சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்

வைசேஷிகம் – சிறு விளக்கம்

·   ஆன்மா வின் தன்மைகளை கூறல்
·   ஆன்மா அழிவற்றதாக என்றும் உள்ளது.
·   அது அருவமாக இருக்கும்
·   அது ஜீவான்மா, பரமான்மா என்று இருவகையாகப் பிரியும்.
·   பரமான்மா  – பிறப்பிலி
·   ஜீவான்மாபல் வேறு பிறப்புக்கள் எடுக்கும்.
·   புண்ணிய பாவங்களுக்கு ஏற்ப  மனத்தில் தன்மையால் ஞானம் கிடைக்கும்.
·   இயல்புகளை அறியும் ஞானத்தால் கர்மம் நசிக்கும்.
·   அவ்வாறு நசிக்க ஞானமின்றி செயல் அற்று இருப்பதே முக்தி.
·   வேதம் ஈஸ்வரனால் செய்யப்பட்டது. 
மீமாம்சை  – சிறு விளக்கம்
·   வேதங்களில் சொல்லப்பட்டவைகளே அனுட்டிபவர்கள் சொர்கத்தை சேருவார்கள்
·   வேதம் சுயம்பு
·   பிரபஞ்சம்  நித்யம் அஃதாவது என்றும் உள்ளது.
·   ஆன்மாக்கள் பல உண்டு.
·   ஆன்மாக்களுக்கு செய்த கர்மத்திற்கு ஏற்ப அதற்கான பலன்களை அனுபவிப்பதால் அதைத் தர ஈஸ்வரன் என்ற ஒருவன் தேவையில்லை
வேதாந்தம் – சிறு விளக்கம்
·   உபநிஷத்துக்களில் சொல்லப்படும் (பரம) ஆன்மா இந்த உலகப்படைப்பிற்கான காரணம்
·   இதுவே உலகத்தை வழி நடத்துகிறது
·   (ஜீவ) ஆன்மா தனது பந்தத்தை அறுக்க இதுவே உபாயம்.
·   அந்த பந்தம் நீங்காததற்கு காரணத்தை விளக்கும்
·   பந்தம் நீங்கியப்பின் அடையும் புருடன் இது என்று கூறும்


ஆறு தத்துவ சாத்திரங்களையும் படைத்தவர்கள் யார் யார்?
சாங்கியம் – கபிலர்
பாதஞ்சலம் – பதஞ்சலி
நியாயம் – அக்ஷபாதர்
வைசேஷிகம் – கணாதர்
மீமாம்சை – ஜைமினி
வேதாந்தம் – வியாசர்




Loading

சமூக ஊடகங்கள்

சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்

சாங்கியம்சிறு விளக்கம்

·   தேகாதி பிரபஞ்சத்திற்கு காரணமானதும், அருவமாகவும், என்றும் உள்ளதாகவும், எல்லா பொருள்களிலும் நீக்கமற நிறைந்தும் ஜடமாகவும் உடைய மாயை உண்டு என உணர்தல்.
·   அதனோடு தொடர்புடைய ஆன்மா உண்டு என்றும் அறிதல்.
·   ஆன்மாவுக்கு அஞ்ஞானத்தால் சுக துக்ககங்கள் உண்டு என்றும், அதை பிரித்து உணரும் பகுத்தறிவதாலே அஞ்ஞானம் நீங்கி ஆன்மா முக்தி அடையும் என்றும் உணர்தல்.
·   பல பிறவிகளுக்குப் பின் முக்தி உண்டு என உணர்தல்,
·   ஈஸ்வரனை தத்துவ விசாரணை மூலமாக அறிய இயலா நிலையில் ஈஸ்வரன் என்று ஒருவன் இல்லை என்று கூறுவது.
பாதஞ்சலம் –  சிறு விளக்கம்

சாங்கிய கருத்துக்களை ஏற்பது. அதோடு மட்டுமல்லாமல் அதற்கு மேல் படைத்தல், அழித்தல் ஆகிய தொழில்களை செய்யவும், உண்மை ஞானத்தை உபதேசிப்பவனாகவும் உடைய ஈஸ்வரன் ஒருவன் உண்டு எனவும், அவனை யோக முறையினால் காண இயலும் என்றும் விளக்குவது.
நியாயம் –  சிறு விளக்கம்
தர்கத்தின் வாயிலாக ஜடப் பொருள்களையும் சித்துப்  பொருள்களையும் தனித்தனியே நித்தியப் பொருள்களாக அறிதல். ஜடத்தில் இருந்து சித்தினை பிரித்து அறிந்து முக்தி என்றும் கூறுதல் . சித்து மனம் என்றும் அது அணுவினை விட சிறியது என்றும் கூறும்.

Loading

சமூக ஊடகங்கள்

மகேசுவரமூர்த்தங்கள் 8/25 சுகாசனர்

மகேசுவரமூர்த்தங்கள் 8/25 சுகாசனர்
வடிவம்
·   உருவ திருமேனி – யோக வடிவம்
·   உமா தேவிக்கு சிவாகமப் பொருளை விளக்கிய திருவடிவம்
·   சுகாசனம் – சுவத்திகம், கோமுகம், பதுமம், வீரம், கேசரி, பத்திரம், முக்தம், மயூரம், சுகம் என்ற ஒன்பது வகையான ஆசனங்களில் ஒன்று.
·   சத்யோஜாத முகத்திலில் இருந்து தோன்றிய வடிவம்.
·   இடது கால் – மடக்கி
·   வலது கால் – தொங்க விட்டபடி
·   இடது மேல் திருக்கரத்தில் – மான்
·   வலது மேல் திருக்கரத்தில் – மழு
·   வலது கீழ் திருக்கரத்தில் – அபயம்
·   இடது கீழ் திருக்கரத்தில் – வரத கரம்
வேறு பெயர்கள்
சுகாசன மூர்த்தி
நலவிருக்கையன்
வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்
சுவேதாரண்யேசுவர் கோயில், திருவெண்காடு
மீனாட்சி அம்மன் ஆலயம் – இரண்டாம் பிரகாரம் ,மதுரை
கயிலாய நாதர், காஞ்சிபுரம்
சட்டைநாதர் திருக்கோயில்சீர்காழி
சிதம்பரம்
இராமேஸ்வரம்
கங்கை கொண்ட சோழபுரம்
இதரக் குறிப்புகள்
வகைகள்
உமாசகித சுகாசனர்
உமா மகேசுவர சுகாசனர்
சோமாஸ்கந்த சுகாசனர்
விளக்க நூல்கள்
சில்ப ரத்தினம்
ஸ்ரீதத்துவநிதி
Image : Dinamalar
உதவி : சைவ சித்தாந்தம் மற்றும் வலைத் தளங்கள்

Loading

சமூக ஊடகங்கள்

சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்

புராணம் என்பது என்ன?

வேத ஆகமப் பொருளை சரித்திர வடிவில் விவரிப்பது.

புராணத்தில் விவரிக்கப்படுபவை எவை? விளக்கங்கள்

உலக் தோற்றம், உயிர் இறைவனை அடைதல், பாரம்பரியங்கள், அவற்றோடு தொர்டபுடைய கதைகள், மனுவந்தரங்கள் ஆகியவற்றை கூறும். இது சைவம் முதல் ஆக்கினேயம் வரை உள்ள பதினெட்டு ஆகும்.


சிவபுராணம்
சைவம் ,காந்தம், லிங்கம், கூர்மம், வாமனம், வராகம், பௌடிகம்
மச்சியம், மார்க்கண்டேயம், பிரமாண்டம் – 10
விஷ்ணுபுராணம்
நாரதீயம்,பாகவதம்,காரூடம்,வைணவம் – 4
பிரமபுராணம்
பிரமம், பதுமம் – 2
சூரியபுராணம்
பிரமகைவர்த்தம் – 1
அக்னிபுராணம்
ஆக்கிநேயம் – 1
உபபுராணங்கள்
உசனம்,கபிலம்,காளி,சனற்குமாரம்,சாம்பவம்,சிவதன்மம்,சௌரம்,
தூருவாசம்,நந்தி,நாரசிங்கம்,நாரதீயம்,பராசரம்,பார்க்கவம்,
ஆங்கிரம்,மாரீசம்,மானவம்,வாசிட்டலைங்கம், வாருணம் – 18


சாத்திரங்கள் எதனை உணர்த்தும்?
சிஷைவேதங்களை ஓதும் முறை
கற்பம்வேதங்களில் விதித்த கர்மங்களை அனுட்டிக்கும் முறை
சோதிடம்வேதங்களை ஒதுவதற்கான காலம்
வியாகரணம்வேதங்களின் எழுத்து, சொல், பொருள் இலக்கணம்
நிருத்தம்சொற்களின் வியாக்யாணம்
சந்தம்வேத மந்திரங்களின் சந்தங்களின் இலக்கணம்
இவை தவிர வேறு சாத்திரங்கள் இருக்கின்றனவா?

சாங்கியம், பாதஞ்சலம், நியாயம், வைசேஷிகம், மீமாம்சை மற்றும் வேதாந்தம் என ஆறு தத்துவ சாத்திரங்கள் உள்ளன.

Loading

சமூக ஊடகங்கள்

மகேசுவரமூர்த்தங்கள் 7/25 லிங்கோத்பவர்

வடிவம்
·   உருவம் அற்ற திருமேனியை உருவ வழிபாடு கொள்ளச் செய்யும் வழிபாடு முறை
·   மகா சிவராத்ரியுடன் தொடர்புடையது
·   திருருவத் திருமேனிஅண்ணாமலையார் வடிவம்
·   அக்னி பிழம்புகள் இயல்பாய் மேல் நோக்கி
·   வளர்ந்த ஜடா முடி
·   கரம்மான, மழு, வரத கரம்
·   மூர்த்தத்தின் நடுவில் நெருப்பு
·   வலப்புறம் அன்ன வடிவில் ப்ரம்மா,
·   இடப்புறம் பன்றிவடிவில் திருமால்
வேறு பெயர்கள்
 
லிங்கோற்பவர்
திருவிலங்கம்
வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்
 
  • ஜலநாத ஈஸ்வரர், திருவூறல், (தக்கோலம்)
  • திருமெய்ஞானம் – தஞ்சை மாவட்டம்
  • தேவிகாபுரம், பெரியநாயகி அம்மன் கோயில்,ஆரணி வட்டம் –  திருவண்ணாமலைமாவட்டம்
  • ஏகாம்பரநாதர் கோவில் – காஞ்சிபுரம்
  • திருக்கலயநல்லூர் (சாக்கோட்டை)
  • திருகோடிக்காவல்
  • முக்தீஸ்வரர் ஆலயம், – மதுரை –  அன்னமும், பன்றியும் தோற்ற பிறகு சுயம் உணர்ந்து தாளில் இருக்கும் வடிவம்
  • சத்யகிரி சிவ குகை – திருமயம்
  • நல்துணை ஈஸ்வரம் – புஞ்சை
  • ப்ரம்மபுரீஸ்வரர் – புள்ளமங்கை
  • ப்ரஹதீஸ்வரர் – தஞ்சாவூர்
  • திருபுவனம்
  • ஸ்ரீ சந்தரேசுவரர் கோயில் – அருப்புக்கோட்டை
  • பால்வண்ண நாதர் கோயில்  – கரிவலம் வந்தநல்லூர் –  திருநெல்வேலி மாவட்டம்
  • தாணுமாலய சுவாமி திருக்கோயில் –  சுசீந்திரம் 
  • கயிலைநாதர் கோயில் – காஞ்சிபுரம் (எட்டு தோள்களுடன் கூடிய லிங்கோத்பவர்)
  • மலைக் கொழுந்தீஸ்வரர் குகைக் கோயில் – குன்றக்குடி
  • கோமேஸ்வரர் ஆலயம் – பனகல், நளகொண்டா வட்டம், ஆந்திர மாநிலம் 
  • குடிமல்லூர்
  • பிள்ளையார்பட்டி
  • திருச்செட்டாங்குடி
  • நாகப்பட்டினம்
  • கூவம்
  • கூளம்பந்தல்
இதரக் குறிப்புகள்
 
அடிமுடி தேடிய கதை  விவரிக்கப்பட்டுள்ள நூலகள்
ருக்வேதசம்ஹிதை
சரபோப நிஷத்
லிங்க புராணம்
கூர்ம புராணம்
வாயுபுராணம்
சிவ மகா புராணம்
உபமன்யு பக்த விலாசம்
மகா ஸ்காந்தம்
நாரதம்
கந்த புராணம்
அருணகிரி புராணம்
சிவராத்ரி புராணம்
அருணாசல புராணம்
உதவி : சைவ சித்தாந்தம் மற்றும் வலைத் தளங்கள்

Loading

சமூக ஊடகங்கள்

சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்

இவ்வாறு வேதம், சிவாகமம் என்று இரண்டு நூல்கள் தேவைஇல்லை என்று கூறுதல் வேத நிந்தை ஆகுமா?

