வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 30

ஓவியம் : இணையம்

உமை

மனிதர்கள் தர்மத்திற்காகக் கொடுக்கத் தக்கவை எவை? அவற்றை நான் கேட்கவிரும்புகிறேன். அவற்றை எனக்குச் சொல்ல வேண்டும்.

உமா மகேஸ்வரர்

தொடரும் தர்மங்கள் ..

சுவர்ண தானம்

  • மிகச்சிறந்ததும் ஸ்வர்க்கத்தையும் நன்மையையும் தருவது.
  • பாவம் செய்த கொடியவனையும் சுவர்ண தானம் துலக்கி விடும்.
  • சுவர்ணமும் அக்நி என்பதாலும் எல்லா தேவர்களுக்குமாக இருப்பதாலும் சுவர்ணத்தைக் கொடுப்பதனால் எல்லாத்தேவர்களும் திருப்தி அடைந்தவராகி விரும்பினவற்றையெல்லாம் அடைவர். அவர்கள் சூரியன் அக்நி இவர்களின் சிறந்த லோகங்களை அடைவர்.
  • ஆதலால், பூமியில் மனிதர்கள் தங்களால் இயன்றவரையில் சுவர்ண தானம் செய்யவேண்டும். இதற்கு மேற்பட்டது உலகத்தில் ஒன்றுமில்லை.

கோதானம்

  • பிரம்மதேவர் உலகங்களைப் படைக்கக் கருதினபோதே எல்லாப் பிராணிகளின் ஜீவனத்திற்காகவும் கோக்களை முதலில் படைத்தால் அதனால் அவை தாய்களென்று சொல்லப்படுகின்றன.
  • வெருளாததும் நல்ல.அடக்கமுள்ளதும் நல்ல கன்றுள்ளதும் நிரம்பப் பாலுள்ளதுமான பசுவைத் தானம் செய்பவன் அதன்தேகத்தில் எத்தனை ரோமங்களிருக்கின்றனவோ அத்தனை வருஷங்கள் சுவர்க்க சுகங்களை அனுபவிப்பான், பொன்னால் அலங்கரிக்கப்பட்டகொம்பு.நுனிகளையுடைய கபிலைப் பசுவை வஸ்திரத்தோடும் கறக்க வெண்கலப் பாத்திரத்தோடும் தானம் செய்பவன் தன் புத்திர பெளத்திரர்களையும் தன் குலத்தின்முன் ஏழு தலைமுறைகளையும் பரலோகத்தில் மகிழ்ச்சி அடைவான்.
  • வீட்டில் பிறந்தவை, கிரயத்திற்கு வாங்கப்பட்டவை, பந்தயமாகக் கிடைத்தவை, பராக்கிரமத்தினால் வாங்கப்பட்ட வைகள், பஞ்ச காலங்களில் இடரப்பட்டுக் காப்பாற்றுவதற்காக வந்து சேர்ந்தவையுமான பசுக்களையும் மற்றும் இவ்வகை மார்க்கங்களால் கிடைத்த பசுக்களையும்  தானம் செய்யலாம்
  • இப்படி ஒரு வருஷம் செய்வது விரும்பினவற்றை எல்லாம் கொடுக்கும் . ஒவ்வொருநாளும் காலை மாலை இரண்டு வேளைகளிலும் பசுக்களுக்கு மங்களத்தைச் சொல்லவேண்டும். அவற்றிற்குத்தீங்கை எண் ணலாகாதென்று தர்மம்தெரிந்தவர்கள் நினைக்கின்றனர், பசுக்களே சிறந்த சுத்தம், உலகங்கள் பசுக்களிடம் இருக்கின்றன. பசுக்கள் உலகத்திற்குத் தாய்கள். அவற்றை எவ்வகையாலும் அவமதிக்காமல் இருக்கவேண்டும். அதனாலேதான் கோ தானம் சிறந்ததென்று சொல்லப்படுகிறது. கோக்களிடத்தில் பக்தியும் அவற்றைப் பூஜிப்பதும் மனிதனுக்குத் தீர்க்காயுளைக்கொடுக்கும்.
  • கோமயத்தை ஒருகாலும் அருவருக்கலாகாது. கோக்களின் மாமிசத்தை உண்ணலாகாது. கோக்களிடத்தில் எப்போதும் பக்தியோடு இருக்கவேண்டும்.
  • ஆகாரம் செய்வதற்கு முன்னமே தூயவனாக இருந்து பிறர் பசுவுக்கு ஒருபிடி புல் கொடுக்கவேண்டும்.
  • தயை அற்றவனுக்கும் நன்றி கெட்டவனுக்கும் பொருளாசை உள்ளவனுக்கும் பொய் சொல்லுகிறவனுக்கும் யாகத்தையும் சிராததையும் விட்டவனுக்கும் எவ்வகையிலும் கோ தானம் செய்யலாது.

தர்மங்கள் தொடரும்..

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *