • வியாக்ரபாதர் வழிபட்ட பஞ்ச புலியூர்களில் (பெரும்பற்றப்புலியூர், திருப்பெரும்புலியூர், ஓமாம்புலியூர், திருப்பாதிரிப்புலியூர், திரு எருக்கத்தம்புலியூர்) இத்தலமும் ஒன்று
  • 63 நாயன்மார்களில் ஒருவரான திருநீலகண்ட யாழ்ப்பாணருடைய அவதாரத்தலம். திருவுருவம் மதங்க சூளாமணியாருடன்
  • தேவர்களும், முனிவர்களும் இங்கு வந்து பறவையாகவும், மரங்களாகவும் மாறி ஈசனை வழிபட்டு வந்த போது ஏற்பட்ட வேடர்களின் தொந்தரவால் அவர்கள் வெள்ளெருக்காக மாறி வழிபாடு செய்யும் தலம்
  • அத்தம் = காடு, எருக்கத்தம் = எருக்கங்காடு. எருக்கஞ் செடிகள் நெருக்கமாக நிறைந்திருந்த காட்டில் எழுந்த ஊர் எருக்கத்தம்புலியூர்
  • இராஜராஜசோழ மன்னனுக்கு புத்திர பாக்கியத்தையும், அவனுடைய மகன் இராஜேந்தர சோழனுக்கு திருமண வரத்தையும் தந்தருளிய தலம்
  • மார்ச் மாதம் 16ம் தேதி முதல் 20ம் தேதி வரையிலும் மூலவர் மீது சூரியஒளி வழிபாடு செய்யும் தலம்
  • இவ்வூருக்குக் கிழக்கே உள்ள கீழ்க்கோட்டூர் மணியம்பலத்தில் கருவூர்த்தேவரின் திருவிசைப்பா பாடப் பெற்றது.

 

தலம் திருஎருக்கத்தம்புலியூர்
பிற பெயர்கள் ராஜேந்திரப்பட்டினம், எருக்கத்தம்புலியூர் , திருவெருக்கத்தம்புலியூர் , குமரேசப்பட்டினம், யாழ்ப்பாணாயன்பட்டினம்
இறைவன் ஸ்வேதாரண்யேஸ்வரர், திருக்குமாரசுவாமி, நீலகண்டேஸ்வரர் )
இறைவி நீலமலர்க்கண்ணி வீராமுலையம்மன் , அபீதகுஜநாயகி , நீலோற்பலாம்பாள்
தல விருட்சம் வெள்ளெருக்கு
தீர்த்தம் நீலோற்பலதீர்த்தம் , கந்த தீர்த்தம் , ஸ்வேத தீர்த்தம் , செங்கழுநீர்
விழாக்கள்
மாவட்டம் கடலூர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி காலை 6 மணி முதல் 11 மணி வரை
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரைஅருள்மிகு திருநீலகண்டேஸ்வரர் திருக்கோவில்
ராஜேந்தரப்பட்டினம் அஞ்சல்
விருத்தாசலம் வட்டம்
கடலூர் மாவட்டம்
PIN – 608703
04143 – 243533, +91-94440 63806.+91-93606 37784
வழிபட்டவர்கள் வியாக்ரபாதர், உருத்திரசன்மர்
பாடியவர்கள் திருஞானசம்பந்தர், அருணகிரி நாதர்
நிர்வாகம்
இருப்பிடம் ஸ்ரீமுஷ்ணம் – விருத்தாசலம் சாலையில் முஷ்ணத்தை அடுத்து அமைந்துள்ளது இத் தலம்
இதர குறிப்புகள் தேவாரத் தலங்களில் 194 வது தலம்

நடு நாட்டுத் தலங்களில்  4  வது தலம்.

திருக்குமாரசுவாமி

%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf

வீராமுலையம்மன்

%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%af%81%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d

புகைப்படங்கள் : தினமலர்

பாடியவர்           திருஞான சம்பந்தர்
திருமுறை         1
பதிக எண்          89
திருமுறை எண் 8       

பாடல்

ஆவா வெனவரக்க னலற வடர்த்திட்டுத்
தேவா வெனவருளார் செல்வங் கொடுத்திட்ட
கோவே யெருக்கத்தம் புலியூர் மிகுகோயில்
தேவே யெனவல்லல் தீர்தல் திடமாமே.

பொருள்

ஆ ஆ என்று தன்னைக் காப்பாற்றும்படி இராவணன் அலறுமாறு அவனை அடர்த்து, பின் தேவா என அவன் தவறினை உணர்ந்து வேண்ட அருளோடு நிறைந்த செல்வங்கள் பலவற்றை வழங்கியருளிய தலைவனே, எருக்கத்தம்புலியூரில் விளங்கும் சிறப்புமிக்க கோயிலில் எழுந்தருளும் தேவனே என்று போற்ற, நம் அல்லல்கள் தீர்தல் உறுதியாகும்.

 

 

பாடியவர் திருஞான சம்பந்தர்
திருமுறை 1
பதிக எண் 89
திருமுறை எண் 9        

பாடல்

மறையா னெடுமால்காண் பரியான் மழுவேந்தி
நிறையா மதிசூடி நிகழ்முத் தின்தொத்தே
இறையா னெருக்கத்தம் புலியூ ரிடங்கொண்ட
கறையார் மிடற்றானைக் கருதக் கெடும்வினையே.

பொருள்

வேதங்களை ஓதும் நான்முகனும், நெடுமாலும் காணுதற்கு அரியவனே, மழுவைக் கையில் ஏந்தியவனே, கலை நிறையாத பிறை மதியைச் சூடியவனே, முத்துக்களின் கொத்துப் போன்ற இறையோனே என்று போற்றி, எருக்கத்தம்புலியூரை இடமாகக் கொண்ட நீலகண்டனை அண்ணலை நினைந்தால், வினை கெடும்.

(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருக்கூடலையாற்றூர்

274

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருக்கூடலையாற்றூர்

  • இறைவன் சுயம்பு மூர்த்தி
  • பிரமனுக்கு நர்த்தனம் செய்து காட்டியவராதலின் இறைவன் நர்த்தன வல்லபேஸ்வரர்
  • அகத்தியர் தான் கற்று அறிந்த வித்தைகள் அனைத்தும் மறக்காமல் இருக்க வழிபட்ட தலம்
  • மணிமுத்தாறும் வெள்ளாறும் கூடும் இடத்தில் உள்ள ஊராதலின் இருப்பதால் கூடலையாற்றூர்
  • சுந்தரர் இத்தலத்தை வணங்காமல் திருமுதுகுன்றம் சென்றபோது   இறைவன் அந்தணராக வந்து ‘கூடலையாற்றூருக்கு வழி இஃது’ ன்று கூறி வழிகாட்டியத் தலம்
  • நூற்றாண்டுகளுக்கு முன்னர் வெள்ளப்பெருக்கில் இக்கோயில் அழிந்த பிறகு, அங்கிருந்த கற்களைக் கொண்டு வந்து கட்டப்பட்ட கோயில்
  • இரு அம்பாள் சந்நிதி – பராசக்தி அம்பாள் சந்நிதியில் திருநீறு, ஞானசக்தி அம்பாள் சந்நிதியில் குங்குமம் பிரசாதம்
  • வெளிப்புறத்தில் அகத்தியர் சிற்பம் கொண்ட மதில்
  • ஆகமத்தில் இருப்பது போல் இல்லாமல் கொடிமரம், பலிபீடம் அற்ற தலம்
  • உற்சவ மூர்த்தங்களில் பிற்காலச்சேர்க்கையான சித்திரகுப்தர் (ஒரு கையில் எழுத்தாணியுடன் மறுகையில் ஏடும் கொண்ட வடிவம்)
  • நவக்கிரக சந்நிதி அற்ற திருக்கோயில்
  • சித்திரை முதல் மூன்று நாட்கள் மூலவரின் மேல் சூரிய ஒளி பட்டு சூரிய பூஜை
தலம் திருக்கூடலையாற்றூர்
பிற பெயர்கள் தட்சிணப்பிரயாகை
இறைவன் நர்த்தனவல்லபேஸ்வரர் ( நெறிக்காட்டுநாதர் )
இறைவி பராசக்தி , ஞானசக்தி (புரிகுழல்நாயகி) (இரு அம்பாள் சந்நிதிகள்)
தல விருட்சம் கல்லாலமரம்
தீர்த்தம் சங்கமத்தீர்த்தம் ( வெள்ளாறும் , மணிமுத்தாறும் கூடும் இடம் ) மற்றும் பிரம்ம , அகத்திய , கார்த்தியாயனர் தீர்த்தங்கள்
விழாக்கள் மாசி 13 நாள் பிரம்மோற்சவம்
மாவட்டம் கடலூர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை,
மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரைஅருள்மிகு நர்த்தன வல்லபேஸ்வரர் திருக்கோவில்
திருக்கூடலையாற்றூர்
காவலாகுடி அஞ்சல்
காட்டுமன்னார் கோவில் வட்டம்
கடலூர் மாவட்டம்
PIN – 608702
04144-208704 , 99422-49938
வழிபட்டவர்கள்
பாடியவர்கள் சுந்தரர் 1 பதிகம், அருணகிரிநாதர் – திருப்புகழ் 1 பாடல்
நிர்வாகம்
இருப்பிடம் சேத்தியாதோப்பு – கும்பகோணம் பாதையில், ஸ்ரீ முஷ்ணம் போகும் பாதையில்  ‘காவாலகுடி’யை அடைந்து, அடுத்துள்ள கூடலையாற்றூரை அடையலாம்.
இதர குறிப்புகள் தேவாரத் தலங்களில் 193 வதுத் தலம்

நடு நாட்டுத் தலங்களில் 3 வதுத் தலம்.

நர்த்தனவல்லபேஸ்வரர்

%e0%ae%a8%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%aa%e0%af%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b0%e0%af%8d

பராசக்தி

%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf

 

பாடியவர்          சுந்தரர்
திருமுறை         7
பதிக எண்          85
திருமுறை எண் 8        

பாடல்

மறைமுதல் வானவரும் மாலயன் இந்திரனும்
பிறைநுதல் மங்கையொடும் பேய்க்கண முஞ்சூழக்
குறள்படை யதனோடுங் கூடலை யாற்றூரில்
அறவன்இவ் வழிபோந்த அதிசயம் அறியேனே

பொருள்

வேதத்திற் சொல்லப்பட்ட தலைமைகளையுடைய பலராகிய தேவரும், அத்தேவர்க்கெல்லாம் தலைவனாகிய இந்திரனும், பேய்க்கூட்டமும் சூழ்ந்திருக்க , பிறைபோலும் நெற்றியை யுடைய உமாதேவியோடும், பூதப் படையோடும், திருக்கூடலை யாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற புண்ணியனாகிய பெருமான், இவ்வழியிடை என்முன் வந்த வியத்தகு செயலை அடியேன் அறியாது  ஒழிந்தேன் என் அறியாமை!

பாடியவர்          சுந்தரர்
திருமுறை         7
பதிக எண்          85
திருமுறை எண் 9

பாடல்

வேலையின் நஞ்சுண்டு விடையது தான்ஏறிப்
பாலன மென்மொழியாள் பாவையொ டும்முடனே
கோலம துருவாகிக் கூடலை யாற்றூரில்
ஆலன்இவ் வழிபோந்த அதிசயம் அறியேனே

பொருள்

திருப்பாற்கடலினை கடைந்த பொழுது அதில் இருந்து உண்டான எழுந்த நஞ்சினை உண்டவனும், விடையை ஊர்ந்து செல்பவனும், பால்போலும் இனிய மொழியை உடையவளாகிய உமா தேவியோடும் உடனாய கோலமே தனது உருவமாகக் கொண்டு திருக் கூடலையாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற ஆல்நிழற்பெருமான், இவ் வழியிடை என்முன் வந்த வியத்தகு செயலை அடியேன் அறியாது  ஒழிந்தேன் என் அறியாமை!

(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருத்தூங்கானைமாடம்

274தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருத்தூங்கானைமாடம்

  • மூலவர் சுயம்பு லிங்கம்; சற்று உயரமான, சதுர வடிவான ஆவுடையார்.
  • ஆழி வெள்ளம் வந்த போது அசையாது அதிகார நந்தி மூலம் பிரளய கால வெள்ளத்தைத் தடுத்த பெருமானின் திருத்தலம்.
  • தேவகன்னியர் ( பெண் ) , காமதேனு ( ஆ ) , வெள்ளை யானை ( கடம் ) வழிபட்ட தலமாதலால் பெண்ணாகடம்.(பெண்+ஆ+கடம்)
  • வெள்ளாற்றின் கரையில் அமைந்துள்ள தலம்.
  • காமதேனு பூசை செய்யும்போது வழிந்தோடிய பால், கயிலை தீர்த்தத்தில் நிரம்பி உண்டான குளம்.
  • ஐராவதம் வழிபட்டதால் ‘தயராசபதி’, ஆதிநாளில் மலர்வனமாக விளங்கியதால் ‘புஷ்பவனம், புஷ்பாரண்யம்’, இந்திரன் வழிபட்டதால் ‘மகேந்திரபுரி’, பார்வதி வழிபட்டதால் ‘பார்வதிபுரம்’ , நஞ்சுண்ட இறைவனின் களைப்பைத் தீர்த்த தலமாதலின் ‘சோகநாசனம்’ , சிவனுக்குகந்த பதியாதலின் ‘சிவவாசம்’
  • திருநாவுக்கரசர் – சூல இடபக் குறி பொறிக்குமாறு வேண்டிப் பெற்ற தலம்.
  • சந்தான குரவர்கள் மெய்கண்ட தேவர், மறைஞான சம்பந்தர் ஆகியோர்பிறந்த தலம்.
  • ஆறாயிரம் கடந்தையர்கள் (வீரமக்கள்) வாழ்ந்ததால் ‘கடந்தை நகர்
  • மாகேஸ்வர பூசையில் தனது பணியாள் வந்த போது அவருக்கு பூஜை செய்ய மறுத்த மனைவியின் கரங்களை வெட்டிய கலிகம்ப நாயனார் (மீண்டும் துளிர்க்க அருளிச் செய்த பிரான்-கைவழங்கீசர் ) முக்தி பெற்றத் தலம்.
  • கஜபிருஷ்ட விமான அமைப்பிலான விமானம்
  • இத்தலத்திற்கு அருகில் உள்ள சௌந்தர சோழபுரத்தில் வாழ்ந்த சௌந்தரவல்லி என்னும் தேவரடியார், பண்டம் மாற்ற இத்தலத்திற்கு வரும்போது, கடைவீதியிலிருந்தே வழிபடுவதற்கேற்ப கட்டப்பட்டது சௌந்தரேஸ்வரர் (சிவலிங்கம்) சந்நிதி

 

தலம் திருத்தூங்கானைமாடம்
பிற பெயர்கள் பெண்ணாகடம், பெண்ணாடம்
இறைவன் பிரளயகாலேஸ்வரர் ( சுடர்க்கொழுந்தீஸ்வரர் ), கைவழங்கீசர்
இறைவி ஆமோதனம்பாள் ( கடந்தை நாயகி , அழகிய காதலி ), விருத்தாம்பிகை
தல விருட்சம் செண்பக மரம்
தீர்த்தம் கயிலை தீர்த்தம் , பார்வதி தீர்த்தம் , இந்திர தீர்த்தம் , முக்குளம் , வெள்ளாறு
விழாக்கள் சித்திரையில் 12 நாட்கள் பிரம்மோற்சவம்
மாவட்டம் கடலூர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி காலை 6.00 மணி முதல் 11.30 மணி வரை,

மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை

 

அருள்மிகு பிரளயகாலேசுவரர் திருக்கோயில்,

பெண்ணாகடம் & அஞ்சல்,

விருத்தாச்சலம் வழி,

திட்டக்குடி வட்டம்,

கடலூர் மாவட்டம் – 608 105.

தொலைபேசி : +91-9976995722, +91-98425-64768, 04143 – 222788.

வழிபட்டவர்கள் ஐராவதம், இந்திரன் மற்றும் பார்வதி
பாடியவர்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்
நிர்வாகம்
இருப்பிடம் விருத்தாசலத்தில் இருந்து சுமார் 17 கிமீ, தொழுதூரில் இருந்து சுமார் 15 கிமீ, திட்டக்குடியில் இருந்து சுமார் 15 கிமீ
இதர குறிப்புகள் தேவாரத் தலங்களில் 192 வது தலம்

நடு நாட்டுத் தலங்களில் 2  வது தலம்.

சுடர்க்கொழுந்தீஸ்வரர்

%e0%ae%9a%e0%af%81%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%b4%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%80%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b0%e0%af%8d

விருத்தாம்பிகை

%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%88

புகைப்படம் : தினமலர்

பாடியவர்          திருஞானசம்பந்தர்

திருமுறை         1

பதிக எண்         59

திருமுறை எண்   9

 

பாடல்

நோயும் பிணியும் அருந்துயரமும்

நுகருடைய வாழ்க்கை யொழியத்தவம்

வாயும் மனங்கருதி நின்றீரெல்லாம்

மலர்மிசைய நான்முகனும் மண்ணும்விண்ணும்

தாய அடியளந்தான் காணமாட்டாத்

தலைவர்க் கிடம்போலுந் தண்சோலைவிண்

தோயுங் கடந்தைத் தடங்கோயில்சேர்

தூங்கானை மாடம் தொழுமின்களே

பொருள்

உடலை வருத்தும் நோய்களும், மனத்தை வருத்தும் கவலைகளும் அவற்றால் விளையும் துன்பங்களும் ஆகியவற்றை நுகர்தற்குரிய இவ்வாழ்க்கை நீங்கத் தவம்புரியும் எண்ணத்துடன் நிற்கும் நீவிர் அனைவீரும் தாமரை மலர்மேல் உறையும் நான்முகனும், மண்ணையும், விண்ணையும் அடியால் அளந்த திருமாலும் காண மாட்டாத தலைவனாகிய சிவபிரானுக்குரிய இடமாகிய விண் தோயும் சோலைகளால் சூழப்பட்ட கடந்தை நகரிலுள்ள திருத்தூங்கானை மாடப்பெருங்கோயிலைத் தொழுவீர்களாக.

 

கருத்து

 

நோய் – உடலைப்பற்றியனவாகி வாதபித்த சிலேட்டுமத்தால் விளைவன.

பிணி – மனத்தைப் பிணித்து நிற்கும் கவலைகள்.

அருந்துயரம் – அவற்றால் விளையும் துன்பங்கள்.

 

 

 

பாடியவர்          திருநாவுக்கரசர்

திருமுறை         4

பதிக எண்         109

திருமுறை எண்    1

 

பாடல்

பொன்னார் திருவடிக் கொன்றுண்டு

விண்ணப்பம் போற்றிசெய்யும்

என்னாவி காப்பதற் கிச்சையுண்

டேலிருங் கூற்றகல

மின்னாரு மூவிலைச் சூலமென்

மேற்பொறி மேவுகொண்டல்

துன்னார் கடந்தையுள் தூங்கானை

மாடச் சுடர்க்கொழுந்தே.

பொருள்

விரும்பி மேகங்கள் தங்குதல் பொருந்திய பெண்ணாகடத்திலுள்ள திருக்கோயிலாகிய தூங்கு ஆனை மாடத்தில் ஒளிப் பிழம்பாய் இருக்கும் பெருமானே! உன்னுடைய பொன்போன்ற திருவடிகளில் அடியேன் செய்யும் விண்ணப்பமாகிய வேண்டுகோள் ஒன்று உளது. அஃதாவது அடியேனுடைய உயிரைப் பாதுகாக்கும் விருப்பம் உனக்கு உண்டானால், யான் சமண சமயத்தில் வாழ்க்கையின் பெரும் பகுதியை வீணாக்கினவன் என்று மக்கள் கூறும் பழிச் சொற்கள் நீங்குமாறு, உன்னுடைய அடிமையாக அடியேனை எழுதிக் கொண்டாய் என்பது புலப்பட ஒளிவீசும் முத்தலைச் சூலப் பொறியை அடியேன் உடம்பில் பொறித்து வைப்பாயாக.

 

(இத் திருத்தலம் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருநெல்வாயில் அரத்துறை

274

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருநெல்வாயில் அரத்துறை

  • திருத்தூங்காணை மாடத்தில் இருந்து நடந்தே சென்ற திருஞான சம்பந்தரின் கால்கள் நோகாமல் இருக்க அவருக்கு சிவன் முத்துச்சிவிகையும், முத்துக்குடையும், முத்துச்சின்னமும் அருளியத் தலம்
  • வெள்ளாறு நதியில் வெள்ளப்பெருக்கெடுத்த போது சேதம் உண்டாகாதிருக்க நந்தி தலையை திருப்பி பார்த்து வெள்ளம் வடிந்ததால் சற்று திரும்பியுள்ள நந்தியின் தலை
  • ஏழு துறைகளில்(அரத்துறை , ஆதித்துறை ( காரியனூர் ) , திருவாலந்துறை , திருமாந்துறை , ஆடுதுறை , திருவதிட்டத்துறை ( திட்டக்குடி ) , திருக்கைத்துறை) சப்தரிஷிகள் ஈசனை வழிபட்ட தலம்
  • செவ்வாயும், சனியும் தங்கள் தோஷம் நீங்க இத்தலத்தில் சிவ பூஜை செய்து வழிபட்ட தலம்.

 

தலம் திருநெல்வாயில் அரத்துறை
பிற பெயர்கள் தீர்த்தபுரி,திருவரத்துறை , திருவட்டுறை, திருவட்டத்துறை,  நெல்வாயில் அருத்துறை, சிவபுரி
இறைவன் தீர்த்தபுரீஸ்வரர், ஆனந்தீஸ்வரர் , அரத்துறைநாதர்
இறைவி திரிபுரசுந்தரி, ஆனந்தநாயகி , அரத்துறைநாயகி
தல விருட்சம் ஆலமரம்
தீர்த்தம் நீலமலர்ப்பொய்கை , நிவாநதி (வடவெள்ளாறு நதி)
விழாக்கள் மகாசிவராத்திரி , மார்கழி திருவாதிரை , பங்குனி உத்திரம்
மாவட்டம் கடலூர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி காலை 7.00 மணி முதல் 11.00 மணி வரை,

மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை

 

அருள்மிகு தீர்த்தபுரீஸ்வரர் (அரத்துறைநாதர்) திருக்கோவில்

திருவட்டுறை அஞ்சல்

திட்டக்குடி வட்டம்

கடலூர் மாவட்டம்

PIN – 606111

04143-246303, 04143-246467

வழிபட்டவர்கள் மகாவிஷ்ணு, ஆதிசேஷன், சனி, செவ்வாய், வால்மிகி முனிவர், அரவான்,சனகர், ஆதி சங்கரர், குகை நமச்சிவாயர், இராமலிங்க அடிகள்,சேர, சோழ, பாண்டியர்கள்
பாடியவர்கள் திருநாவுக்கரசர் 1 பதிகம் , திருஞானசம்பந்தர் 1 பதிகம் , சுந்தரர் 1 பதிகம், அருணகிரிநாதர்
நிர்வாகம்
இருப்பிடம் திருப்பெண்ணாகடதிற்குத் தென்மேற்கே 7-கி. மீ. தூரம். விருதாச்சலம் தொழுதூர் சாலையில் கொடிகளம் என்னும் இடத்தில் இறங்கி, தெற்கே 1-கி. மீ. தூரம்
இதர குறிப்புகள் தேவாரத் தலங்களில் 191  வது தலம்

நடு நாட்டுத் தலங்களில்  1   வது தலம்.

அருள்மிகு திரிபுரசுந்தரி உடனாகிய தீர்த்தபுரீஸ்வரர் 

combined

புகைப்படம் : தினமலர்

பாடியவர்                                          திருநாவுக்கரசர்

திருமுறை                                       5

பதிக எண்                                          3

திருமுறை எண்                            9

 

பாடல்

 

காழி யானைக் கனவிடை யூருமெய்

வாழி யானைவல் லோருமென் றின்னவர்

ஆழி யான்பிர மற்கும ரத்துறை

ஊழி யானைக்கண் டீர்நாந் தொழுவதே.

 

பொருள்

 

சீகாழிப்பதியில் உறைபவரும், பெருமையை உடைய இடப வாகனத்தில் செல்லும் நித்தத் திருமேனி உள்ளவரும், பிறரால் ‘வல்லோர்கள்’ என்று கூறப்படுவோராகிய திருமால் மற்றும் பிரமனும் ஊழிக் காலத்தில் ஒடுங்கும் இடமாகக் கூடியவரும் அரத்துறை மேவும் பரமனே, நாம் தொழுகின்ற இறைவனாகிய நம் சிவபெருமான் ஆவார்.

 

கருத்து

 

திருமாலும் பிரமனும் வணங்க, ஊழிதோறும் விளங்கும் அரத்துறை எனும் பொருள் பிரித்து அறிவார்களும் உளர்.

 

 

பாடியவர்                          சுந்தரர்

திருமுறை                       7

பதிக எண்                          3

திருமுறை எண்            8

 

பாடல்

 

திண்டேர்நெடு வீதி யிலங்கையர்கோன்

திரள்தோள்இரு பஃதும்நெ ரித்தருளி

ஞெண்டாடுநெ டுவயல் சூழ்புறவின்

நெல்வாயி லரத்துறை நின்மலனே

பண்டேமிக நான்செய்த பாக்கியத்தாற்

பரஞ்சோதிநின் நாமம் பயிலப்பெற்றேன்

அண்டாஅம ரர்க்கம ரர்பெருமான்

அடியேன்உய்யப் போவதொர் சூழல்சொல்லே.

 

 

பொருள்

 

வலிமை மிக்க தோள்கள் இருபதையும் நெரித்து பின் (அவன் கர்வம் அழிந்தப்பின்) அவனுக்கு அருளி, நண்டுகள் உலாவுகின்ற நீண்ட வயல் சூழ்ந்த, முல்லை நிலத்தையுடைய திருநெல்வாயில் அரத்துறையின் கண் எழுந்தருளியிருக்கின்ற மாசற்றவனே,  மேலான ஒளி வடிவினனே, தேவனே, தேவர்க்குத் தேவராய் உள்ளார்க்குத் தலைவனே, நான் முற்பிறவிகளில் செய்த நல்வினையினால் உனது பெயரைப் பல காலமும் சொல்லும் பேற்றினைப் பெற்றேன்; இனி, அடியேன், உலகியலினின்றும் பிழைத்துப் போவதற்குரிய ஒரு வழியினைச் சொல்லியருள்.

 

கருத்து

தேவர்க்குத் தேவர், காரணக் கடவுளர் –  அயனும், மாலும்

நாமமாவது – திருவைந்தெழுத்து

(இத் திருத்தலம் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)

Loading

சமூக ஊடகங்கள்