ஆகாது. ஏனெனில் இரண்டுமே ஒன்றை ஒன்று சார்ந்திருக்கின்றன். சிவாகம ஞானம் அடைய வேதம் முக்கியம். வேதம் மட்டுமே தெரிவதால் ஞானம் அடைதல் தேவை இல்லை என்று கூற இயலாது. எனவே சரியை, கிரியை, யோகம்   இவற்றால் அடையப்பெறும் ஞானம் மிக முக்கியம்.
எனில்  சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய  சனகாதி முனிவர்களுக்கு ஈஸ்வரன் அருளியது வேதமா அல்லது சிவாகமமா?

முதலில் சுருக்கமான வேதத்தையும் அது குறித்து அவர்கள் தெளிவடையாமையால் பின்னர் சிவாகமத்தையும் விரிந்துரைத்தார்.
வேதம் மற்றும் சிவாகமங்களின் தோற்றத்தில் கால வேறுபாடு உண்டா? அவைகள் எப்போழுது தோன்றின?

சிவனின் ஊர்த்துவ முகமாகிய ஈசான்யத்தில் இருந்து 28 சிவாகமங்களும், மற்ற நான்கு முகங்களாகிய தத்புருஷம், அகோரம், வாம தேயம், சத்யோஜாதம் ஆகியவற்றில் இருந்து நான்கு வேதங்களும் ஒரே காலத்தில் தோன்றின.
ஆகமங்கள் ஐந்து வகைப்படும் என்றும் அவை லௌதிகம், வைதிகம், அத்தியான்மீகம், அதிமார்கம் மற்றும் மாந்திரம் எனப்படும் என்று கூறப்படுகின்றன.இவைகள் சிவாகமத்தின் பகுதியா?

மாந்திரம்சிவாகமம்
லௌதிகம்இகலோக வாழ்வு
வைதிகம்காலாந்திரம்
அத்தியான்மீகம்ஆன்ம விசாரம்
அதிமார்கம்யோகமார்க அறிவு
காமிகாதி இருபத்திஎட்டு ஆகமங்களுக்கு வேறாக அல்லது அதிகமாக வேறு சிவாகமங்கள் உண்டா?

காமிகாதிகளை முதன்மையாகக் கொண்டு குரு முதலிய இருடியர் செய்த உபாகமங்கள்(உப+ஆகமங்கள்) இருநூற்று ஏழு  ஆகும்.

Loading

சமூக ஊடகங்கள்

மகேசுவரமூர்த்தங்கள் 6/25 பிட்சாடனர்

வடிவம்
 
·   உருவத் திருமேனி
·   தாருகாவனத்து ரிஷிகளின் ஆணவத்தினை அழிக்க எடுத்த திருக்கோலம்
·   பிறந்த மேனியோடு இருக்கும் கோலம்
·   சிவனுக்குரிய அனைத்து ஆபரணங்களும்.
·   இடது காலை ஊன்றி வலது காலை சற்றே வளைத்து நிற்கும் தோற்றம்.
·   கைகளில் பிரம்ம கபாலப் பாத்திரம் 
·   தொடரும்  பூதகணம் தலையில் பிச்சைப் பாத்திரத்துடன்
·   தலையில் ஜடாபாரம் அணிந்து, பிறைச் சந்திரன்
·   அருகில் ரிஷி பத்தினி
·   இடையில் சர்ப்ப மேகலை
·   முன் இடது கையில் கபாலமம்,
·   முன் வலது கை மான் அல்லது மானிற்கு அருகம்புல் தருவது போல்
·   பின் வலத் திருக்கரத்தில்  நாகத்தைப் பிடித்தவாறு அல்லது டமரு
·   பின் இடத் திருக்கரத்தில் சூலம்
·   வலது கால் –  வீரக் கழலுடன்
·   மேனியில் அணிந்துள்ள பாம்புகள்  – யோக சாதனைகள்
·   பாதச் சிலம்பு  – ஆகமங்கள்
·   பாதுகைகள் – வேதங்கள்
·   கோலம் காட்டும் ஐந்து தொழில்கள்
Ø  உடுக்கை ஒலி -உலக சிருஷ்டி
Ø  திரிசூலம் – அழித்தல்
Ø  மானுக்குப் புல் கொடுத்தல் – அருள் புரிதல்
Ø  குண்டோதரனை அடக்கி அருளுதல்-மறைத்தல்
Ø  கபாலம் ஏந்தி நிற்பது – காத்தல்.
·   சிவனின் தத்புருஷம் முகத்தினை சார்ந்தது
·   ப்ரம்மனின் தலை கொய்ததற்காக ஏற்பட்ட தோஷ நிவர்த்திக்காக காசி சென்று அன்ன பூரணியிடம் பிச்சை ஏற்ற பிறகு ப்ரம்மஹத்தி தோஷ நிவர்த்தி
·   வக்கிரம், சாந்தம், வசீகரம், ஆனந்தம், கருணை முதலிய பஞ்ச குணங்களில்  வசீகர மூர்த்தி
·   இதன் வேறு வடிவம் கஜ சம்ஹார மூர்த்தி
 
வேறு பெயர்கள்
பிச்சை உவக்கும் பெருமான்
பிச்சாடனர்
பிச்சாண்டை
பிச்சாண்டவர்
பிச்சதேவர்
பிச்சைப் பெருமான்
 
வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்
Ø திருநாமநல்லூர், நாகப்பட்டினம், திருக்காரவாசல், வழுவூர், கரந்தை, திருச்செங்காட்டங்குடி, திருவெண்காடு (மேலப்பெரும்பள்ளம் – வீணை ஏந்திய கோலம்) ஆகிய கோயில்களில் உலோகத் திருமேனி
Ø காஞ்சிக் கைலாசநாதர்
Ø திருவையாறு
Ø திருவிடைமருதூர்
Ø குடந்தை
Ø பந்தநல்லூர்
Ø திருப்பராய்த்துறை
Ø உத்தமர் கோயில்
Ø கங்கைகொண்ட சோழபுரம்
Ø திருவட்டது​றை – எட்டு கரங்களுடன் சூலம் ஏந்தி அகோர தாண்டவமூர்த்தி
Ø சிந்தாமணி – விழுப்புரம் மாவட்டம்
Ø திருவீழிமிழலை
Ø அயனீஸ்வரம் – அம்பாசமுத்திரத்திம்,  திருநெல்வேலி
Ø திருஉத்தரகோசமங்கை
 
இதரக் குறிப்புகள்
1.
ஐந்து வகை பிச்சாடனர்கள் சிலை வடிவங்கள்
நகாரச்சிலை
மகாரச்சிலை
சிகாரச்சிலை
வாகாரச்சிலை
யகாரச்சிலை
* முதல் எழுத்துக்கள் ஊழி முதல்வனைக் குறிக்கும் சொற்கள்
2.
காஞ்சிக் கைலாசநாதர் கோயிலில் இரண்டு கைகளைக் கொண்ட பிட்சாடனர் படிமம் – கிபீஞ்சையும் (மயில்தோகைக் கற்றை) அக்க மாலையைப் பிடித்தவாறு சின்முத்திரை
3.
சான்றுகள்
காசியப சில்பசாஸ்திரம்,
சகளாதிகாரம்,
ஸ்ரீதத்துவநிதி
அம்சுமத்பேதாகமம்,
காமிகம்,
காரணாகமம்,
சில்ப ரத்தினம்
திருஞானசம்மந்தர் தேவாரம் – 3.100.1
கந்தபுராணம்,
திருவிளையாடற்புராணம்,
காஞ்சிப் புராணம்
4.
சிவாலயங்களில் நடக்கும் பிரம்மோற்சவ விழாவில் 8-ம் நாள் பிட்சாடனர் கோலம்
5.
சோழர் கலை வடிவங்களில் முக்கிய வடிவம்
 
6.
பரந்துல கேழும் படைத்த பிரானை
இரந்துணி என்பர்கள் எற்றுக் கிரங்கும்
நிரந்தரம் ஆக நினையும் அடியார்
இரந்துண்டு தன்கழல் எட்டச்செய் தானே
பரந்த ஏழு உலகங்களையும் உண்டாக்கிய இறைவனை இரந்து பிழைப்பவன் என்று  கூறுகிறார்கள். தன்னை நினைக்கும் அடியார்கள் பிச்சை எடுத்து உண்டு தன் திருவடியை அடையச் செய்வதற்காகவே அவன் அவ்வாறு இருக்கிறான். –  திருமூலர்.
Image : saivasiddhanta.in
உதவி : சைவ சித்தாந்தம் மற்றும் வலைத் தளங்கள்

Loading

சமூக ஊடகங்கள்

சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்

பதி, பசு, பாசம் ஆகியவை ஞானத்தால் அடையப்பெறுகின்றன எனில் சரியை, கிரியை, யோகம், எதற்கு?
ஞானம் ஆன்மாவின் குணம். இந்த ஞானம் தேகம், இந்திரியம், பிராணன் மற்றும் கரணம் இவற்றோடு கலவாத போது அது அதன் குணத்தில் இருக்கிறது. அவ்வாறு இல்லாமல் தேகம் மற்றும் முன் கூறியவற்றோடு கூடி(கண், காது, மனம், புத்தி இன்ன பிற), அதன் தன்மையை இழக்கிறது.

இவ்வாறு விஷ சுகத்தில் பட்டு கீழ்வழிக்கு இழுத்துச் செல்லும் தேகாதி இந்திரியங்களை தடுத்து பர சுக வாழ்வினில் பதித்திடச் செய்தலே சரியை, கிரியை மற்றும் யோகத்தின் பண்பாகும்.
சரியை  – தேகத்தை ஈஸ்வர விஷயத்தில் செலுத்துதல்
கிரியை –  இந்திரியங்களை செலுத்துதல்
யோகம் –  பிராணாந்தக்கரணங்களை செலுத்துதல்
ஞானம்  – ஈஸ்வரனிடத்தில் அடங்குதல்
சரியை, கிரியை, யோகம் ஆகியவைகள் முதல் நிலைகள். இவைகளை அடைந்த பின்னரே ஞானம் என்ற உயர் நிலையை அடைய முடியும்
வேதத்திலும் சிவன் பற்றிய செய்திகள் உள்ளன. சிவாகமத்திலும் சிவன் பற்றிய செய்திகள் உள்ளன. எனில் இரண்டும் ஒன்றா அல்லது வேறுபாடு உள்ளதா?
வேதம் சுருங்கச் சொல்லும். சிவாகமம் விரிவாகச் சொல்லும்.
வேதம் மற்றும் சிவாகமம் ஆகியவை ஈஸ்வரனை  குறிப்பிடுகின்றன. எனில் எதற்காக இரண்டு விஷயங்களை எடுத்துக் கொள்ளவேண்டும்? இரண்டில் ஒன்று தேவையற்றதா?

வேதம்
சிவாகமம்
புருஷாத்தங்கள்
அறம், பொருள், இன்பம், வீடு
வீடு
உலகம்
உலகர்
சத்திநிபாதர்
வீடு சொரூப விளக்கம்
இல்லை
உண்டு
நூல் வகை
மூவுலக நூல்
வீட்டு நூல்

வேதம் வழியே ஞானம் விளைகிறது. ஞானம் அடைய முதல் மூன்று நிலைகளைக் கடக்க வேண்டும். எனவே இவை இரண்டுமே தேவைப்படுகின்றன.

