![]()
Category: சைவ சித்தாந்தம்
சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்
சைவ சித்தாந்தம் மிகப் பெரியது என்பதால் இனி இத்தொகுப்புகள் – ‘சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்’ என்ற தலைப்பில் வரும்.
ஆன்மாக்கள் நித்தியமனவைகளாக இருக்கின்றன. தேகம் அழிவதால் அது அநித்தியம். கர்ம வினைகளின் காரணமாக பல பிறப்புகள் எடுக்கும், ஆத்மா மாற்றம் மட்டுமே கொள்கிறது. அது அழிவதில்லை. பல பிறப்புகளுக்கு காரணமாக மட்டும் அமைகிறது.
காமம், குரோதம், லோப மோக மதம் மாற்சரியம் இவற்றின் காரணமாக (அக்காரணிகள்) ஆன்மா குற்றங்களை உடையாதாக இருக்கிறது.
காமம்: பற்றினால் உண்டாகும் பாசம்
குரோதம்: கோபம்
லோபம்: பேராசை
மதம்: மிகு கோபம்/வெறி பிடித்த நிலைமை.
மாத்ஸர்யம்: பொறாமை
மேற் கூரிய காரணங்களால் ஆன்மா, மலத்தால் சூழப்பட்டிருக்கிறது.
‘செம்புல பெயல் நீர் போல்’ என்பது வாசகமாகும். அது போல் ஆன்மா வினைகளின் காரணமாக அதன் வடிவம் பெறுகிறது. இது ஆன்மாவிற்கு இயற்கை உணர்வு இல்லை என்பதை உணர்த்துகிறது.
![]()
சைவ சித்தாந்தம்
உடம்பு அழியக்கூடியது. (தேகம்) – எனில் அதைப் பகுக்க முடியுமா?
ஜடப் பொருள்கள் அழியக்கூடியது.
பிருதிவி, அப்பு, தேயு, வாயு மற்றும் ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களின் சேர்க்கை. எனவே இது அழியும். எனவே இவை ஜடப் பொருள்கள். எனவே அது சித்து ஆகாது.
அப்படி எனில் மனத்தின் வேலை எது –
கீழே குறிப்பிட்டவைகளின் தொடர்கலவையே செயல்.
மனம் – நினைக்கும்.
புத்தி – விசாரிக்கும்.
சித்தம் – நிச்சயிக்கும்.
அகங்காரம் – துணியும்.
எனவே சித்தம் என்பது பூதங்களின் சேர்க்கை தவிர்த்த மற்றொன்று. சில நேரங்களில் கனவு காண்கிறோம். அவை நிச்சம் என்றும் நம்புகிறோம். விழித்தவுடன் அது கனவு என்பது பற்றிய தெளிவு வருகிறது.
அது போலவே ‘நான்’ தேகம் என்னும் நிலை மாறும் போது, அசித்து பற்றிய எண்ணம் தெளிவுறுகிறது. அது உலகியல் நிலையாமை என்னும் கருத்தை வலியுறுத்தி நிச்சயப்படுத்துகிறது.
கருத்து கனமானது என்பதால் மீண்டும் தொடர்வோம்.
(மிக அதிக அளவில் இக்கருத்துக்களை அறிந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் என்னை மன்னிப்பார்களாக)
![]()
சைவ சித்தாந்தம்
சைவ சித்தாந்தம் – சிந்தனை
பதி பசு பாசம் எனப் பகர் மூன்றில் – என்று ஆரம்பிக்கிறது. பதி குறித்தே தொடக்கம் எனினும், ‘பசு'(உயிர்) குறித்த அறிவு ஏற்பட்ட பின் ‘பதி’ குறித்த உணர்வு வரும் என்பது என் கருத்து.
எனவே பசு தொடங்கி விளக்கம் ஆய்வோம்.
பொதுவாக உயிர்களின் நிலையாமையைச் சொல்லி இறைவனை நாடச் சொல்லுதல் சைவ மரபு. (உ.ம் – திருமந்திரம் – உயிர் நிலையாமை, யாக்கை நிலையாமை )
நிலைத்திருத்தல் என்பது எல்லா காலங்களிலும் நிலைத்திருத்தல் (அழிவற்றதாக) என்பதாகக் குறிக்கப்படும்.
அவ்வாறு அல்லாது,
1. உடம்பு அழியக்கூடியது. (தேகம்)
2. பிரபஞ்சம் அழியக்கூடியது. (உ.ம் பிரளயம், ஊழிப் பெருங்காற்று)
3. பிரபஞ்சதின் உட் பொருட்களும் அழியக் கூடியது. (மரம், செடி)
அழியும் பொருள் ஒன்று எனில், அழியாப் பொருளும் இருக்கக் கூடும்.
எனவே அவைகள் அசித்து எனவும், சித்து எனவும் வழங்கப்படும்.
சித்து – அழியாதது.
அ – சித்து – அழியக் கூடியது.
கருத்து கனமானது என்பதால் மீண்டும் தொடர்வோம்.
(மிக அதிக அளவில் இக்கருத்துக்களை அறிந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் என்னை மன்னிப்பார்களாக)
![]()
சைவ சித்தாந்தம்
சைவ சித்தாந்தம் பற்றிய சில கருத்துக்களை பகிர இருக்கிறேன்.
சைவ சித்தாந்தம் மிகப்பெரிய ஒரு கடல். இது பற்றி தெரிந்து கொள்ளவும்/தெளிந்து கொள்ளவும் கூடிய ஒரு முன்னுரை மட்டுமே இப்பதிவுகளும் இதன் தொடர்ச்சியான பதிவுகளும்.
த்வைதம் – இருமைப்பற்றி பேசும்
அத்வைதம் – -ஒருமைப்பற்றி பேசும்
விசிஷ்டாத்வதம் – இருமை ஒன்றாதல் பற்றி பேசும்
சைவம் – மூன்றும் அதன் செயல்பாடுகளும் (பதி, பசு, பாசம்) பற்றி பேசும்
பதி – இறைவன்
பசு – உயிர்கள்
பாசம் – இறைவனுக்கும் உயிர்களுக்கும் உள்ள தொடர்பு.
ஆதி சங்கரர் கருத்துப்படி அறுவகை சமயமாக இருந்தாலும்
(காணாபத்தியம் – கணபதி முதன்மை,
கௌமாரம் – முருகன் முதன்மை,
சௌரம் – சூரியன்
சைவம் – சிவன் முதன்மை,
வைஷ்ணவம் – விஷ்ணு முதன்மை,
சாக்தம்- அம்பாள் முதன்மை ) சைவம் காலங்களுக்கு முற்பட்டது.
இவைத்தவிர பைரவர், வீரபத்திரர் – என அனைத்தையும் சேர்த்து பேசப்படும் தொகுதி – பதி.
![]()




