சித்த(ர்)த் துளிப்பு – 26-Apr-2021


பாடல்

எங்கும் நிறைத்துநின்ற ஏகபர வத்துவினை

அங்கைநெல் லிக்கனிபோல் யானறிந்தேன் மாங்குயிலே

அருவாய் உருவாகி அண்டர் அண்டந்தானாய்க்

கருவாகி வந்த கணக்கறிவாய் மாங்குயிலே

அருளிய சித்தர் : சதோக நாதர் என்ற யோகச் சித்தர்

பதவுரை

ஒரே பொருளாகி, இங்கு, அங்கு என்று இல்லாதவாறு எங்கும் நிறைந்து நின்றவனை உள்ளங்கை நெல்லிக்கனி போல் யான் அறிந்தேன்; அருவம் உடையதாகவும், உருவம் உடையாதாகவும் அண்டர் அண்டங்கள் எல்லாவற்றுக்கும் மூலக்காரண கருவாகி வந்த கணக்கினை அறிவாய்.

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.