சித்த(ர்)த் துளிப்பு – 24-Feb-2021


பாடல்

பற்றற்ற வத்துவைப் பற்றறக் கண்டோர்க்குக்
   குற்றங்கள் இல்லையடி குதம்பாய்
   குற்றங்கள் இல்லையடி
காட்சியாம் காட்சி கடந்த பிரமத்தைச்
   சூட்சியாய்ப் பார்ப்பாயடி குதம்பாய்
   சூட்சியாய்ப் பார்ப்பாயடி

அருளிய சித்தர் : குதம்பைச்சித்தர்

பதவுரை

எண் குணங்களில் ஒன்றான இயல்பாகவே பாசங்களினின்று நீங்கப் பெற்ற வஸ்துவை காரண காரியம் இல்லாமல் பற்றுதல் இல்லாமல் அந்த வஸ்துவைக் காண்போர்க்கு ஆணவம், மாயை, கண்மம் எனும் குற்றங்கள் இல்லாமல் நீங்கிவிடும்.

ஸ்தூலம், சூட்சுமம் ஆகியவற்றால் காணக்கூடிய காட்சிகளைக் கடந்து காட்சியாக (சாட்சி பாவம்) நிற்கக்கூடிய பிரம்மத்தினை சூட்சமமாக பார்ப்பாயாக.

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

error: Content is protected !!