Loading

சமூக ஊடகங்கள்

மகேசுவரமூர்த்தங்கள் 5/25 சந்திரசேகரர்

வடிவம்
சந்திரனை தலையில் தரித்த கோலம்(சேகரன் – காப்பாற்றுபவன். சந்திரனைக் காப்பவன்)
உருவத்திருமேனி
போக வடிவம்
திருக்கரங்கள் – மான், மழு,அபய ஹஸ்தம், ஊரு(தொடை) ஹஸ்த முத்திரை. கையைத் தொடையில் பதிந்த வண்ணம் காட்சி
கேவல சந்திரசேகர் –  தனித்த நிலையில் சிவபெருமான் தலையில் சந்திரன்.
உமா சந்திரசேகர் – உமையுடன் சிவபெருமான் தலையில் சந்திரன்.
ஆலிங்கண சந்திரசேகர்- சிவபெருமான் தலையில் சந்திரனைச் சூடி உமையை தழுவியநிலை
வேறு பெயர்கள்
பிறையோன்
பிறை சூடிய பெம்மான்
தூவெண்மதிசூடி
பிறையன்
மதிசெஞ்சடையோன்
இந்து சேகரன்
பிறைசூடி
மாமதிசூடி
சந்திர மௌலீஸ்வரர்,
சசிதரர் ,
சோம சுந்தரர்,
சசி மௌலீஸ்வரர்,
சோமநாதர்,
சசாங்க சேகரர்,
சசிசேகரர்
வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்
திருவீழிமிழலை
திருவான்மியூர்
வேங்கீஸ்வரம்
திருச்செந்துறை
திருப்புகலூர்- அக்னி பகவான் தவம் செய்து பாப விமோசனம் பெற்ற இடம்.
கம்பத்தடி மண்டபம், மீனாட்சி அம்மன் கோயில், மதுரை
அரம் பையங்கோட்டூர் (இலம்பையங்கோட்டூர்)
வவுனியா செட்டிக்குளம், இலங்கை
பெரும்பாலான சிவாலயங்களில் உற்சவ மூர்த்தி
மார்க்கண்டேயர் இயற்றியது –  சந்திரசேகர அஷ்டகம்
Image : Internet
உதவி : சைவ சித்தாந்தம் மற்றும் வலைத் தளங்கள்

Loading

சமூக ஊடகங்கள்

மகேசுவரமூர்த்தங்கள் 4/25 கல்யாணசுந்தரர்

வடிவம்
பார்வதி தேவியை மணக்க சிவன் எடுத்த வடிவம் – திருமண நாள் –  பங்குனி உத்திரம்
போக வடிவம்
உருவத் திருமேனி
இடங்களுக்கு ஏற்றவாறு சிவன் மேற்கரங்களில் மான், மழு. கீழ் கரங்கள் உமை அம்மை கைகள் பற்றி. மற்றொரு கரம் அருளல்.
அம்மை தலை வணங்கிய கோலம்.
சில இடங்களில்  சிவன், பார்வதி அருகினில் பெருமாள்
இஃது ஈசான்யத்தால் குறிப்பிடப்படுகிறது.
வடிவம் அமையப் பெற்ற சில திருக்கோயில்கள்
திருவேள்விக்குடி,குத்தாலம்,மயிலாடுதுறை வட்டம்
திருமணஞ்சேரி, ,குத்தாலம்,மயிலாடுதுறை வட்டம்
பவநாசம், விக்கரமசிங்கபுரம், அம்பா சமுத்திரம்
திருநல்லம் (கோனேரி ராஜபுரம்), தஞ்சாவூர் மாவட்டம்
திருவெண்காடு
திருவீழிமிழலை, திருவாரூர் மாவட்டம்
திருவொற்றியூர், சென்னை
திருச்சுழி, விருதுநகர்
Image : Internet
உதவி : சைவ சித்தாந்தம் மற்றும் வலைத் தளங்கள்

Loading

சமூக ஊடகங்கள்

சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்

சிவாகமம் என்பது என்ன?
ஆன்மாக்களுக்கு (மும்) மல நாசம் செய்து சிவஞானம் புகட்டி மோஷத்தை கொடுத்தல். இது பதியாகிய இறைவனிடத்தில் இருந்து வந்த கட்டளை.
சிவாகம எதனை உணர்த்தும்?
பதி, பசு மற்றும் பாசங்களின் இலக்கணத்தையும், சரியை, கிரியை, யோகம்  ஞானம்  ஆகியவற்றின் முறைமையையும், சாலோக, சாமிப, சாரூப, சாயுச்சியம்(முக்தி நிலையின் பல்வேறு நிலைகள்) ஆகிய சதுர் மூர்த்திகளையும் தெளிவாக உணர்த்தும்.
சிவாகமங்கள் எவை எவை?
சிவனின் ஐந்து திரு முகங்களில் இருந்தும் தோன்றியவையே சிவாகமங்கள். (சிவ பேதம் – 10 ஆகமங்கள், ருத்ர பேதம் – 18 ஆகமங்கள்)
காமிகம், யோகஜம், சிந்தியம், காரணம், அஜிதம், தீப்தம், சூக்ஷ்மம், சகஸ்ரம், அம்சுமான், சுப்ரபேதம், விஜயம், நிச்வாசம், ஸ்வாயம்பு, அநலம் ( ஆக்னேயம் ), வீரம், ரௌரவம், மகுடம், விமலம், சந்திரஞானம், முகபிம்பம், புரோக்கீதம், லளிதம், ஸித்தம், சந்தானம், சர்வோக்தம், பாரமேச்வரம், கிரணம், வாதுளம்.
சரியை, கிரியை, யோகம், ஞானம் – விளக்கம்
வழிபாடு முறை
நிலை
யோக உறுப்புக்கள்
வழிபட்டவர்கள்
சரியை
உடல் தொண்டு
பூசைப் பொருட்களைத் திரட்டல்
இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம்
திருநாவுக்கரசர்
கிரியை
ஒரு மூர்த்தியை வழிபடல்
புறப் பூசை
பிரத்தியாகாரம், தாரணை
திருஞானசம்பந்தர்
யோகம்
வழிபடும் மூர்த்தியை த்யானித்தல்
அகப் பூசை
தியானம்
சுந்தரர்
ஞானம்
அனுபவம்
அனுபவம்
சமாதி
மாணிக்கவாசகர்

* விளக்கம் முழுமை பெறவே வழிபட்டவர்கள் பெயர்கள் இணைக்கப்பட்டுள்ளன.

