அமுதமொழி – விளம்பி – சித்திரை – 20 (2018)

பாடல்

செய்யும் வினையின் முதல்யாவன் செய்யப்படும் அப்பொருள் யாவன்
ஐயமின்றி உளதாகும் அந்தக் கருமப் பயன் யாவன்
உய்யும் வினையின் பயன் விளைவில் ஊட்டி விடுப்பான் எவன் அந்தப்
பொய்யி இறையைக் கணபதியைப் புரிந்து சரணம் அடைகின்றோம்

விநாயகர் அஷ்டகம் – கச்சியப்பர்

பதவுரை

வினைகளின் பயனாக செய்யப்படும் தொடக்கச் செயல்களாகவும், அவ்வாறு  செய்யப்படும் எல்லாப் பொருள்களிலும் சந்தேகம் இல்லாமல் நிறைந்திருப்பவரும், அவ்வாறு நாம் செய்யும் வினைகளின் கருமப் பயனாக இருப்பவரும், அதன் பலனாக பெறப்படும் வினைகளின் கருமப் பயன்களில் இருந்து  நம்மை விடுப்பவரும்  ஆன பொய் என்று உரைக்க இயலாத மெய்யான  இறையாகிய கணபதியை  நாம் சரண் அடைகின்றோம்.

விளக்க உரை

  • ஊட்டி – பறவை,விலங்குகளின் உணவு, உணவு, குரல்வளை, மழை; ‘ஊட்டி விடுப்பான்’ – மழை எவரையும் எதிர்பாராமல் பொழிவது போல் வினைகளை நீங்குபவர்

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

அகோர மந்திரத்திற்கான உறுப்பு எது?
இதயம்

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *