Category: அனுபவம்
கசியும் நினைவுகள்
சொற்கள் அற்ற இரவு
விளையாட்டாய் ஆரம்பிக்கிறது
உனக்கும் எனக்குமான சண்டை.
உன் கோபங்கள் என்னை
மகிழ்வு கொள்ளச் செய்கின்றன.
மகிழ்வான நிமிடங்கள்
முற்றுப் பெறும் முன் உரைக்கிறாய்
‘நான் உன்னுடன் பேசப் போவதில்லை‘
கண்ணீருடன் கலக்கின்றன
எனக்கான கவிதைகள்.
உறக்கத்தில் கைகளால்
எதையோ தேடுகிறாய்.
‘என்ன இருந்தாலும் நீ என் அப்பா
உன்னை பிடிக்காமல் இருக்குமா‘
என்கிறாய்.
பிறிதொரு நாளில்
இதை நீ உணர்ந்து சிரிக்க
கவிதையாக்கி வைத்திருக்கிறேன்
என்னையும் நினைவுகளையும்.
புகைப்படம் மற்றும் இருப்பு : ராதா கிருஷ்ணன்
உள் ஒலி
ஜன்னல் பிடித்த படி
நிறைவு
முன் குறிப்புகள்
பூத்தல் – நினைவுகளுக்கு மட்டும்
வரவேற்றலில் மரணம்
ஆற்றுப்படுதல்
ஈர்ப்பு
கானல் காட்சிகள்
அறையில் எழிலினை
எவரும் அறியக்கூடும்.
கலைந்த புத்தகங்கள்,
கசங்கிய ஆடைகள்,
புகை படிந்த ஜன்னல்கள்,
உதிர்ந்த சில சாம்பல்கள்,
முயக்கம் முன்னிருத்திய வீச்சங்கள்,
காலி மதுக் கோப்பைகள்,
அங்கொன்றும் இங்கொன்றுமாய் பீடித்துளிகள்,
பெரும் பசியினை மறுதலிக்கையில்
‘வாடா சாப்ட‘ என்ற நண்பனின் அழைப்புகள்,
பின் தொடரும் குளியலறை அழுகைகள்,
கள் வெறி கொள்ளும் இலக்கிய பேச்சுக்கள்
இப்படியாகத்தான் கழிகிறது
இன்றைய இருப்பும்.
பிறிதொரு நாளில் தங்குபவன்
இருப்பும் இப்படியாகவே இருக்கலாம்.
Click by : R.s.s.K Clicks
விதியின் புனைதல்
எல்லா கனமில்லா பொருள்களும்
உனக்கானவையாக இருக்கின்றன.
எல்லா கனத்த நினைவுகளுக்கும்
எனக்கானவையாக இருக்கின்றன.
உனக்கான பொருள்கள்
கலைந்து கிடக்கின்றன.
கலையாமல் இருக்கின்றன
என் நினைவுகள்.
யாருமற்ற பொழுதுகளில்
இப்புகைப்படம் பார்த்து
நினைகளைக் கோர்ப்பாய்.
அந்த நாளில் நினைவுகளும்
இன்றைக்கு பத்திரமாய் என்னிடம்.
Click by : Swathika. Photo : Senthil Tiruvarasan and Samyuktha.