Loading

சமூக ஊடகங்கள்

மகேசுவரமூர்த்தங்கள் 3/25 இடபாரூட மூர்த்தி

மகேசுவரமூர்த்தங்கள் 3/25 இடபாரூட மூர்த்தி
 
வடிவம் 
 
காளை மீது அமர்ந்த திருக்கோலம் –  ரிஷபாரூடர்
காளை அருகில் நிற்கும் திருக்கோலம் –  ரிஷபாந்திகர்
காளை(ரிஷபம்) மீது அமர்ந்து இருக்கும் திருமேனி.
நான்கு கரங்கள்.
வலது மேல் கரம் –  மழு
இடது மேல் கரம் – மான்
வலது கீழ் கரம் – அபய முத்திரை
இடது கீழ் கரம் – வரத முத்திரை
பிறை சந்திரன் – தலையில்
உமை அம்மை இடப்புறம்
காளையாக மகாவிஷ்ணு
யோக வடிவத்தால் குறிப்பிடப்படும்
சிவனில் பஞ்ச முகத்தில் ஒன்றான ஈசான்ய முகத்தில் இருந்து தோற்றம்.
வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்
அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன் – மூலவர் – விராதனூர் (மதுரை)
சிதம்பரம்
திருவாவடுதுறை
திருலோக்கி – திருவிடை மருதூர் அருகில்
விசயமங்கை – கோவந்த புத்தூர் – (கோவிந்தபுத்தூர்) – சுதை
திருத்துறையூர் – பண்ருட்டி
திருக்கோலக்கா – நாகப்பட்டினம் – சுதை
திருப்பழுவூர் –  தற்போது (கீழைப் பழுவூர்) – அரியலூர் –  சுதை
திருவான்மியூர் – சென்னை –  சுதை
திருவேற்காடு – – சென்னை –  சுதை
குடுமியான்மலை – புதுக்கோட்டை
சங்கரன் கோவில் –  சங்கர நாராயணர் கோவில்
பெரும்பால சிவன் கோவில்களில் இந்த வடிவம் கற் சிற்பமாகவே காணப்படுகிறது.
 
Image : Internet

Loading

சமூக ஊடகங்கள்

அனுட்டானம் செய்வது ஏன்?




அனுட்டானம்செய்வது ஏன்?











ஆன்மீகம்: இறைவனை அடையும் முதல் வகைப்பயிற்சி
அறிவியல்:
1. தலைமுதல் கால் வரை உடலில்திருநீறு பூசுவதால், உடலில் இருக்கும் நீர்நீக்கப்படும்.
2. அனுட்டானம்செய்வதற்கு செப்பு பாத்திரங்களே அதிகம்பயன்படுத்தபடும். இவை உடலில் இருக்கும்மாசுக்களை நீக்க வல்லவை. இதனால்உடற் பிணிகள் நீங்கும்.
3. அனுட்டானம்  முறைகளுக்குதக்கவாறு 12 முதல் 16 இடங்களில் திருநீறு அணிவர். இதனால் அந்தஇடங்களில் இருக்கும் வலிகள் நீக்கப்படும். (தொடுவர்மம்போன்றவை)
4. மந்திரஉச்சாடன ஒலிகள் குறிப்பிட்ட காலமாத்திரைகளில் நிகழ்வதால், மூச்சுக் காற்று சீராகி மனஇறுக்கம் மற்றும் அதன் சார்ந்தவியாதிகள் தடுக்கப்படும்.
மற்ற விஷயங்களை குரு முகமாக அறிக.
Image : Internet

Loading

சமூக ஊடகங்கள்

மகேசுவரமூர்த்தங்கள் 2/25 நடராஜர்

வடிவம்
கேசாதி பாதமாக
முகம் – சாந்த சொருபம்
கூந்தல் அருகினில் நாகம் – கால சக்கரம்
கங்கை – அருளுதலை முடிவறச் செய்பவன்.
பிறைச் சந்திரன் – தீங்கு இழைத்தவர்களையும் மன்னித்து அருளுதல்
வலப்புற மேற்கை – டக்கா என்ற உடுக்கை(ப்ரணவ நாதம் தோற்றம்) – படைத்தல் 
இடப்புற மேற்கை – தீச்சுவாலை – அழித்தல் 
வலப்புற கீழ்க்கை – அபய முத்திரை – காத்தல் 
இடப்புற  கீழ்க்கை  – தும்பிக்கை நிலை (கஜ ஹஸ்தம்) – மறைத்தல்
சில இடங்களில் கைகளில் மான் – மனம் நிலையற்று இறைவனிடத்தில் மட்டும் ஒடுங்குதலைக் குறிக்கும்.
ஊற்றிய வலது கால் – த்ரோதண சக்தி – உயர் ஞானத் தேடல்
வலது கால் கீழ் – அபஸ்மாரன் அசுரன்(முயலகன் என்றும் கூறுவாரும் உண்டு) – முற்றுப்பெறா காமம்
தூக்கிய இடது கால் – ஆணவம் மற்றும் மாயை
குண்டலி சக்தி என்று குறிப்பிடப்படுவதும் உண்டு.
புலித்தோல் – இயற்கையை அணிதல்
நெருப்பு வட்டம் – ப்ரபஞ்ச நடனம்
நெருப்பு வட்டம் ஒவ்வொன்றும் மூன்று சிறு ஜ்வாலைகள் கொண்டது. அவை முறையே தோற்றம், இருப்பு மற்றும் முடிவு.
நெருப்பு வட்டத்திற்கும் எண்ணிக்கை உண்டு.
உடுக்கை ஒலி முனிவர்களுக்கு ஏற்றவாறு
பரதமுனி – நாட்டியம்
நாரதமுனி – சங்கீதம்
பாணினிமுனி – வியாகரணம்
பதஞ்சலிமுனி – யோகம்
வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்
திருவாலங்காடு  – ரத்தின சபை –கால் மாற்றி நடனம்
சிதம்பரம் – கனகசபை 
மதுரை  – ரஜிதசபை (வெள்ளி சபை) – கால் மாற்றி நடனம்(பாண்டிய மன்னன் வேண்டுகோளுக்கு இணங்கி)
திருநெல்வேலி – தாமிரசபை – திருநெல்வேலி
சித்திரசபை – திருக்குற்றாலம்
திரு உத்திரகோச மங்கை – மரகதத்திருமேனி
ஸ்ரீவில்லிபுத்தூர்  மடவார் விளாகம் –  ஒரே கல்லில் செய்யப்பட்ட நடராஜர்
பேரூர் பட்டீஸ்வரர்
தஞ்சை பெரிய கோவில்
மற்றும் எல்லா சிவாலயங்கள் ((பட்டியல் முடிவற்றதாகிறது)
சிறப்புகள்
கூத்தன் – கூத்துக்களை செய்பவன்
அம்பல வாணன் – அம்பலத்தில் ஆடுபவன்
நட ராஜன் – ஆடல் கலையில் அரசன்
சபேசன் – சபைகளில் ஆடுபவன்.(5 சபைகள் )
இதரக் குறிப்புகள்
அருணகிரி நாதருக்கு திருச்செந்தூரில் காட்சி
ஒன்றி இருந்து நினைமின்கள்! உம் தமக்கு ஊனம் இல்லை; 
கன்றிய காலனைக் காலால் கடிந்தான், அடியவற்கா; 
சென்று தொழுமின்கள், தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்!-
“என்று வந்தாய்?” என்னும் எம்பெருமான் தன் திருக்குறிப்பே.
குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்,
பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும், 
இனித்தம் உடைய எடுத்த பொன்பாதமும் காணப் பெற்றால் 
மனி(த்)தப் பிறவியும் வேண்டுவதே, இந்த மா நிலத்தே!
Image : Internet
உதவி : சைவ சித்தாந்தம் மற்றும் வலைத் தளங்கள்

Loading

சமூக ஊடகங்கள்

மகேசுவரமூர்த்தங்கள் – முன்னுரை

சிவன் என்ற சொல் சிவந்தவன் என்ற பொருளில் ஆளப்படுகிறது. ஆதி சித்தன், ஆதி தேவன், ஆதி நாதன், ஊழி முதல்வன் என்று எந்தப் பெயர் இட்டு அழைத்தாலும் அது முழுவதும் சிவன் பெயரே ஆகும்.
 
சிவன் பெரும்பாலும் அழித்தல் தொழிலுக்கு உரியவன் என்று கூறப்படுகிறது. அது நிச்சம்தான். ஊழ் வினைகளை அழிப்பவன்.
ருத்ரன், மகாதேவன் சதாசிவம் என்று பல பெயர்களில் அழைத்தாலும் அது வேறு வேறு வடிவங்களையே குறிக்கிறது.
சிவனுக்கான தொழில்கள் 5.
ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல் மற்றும் அருளுதல்.
சிவபெருமானின் இருபத்து ஐந்து சிவமூர்த்தங்கள் மகேசுவரமூர்த்தங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
சிவனுக்கான வடிவங்களும் பெயர்களும் எண்ணிக்கையில் வேறுபட்டாலும் சைவ சித்தாந்தக் கருத்துப்படி 25 ஆகும்.
அவையாவன (தருமை ஆதீனம் – சைவ சித்தாந்தப்படி)
  1. சோமாஸ்கந்தர்
  2. நடராஜர்
  3. ரிஷபாரூடர்
  4. கல்யாணசுந்தரர்
  5. சந்திரசேகரர்
  6. பிட்சாடனர்
  7. லிங்கோற்பவர்
  8. சுகாசனர்
  9. சக்திதரமூர்த்தி
  10. அர்த்தநாரீஸ்வரர்
  11. சக்ரவரதர்
  12. திரிமூர்த்தி
  13. ஹரிஹர்த்தர்
  14. தட்சிணாமூர்த்தி
  15. கங்காளர்
  16. காமாரி
  17. காலசம்ஹார மூர்த்தி
  18. சலந்தாரி
  19. திரிபுராரி
  20. சரபமூர்த்தி
  21. நீலகண்டர்
  22. திரிபாதர்
  23. ஏகபாதர்
  24. பைரவர்
  25. கங்காதர மூர்த்தி
ஒவ்வொரு கட்டுரையிலும் இறைவனின் வடிவங்கள் அதற்குரிய ஊர் , சிறப்புகள் போன்ற விஷயங்களை எழுத உள்ளேன்.
‘அவன் அருளாளே அவன் தாள் வணங்கி’  என்பதற்கு ஏற்ப அவன் துணை கொண்டு அவன் பற்றிய வடிவங்களை அவனே அருளட்டும்.

Loading

சமூக ஊடகங்கள்

சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்

கர்மத்தை அனுஷ்டிப்பதால் ஒருவன் சொர்க்கத்தையும், ஞானத்தை அனுஷ்டிப்பதால்  ஒருவன் மோட்சத்தையும் அடைய முடியும்.
இதை போதிப்பதில் உண்டாகும் வேறுபாடுகளூம் பிரிவுகளும் என்ன?

கர்மத்தை போதிப்பது வேதம்
ஞானத்தை போதிப்பது வேதாந்தம்
வியாசரின் சிஷ்யரான ஜைமினி செய்தது கர்ம சூத்திரம். இது கர்மம் என்பது பிரதானம். அதை மறுத்து வியாசர் செய்தது வேதாந்த சூத்திரம். இது ஞானம் என்பது பிரதானம்.
வியாசரது சூத்திரத்திற்கு பலர் விளக்கம் தந்திருக்கிறார்கள். ஸ்ரீகண்டாச்சாரியார், சங்கராச்சாரியார், பண்டிதாச்சாரியார், இராமானுஜாச்சாரியார் மற்றும் மத்துவச்சாரியார்.
இவர்களில் முதல் மூவரும் சிவனை சிவபிரமானம் உள்ளவர்கள். மற்றவர்கள் விஷ்ணு பிரமானம் உள்ளவர்கள்.
இவர்களின் விளக்கங்கள்
ஸ்ரீகண்டாச்சாரியார்சமவாதி
சங்கராச்சாரியார்விவர்த்தவாதி
பண்டிதாச்சாரியார்ஐக்கியவாதி
இராமானுஜாச்சாரியார்  – விசிஷ்ட்டாத்துவைதி
மத்துவச்சாரியார்துவைதி
இதில் முதல் மூவரும் பதி, பாச விசாரணையில் பேதப்பட்டாலும் சிவனைப் பரம்பொருள் என்று கொண்டதால் அவர்கள் சைவர்கள் என்று பேசப் படுகிறார்கள். என்றாலும் ஸ்ரீகண்டாச்சாரியார் ஸ்வாமிகளே சைவச்சாரியார் என பிரசித்தி பெற்றிருக்கிறார்கள்.
இது தவிர ஆயுர் வேதம், அர்த்த வேதம், தனுர் வேதம் மற்றும் காந்தர்வ வேதம் என்ற வகைகளும் உண்டு. இவைகள் கர்ம காண்டங்களோடு கூடி பயன் தரத் தக்கவை ஆகும்.

Loading

சமூக ஊடகங்கள்

சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்

வேதசிவாகமவியல்
பதியினது உபதேசம் பற்றி விளக்கும் வகையில் இருக்கும் உபதேசங்கள். இது உலகத்தின் இயல்புகளையும், ஆன்மாக்களையும் அது பற்றி நிற்கும் பாசத்தை பற்றியும் விளக்கும்பிறகு அப்பாச இயல்பில் இருந்து விலகுவதற்கான வழியையும் கூறும்.
 
இவைகள் ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்று வகைப்படுத்தப்படுகிறது. (இவற்றிற்கான விளக்கங்களுக்கு நாம் செல்லவில்லை)
 
இவ்வேதங்கள் இரண்டு காண்டங்கள் உடையது. கர்ம காண்டம் மற்றும் ஞான காண்டம்.
 
இவற்றுள் கர்ம காண்டம்(செய்த வினையின் விளைவு) அவற்றை மாற்ற ஜோதிடம் போன்ற புண்ணிய கர்மங்களை அறிந்து சொர்க்கத்தை விரும்பி செய்யப்படுவது)
 
ஞானகாண்டம்உலகம், உடல், உயிர் போன்ற நிலையாமைத் தத்துவங்களை கண்டு, தன்பற்று நீங்கி முக்தி அடைதலுக்கு உரிய உண்மை ஞானத்தை உணர்த்துவது.

Loading

சமூக ஊடகங்கள்

சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்

இவ்வாறு அந்த ஈஸ்வரன் சர்வ சுதந்திரத்துடன் இருக்கிறார். இதனை விளக்குவோம்.

சுதந்திரம் என்பது தன்னாலும் பிறராலும் தனக்கும் தடை இல்லாமல் இருத்தல். சீவன்கள் கன்மானுபவம் கூடி அதை அனுபவிக்க உரியவர்கள். வரம்பிற்கு உட்பட்ட அறிவு தொழில் உடையவர்கள். இவ்வாறு அவர்களுக்கு விதிக்கப்பட்டவைகளை முடித்தும், அவைகளை கெடும்படியாக தடுத்தும் செய்வதால் தனக்கு மேல் கர்த்தா இல்லாமல் அவர் சுதந்த்ரத்துடன் செயல்படுகிறார்.



அவ்வாறு செயல்படும் ஆன்மாக்கள் தனது குற்றம் நீங்கி குணப்படுதல் நிகழும். இதனை விளக்குவோம்.

சித்துப் பொருளாகிய ஆன்மாக்கள் தனது குற்றத்தை தானே நீக்குதல் ஆகா. தனுக் கரணங்களைக் கொடுத்து ஈஸ்வரன் தனது குற்றங்களை உணர வைக்கிறான். இவ்வாறு சிவாகமங்களை அறியும் ஆன்மாக்கள் அதிலிருந்து குற்றம் விலகி சுகிக்கும்.

இத்துடன் சித்தியல் நிறைவு பெறுகிறது.

Loading

சமூக ஊடகங்கள்

சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்





சைவசித்தாந்தம்சில சிந்தனைகள்













சர்வ வியாபகம் 

எல்லா பொருள்களிலும் நீக்கமற நிறைவுற்று இருத்தல்.

எல்லா பொருள்களிலும் நீக்கமற  நிறைவுற்று இருத்தல் முதல் தன்மை. அதோடு தளைகளை அறிவிக்கவும் அதோடு ஆன்மாக்களை தளைகளில் இருந்து விடுவிக்கும் பொருளாகவும் இருத்தல். அஃது பிரபஞ்சம் முழுவதும் நிறைந்தது.

இதைஉண்மை என்பதை பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட திருவிளையாடல் புராணம் உணர்த்தும்.
நித்யதத்துவம் 

அழிவில்லாது.

தனக்கான செயல்களை வினைகளில் வழியே கூட்ட பதி ஒன்று வேண்டும். அவ்வாறு செயவதற்கு தனக்கு மேல் ஒரு பதி இல்லாத பரம் பொருள்.
சுவையினை உணரும்  பசுக்கள் அவற்றின் தன்மைக்கு ஏற்ப அவற்றை அனுபவிப்பது போல், ஈஸ்வர அனுபவிப்பதை அனுபவிப்பதால் அவன் நித்ய  ஆனந்தராக இருத்தல் வேண்டும்.

Loading

சமூக ஊடகங்கள்

சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்

குற்றமற்ற ஒன்றும், இயக்க வல்லமை உடையதும், முற்றும் உணர்ந்த ஒருவன் இருக்க வேண்டும். அவனால் மட்டுமே குற்றம் உடைய ஆன்மாக்களை சரி செய்ய முடியும். (தேர்வு எழுதுவனை கண்காணிக்கும் கண்காணிப்பாளர் போல்). அந்த நிலைக்குப் பெயர் சர்வஞ்ஞத்வம்.

எல்லா பொருள்களை அறிவிக்கவும் அதனை அசைவிக்கவும் அவனால் முடியும் எனவே அவன் சர்வவியாபகன்.

பசுவாகிய தன்னை கட்டுப்படுத்த வேறு ஒரு பதி வேண்டும். அவன் எல்லா காலங்களிலும் (பிரளய காலம் உட்பட) எல்லா காலத்திலும் இருப்பதால் நித்யதத்துவம் உடையவன்.

Loading

சமூக ஊடகங்கள்
error: Content is protected !!