
பாடல்
ஆராகிலும் நமக்கேவினை செய்யின் அவர் உடலும்
கூராகும் வாளுக் கிரை இடுவாள் கொன்றைவேணியான்
சீரார் மகுடத் தடி இணை சேர்க்கும் திரிபுரையாள்
வராகி வந்து குடி இருந்தாள் என்னை வாழ்விக்கவே
வாராகிமாலை – வீரை கவிராச பண்டிதர்
கருத்து – தன்னை அண்டிய அன்பர்களுக்கு துன்பம் ஏற்படுத்துபவர்களை வீழ்த்தி பகைவர்களுடம் இருந்து காப்பாள் என்று கூறும் பாடல்.
பதவுரை
கொன்றை மலர்களையும், அழகான மகுடத்தினையும் தன் கூந்தலில் சூடியவளும், தடியினை ஏந்தியவளுமான திரிபுரை எனப்படும் வராகி என்னை வாழ்விப்பதற்காக வந்து குடி இருந்தாள்; அதுமட்டும் அல்லாமல் எவராவது நமக்கு வினையின் காரணமாக துன்பம் ஏற்படுத்துமாறு செய்தால் அவர்கள் உடலை கூரான வாள் கொண்டு வெட்டி வாளுக்கு இரையாக்கி விடுவாள்.
விளக்க உரை
- சீர் – 1) செல்வம் 2) அழகு 3) நன்மை 4) பெருமை 5) புகழ் 6) இயல்பு 7) சமம் 8) கனம் 9) ஓசை 10) செய்யுளின் ஓருறுப்பு