அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 19 (2018)

பாடல்

ஆனை உரித்தபகை அடி
     யேனொடு மீளக்கொலோ
ஊனை உயிர்வெருட்டி ஒள்ளி
     யானை நினைந்திருந்தேன்
வானை மதித்தமரர் வலஞ்
     செய்தெனை யேறவைக்க
ஆனை அருள்புரிந்தான் நொடித்
     தான்மலை உத்தமனே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

பதவுரை

யான்,  புறக்கருவிகளாலும், அகக்கருவிகளாலும் பெற்ற இந்த உடலையும், அதன் வழி பற்றி நிற்குமுயிரையும் விரைவாக செலுத்தி தூய்மையான வெண்ணிறம் கொண்டவனை நினைத்திருத்தலை மட்டும் செய்திருந்தேன்; அவ்வாறு செய்த இந்த சிறு செயலுக்காக திருக்கயிலையில்  வீற்றிருந்து அருளும் அம்முதல்வன், வான் உலகத்தையே பெரிதாக மதிக்கும் தேவர்கள் என்னை நாடி வரும்படியும், வந்து  வலம் செய்து ஏற்றிச் செல்லுமாறும் செய்து, ஓர் யானை ஊர்தியை எனக்கு அளித்தருளினான்; எம் மேல் வைத்த பேரருள் என்பது அவன் முன்னொருமுறை யானையை உரித்து  அதற்கு அருள் செய்யக் கருதியதற்கு ஒப்பானது.

விளக்க உரை

  • வெருட்டுதல் – அச்சுறுத்துதல், திகைக்கச்செய்தல், விலங்கு முதலியவற்றை ஓட்டுதல், விரைவாகச் செல்லத் தூண்டுதல்
  • ஒள்ளி – செம்பொன், சுக்கிரன், வெள்ளி

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *