ஓங்காரம் எனும் ஒர் புள்ளி – 1

*அன்னையை உபாசிக்கும் நிறை மாந்தர் ஒருவர் தன் பெயரை சத்திசிவம் என்று உரைத்தார். அவர் உரைத்தவாறே இந்த எழுத்துகள். மானுடப் பிறவி சார்ந்து எழுதுவதால்  சில பொருள் மாற்றங்களும், பிழைகளும் இருக்கலாம். நிறை எனில் குருவருள்.*

ப்ராமணன்

ப்ரமம் உணர்ந்தவன் பிராமணன். பொது நலத்திற்காக தன்னை அர்பணித்துக் கொண்டவன் என்றே தொடங்குவோம்.

ப்ரமம் என்பது என்ன?

விவரிக்க முற்படும் போது ஏழு சமுத்திரம் தாண்டி விவரிக்க வேண்டும். அவ்வாறு அதைத் தாண்டிய நிலையே ப்ரமம்.

ஏழ் சமுத்திரத்தினையும் தாண்டி, ஏழு புவனம் தாண்டி, ஏழு நிலை தாண்டி என விரியும்.

ஸ்ரீ சக்தியின் சொரூபமான சக்தி ரூபம் ஆகும்.

இது மொத்தம் 14 கலைகளைக் கொண்டது. சிவத்திற்கு ஏழு கலைகளையும், சக்திக்கு 7 கலைகளையும் கொண்டது.  இதுவே சிவசக்தி ஐக்கியம் ஆகும்.

அன்னை ஆகிய ஸ்ரீக்கு 7 கலைகள் ஆகும்.

அவை லயம், வாவண்யம், அர்த்தம், சாஸ்திரம், அலங்காரம், வசியம், மோகனம்

  • லயம் – ஒடுங்கும் நிலை

உ.ம்

  1. குதிரை லாயத்தில் ஒடுங்குதல்
  2. ஆடுகள் பட்டிகளில் ஒடுங்குதல்
  3. பறவைகள் கூட்டில் ஒடுங்குதல்
  4. ஆதி மனிதன் காட்டில் ஒடிங்கினான்.
  • லாவண்யம் – சிருங்காரம் ஆகிய மயக்கும் நிலை

உ.ம்

  1. பூ அழகு மயக்கும்
  2. வண்டு பூ அழகில் வாசனையில் மயங்கும்
  3. எதிர்பால் மயக்கும்
  4. இசை மயக்கும்
  5. மகுடி நாகத்தை மயக்கும்
  • அர்த்தம் – அறிவு – ஆசானான் கற்பிக்கப்படுவது. முன்னோர்கள் வகுத்துக் கொடுத்த நியதி. மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு ஏற்கும் நிலை என்றும் கூறலாம்.

உம்

  1. தீ சுடும்
  • சாஸ்திரம் – முன்னோர்கள் வகுத்துக் கொடுத்த நியதிகள்.இந்த நிலையில் அறிவு மலராமல் மொக்காக இருக்கும்.
  • அலங்காரம் – நாத மற்றும் ரூப வடிவமாகும் (கண்ணால் காணப்படும் காட்சி, காதால் கேட்கப்படும் ஒலி). நிறம் , ரூபம் ஒளி வடிவானவை
  • வசியம் – வாசி, வாசி என்பது மாறி சிவா. இது ராம நாமத்திற்கும் பொருந்தும்
  • மோகனம் – அன்னை மோகன நிலை மாற்ற இயலா எண்ணம் கொள்ளாவரையில் மோகனம் திறக்காது
  • இது விஷ்ணு மாயா, சிவ மாயா, ப்ரம மாயா என மூன்றாகும். இது ரஜோ, தமோ மற்றும் சத்துவ குணத்தின் கூறுகளாகும்

மனிதன் அறிவு நிலையை அடைந்து மீண்டும் எண்ணங்களால் குழந்தை நிலை அடைய வேண்டும்.  தாயாகி குழந்தையை ரசிப்பதும், குழந்தையாகி தாயை ரசிப்பதும் ஆன்ம விடுதலை அளிக்கும்.

7 சிவ கலைகள்  பற்றிய பதிவினை அடுத்துக் காண்போம்.

தொடரும்.,

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!