‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ – அணங்கு
பொருள்
- அழகு; வடிவு
- தெய்வம்; தெய்வமகள்; தெய்வத்திற்கு ஒப்பான மாதர்
- வருத்தம்; நோய்; மையல்நோய்
- அச்சம்
- வெறியாட்டு
- பத்திரகாளி
- தேவர்க்காடும் கூத்து
- விருப்பம்
- மயக்க நோய்
- கொலை
- கொல்லிப்பாவை
- பெண்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
அஞ்சிலே ஒன்று பெற்றான்
அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக
ஆர் உயிர் காக்க ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற
அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான்
அவன் எம்மை அளித்துக் காப்பான்
கம்பராமாயணம் – பால காண்டம்
கருத்து உரை
ஐந்து பூதங்களில் ஒன்றான வாயுவினை குல தெய்வமாக கொண்ட கேசரீ எனும் வானரத் தலைவரின் மைந்தனானவர் அனுமன்; ஐந்து பூதங்களில் ஒன்றான (கடல்) நீரைத் தாண்டி, ஐந்து பூதங்களில் ஒன்றான ஆகாய மார்க்கமாக, ஸ்ரீ ராமனுக்காக ஐந்து பூதங்களில் ஒன்றான பூமி பெற்றெடுத்த புதல்வியான சீதையைக் கண்டு, ஐந்து பூதங்களில் ஒன்றான தீயை அயல் தேசமான இலங்கையில் வைத்தான். அவன் எம்மை அனைத்தும் அளித்துக் காப்பான்.
விளக்க உரை
- அனுமனின் சேவை சிறப்பாக காட்ட கம்பனால் எழுதப்பட்டப் பாடல்
- ஐந்து பூதங்களையும் அஞ்சிலே என்ற சொல் வைத்து சிறப்பாக பாடல் அமைத்தது போற்றுதலுக்கு உரியது.
துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை
ஒரு பொருளை மற்றொரு பொருளாக மயக்கி அறியும் அறிவு எது?
திரிபு