மீளாத நாண்

புகைப்படம் & மாடல் : திரு.அய்யப்ப மாதவன், திரைப்பட இயக்குனர்

மீண்டும் அதே பிறப்பு
மீண்டும் இளமைத் துள்ளல்
மீண்டும் அதே கல்வி
மீண்டும் அதே கர்வம்
மீண்டும் அதே மயக்கம்
மீண்டும் அதே முயக்கம்
மீண்டும் அதே சிநேகம்
மீண்டும் அதே வான் பார்த்தல்
மீண்டும் அதே மது வாசனை
மீண்டும் அதே தனிமை
மீண்டும் அதே பேரொலி
மீண்டும் அதே ஓங்காரம்
மீண்டும் அதே ஒடுக்கம்
மீளாத நாண்

சமூக ஊடகங்கள்

பின்னம்


புகைப்படம் : திரைப்பட இயக்குனர் திரு.ஐயப்ப மாதவன்

நிராகரிக்கப்படவனை
நீங்கள் அத்தனை எளிதில் காண இயலாது

ஒருவேளை வானம் பார்த்து
பீடியை புகைப்பவனாக இருக்கலாம்;
மனைவி, இரு குழந்தைகளோடு நீண்ட நேரம்
இறையை வணங்க வரிசையில் காத்திருப்பவனாக இருக்கலாம்;

எவர் எவரோ வீசிச் சென்ற உணவு பொட்டலங்களை எடுத்து
சரிநிகர் சமானமாக நாயோடு உண்ணுபவனாக இருக்கலாம்;
அங்காடியில் விலைகளைப் பார்த்து பொருள்களை
அதனதன் இடத்தில் வைப்பவனாக இருக்கலாம்;

கருமை நிற மேனி கொண்டு,அழுகிய உடலோடு
காலம் கடத்துபவனாக இருக்கலாம்;
மனைவியின் கண்களைப் பார்த்து பேசியபடி
கடற்கரையில் பட்டாணி உண்பவனாக இருக்கலாம்;

மதுபானக் கடைகளில் தனித்து இசையைத் தவிர்த்து
மதுகோப்பைகளை நீண்ட நேரம் உற்றுப் பார்பவனாக இருக்கலாம்;
இருளினை உள்வாங்கி பேரொலியையும் பேரொளியையும்
சிந்திப்பவனாக இருக்கலாம்;

நிராகரிக்கப்படவனை நீங்கள் காண இயலும் கணத்தில்
அவனிடம் இருந்து நீங்கள் பெறுவதற்கு
பேரன்பு அன்றி வேறொன்றுமிராது.

சமூக ஊடகங்கள்

இயல்பாய் இரத்தல்

புகைப்படம் : திரைப்பட இயக்குனர் திரு. ஐயப்ப மாதவன்

 

எவரும் அறியாமல்
என் கைகள் நீண்டும் குறுகியும் ஆகின.
யாரும் அற்ற ஒரு பொழுதினில்
யாசகம் வேண்டி நின்றேன் ஒருவனிடம்.
‘உனக்கு மட்டும் ஏன் கைகள் இப்படி ஆகின்றன?’
என்றான் அவன்.
யாசித்தல் இயல்பு ஆன பொழுதுகளில்
இடம் சென்று பெறுதல் அரிதானதால்
இவ்வாறானது என்று உரைத்தேன்.
எப்பொழுது இது மறையும் என்றான்?
இயல்பாய் ஒருவன்
இடும்போது மறையும் என்றேன்.
எவரும் அறியா விஷ்யங்களை
இனம் கண்டு கொண்டது எங்கனம் என்றேன்?
இயல் புன்னகை பூத்து
கைகளில் இடுகிறான்.
புவனம் கனகம் ஆகிறது
காலம் உறைகிறது.

சமூக ஊடகங்கள்

சுணங்கன்

புகைப்படம் : இயக்குனர் திரு. ஐயப்ப மாதவன் அவர்கள்

​ஆதி நாளில் நீ தனித்திருந்தாய்;
கூடி வந்த காலமதில்
நாம் தனித்து இருந்தோம்;
அகிலின் வாசம்
அறையை நிரப்புகிறது.
பெரும் தீயாகி என்னை​​
உன்மடியினில் கிடத்துகிறாய்.
மோனத்தீயாகி
முத்தமொன்றை இடுகிறாய்
கண்களில் இருந்து விழிநீர் அருவியாகி
வழிந்தோடுகிறது.
புறவெளியில்
மாய உலகில் காற்றினை உரசி
வார்தைகள் தோன்றி மறைகின்றன.
‘இரத்தம் இருந்தப்ப ஆடின,
சுண்டினப்பின் கண்ணீர் விட்டு
என்ன புண்ணியம்’

 

*சுணங்கன் – நாய் போலத் திரிபவன்

சமூக ஊடகங்கள்

தெளிவுறு சித்து

தெளிவுறு சித்து_KP
தடைபடா மௌனத்தில்
ஒடுங்குமிறது
நாதமும்
* தெளிவுறு சித்துதெளிந்த சித்தம்திருமந்திரம் 1064
புகைப்படம் : Karthik Pasupathy

சமூக ஊடகங்கள்

வல்வினைக் காடு

வல்வினைக்காடு

பஞ்ச பூதக் கவிதைகள் – பெண் தெய்வங்கள் – முன்வைத்து – காற்று
அடர் காடொன்றில் பயணிக்கிறேன்.
தொலைவில் பிண வாடை
காற்றில் கலந்து வருகிறது.
காலம் கரைகளில் உணர்கிறேன்
அது என்னிடத்தில் இருந்து வருவதை.
உடலெங்கும் மனிதர்கள் ஈன்ற மலங்களை
பூசிக் கொள்கிறேன். *
திருநீற்று வாசம்
மனதினை நிறைக்கிறது.
கண் முன்னே சிறு குழந்தை ஒன்று.
என்னைத் தெரியவில்லையா?’ என்கிறது
விதி வழி விலக்கப்பட்ட மாந்தர்களில்
நானொருவன், எவரை அறிந்து
எது நிகழப்போகிறதுஎன்கிறேன்.
செலவழியா பொருளொன்றை ஈய
வந்திருக்கிறேன்என்கிறது அக்குழந்தை.
வியப்புறுகிறேன்.
காற்றே அழியா பொருள், காற்றினைக் கைக்கொள்,
வாசனைகள் அற அதுவே வழிஎன்கிறது.
யார் நீ?’ என்கிறேன்.
தேகம் மறைந்து காற்றில் கரைகிறது
வார்த்தைகள்நானே வாலை‘.
பிறிதொரு பொழுதுகளில்
உலகங்கள் மட்டும் இயங்கின.
*கேட்டறிந்த  உண்மை சம்பவம் முன்வைத்து
 

சமூக ஊடகங்கள்

சோளக்கொல்லை பொம்மை

சோளக்கொல்லை பொம்மை_KarthikPasupathy
காலத்தின் மாற்றத்தில்
சோளக்கொல்லை பொம்மையாகி
நிற்கும் வாய்ப்பு ஏற்பட்டது.
‘அழகாக உடுத்தி
வீதியின் நிற்றலே வேலை’ என்றார்கள்
கனவுகளுடன் காத்திருக்கையில்
பெரு வயல்வெளிதனில்
கருங்குருவி ஒன்று வந்தது.
விரட்ட எத்தனமானேன்.
‘காகங்களை விரட்டுதலே வேலை
கருங்குருவி விரட்டுதல் அல்ல’
என்றது தலைமை பொம்மை.
பார்வைகள் பதிருக்கும் காங்களில்
பாத்திகளின் மேல் காகங்கள் அமர்ந்தன.
விரட்ட எத்தனமானேன்.
‘பாத்திகள் இருவருக்கு உரித்தானவைகள்’
என்றது மற்றொரு பொம்மை
‘நம்மின் வேலை தொடர்வோம்’ என்றும் கூறின.
முதுகுக்கு பின் சில காகங்கள் வட்டமிட்டன.
விரட்ட எத்தனமாகிறேன்.
‘முன்னே பார்த்தல் மட்டுமே நம் வேலை
பின்னே பார்த்தல் மற்ற பொம்மையின் வேலை’ என்றது தலைமை பொம்மை.
கண் எதிரே சில அண்டங்காக்கைகளும்
சில வீட்டுக் காகங்களும் விளையாடின.
விரட்ட எத்தனமானேன்.
வீட்டுக்காகங்கள் மதிக்கப்பட வேண்டும்
அண்டங்காகங்களை மட்டும் விரட்டப்பட வேண்டும்’
என்றது மற்றுமொரு தலைமை பொம்மை
பிறிதொரு நாளில்
வேறு சில பொம்மைகள் வயல்களில்.
வார்தைகள் அற்று வினவுகிறேன்.
‘மற்ற பொம்மைகளின் படிச் செலவு
மாதம் விடுத்து தினமாகிறது’ என்றது தலைமை பொம்மை.
காலத்தின் மாற்றத்தில்
ஆடைகள் அற்றுக் கிடக்கிறது 
பொம்மை ஒன்று,
சில காகங்கள் மட்டும் சீண்டி விளையாடுகின்றன 
அப் பொம்மையை.

புகைப்படம்: Karthik Pasupathy

சமூக ஊடகங்கள்

பௌர்ணமி நாட்கள்

பௌர்ணமி நாட்கள்_Swathi

மகளால் வரையப்படும்
கிறுக்கல்களால் அழகு பெறுகின்றன
நாட்களும்.
 

புகைப்படம் :  Swathika Senthil

சமூக ஊடகங்கள்

திசை அறிதல்

திசை அறிதல்_KP

பாதங்களின் நிழல் பற்றி
நடந்து செல்லும் பாதைகளில்
தடம் பதியாது பறந்து செல்கிறது

பறவையின் நிழல் ஒன்று.

புகைப்படம் :  Karthik Pasupathy

சமூக ஊடகங்கள்

பயணித்தல் – இலக்கு நோக்கி

பயணித்தல் - இலக்கு நோக்கி

மனித சஞ்சாரம் அற்ற
காடுடொன்றில் தனித்து பயணிக்கிறேன்.
சிறு மழை பெற்ற பின்னொரு பொழுதாய்
மண்ணில் வாசம்
உச்சரிக்கப்படும் ஒரு நாமம் ஒன்று
பெண்ணாகி என் எதிரே.
இனம் கண்டது எப்படி என்கிறேன்.
மூலத்தின் பிரதி
எப்படி மூலத்தில் இருந்து விலகலாம் என்கிறாள்.
என் காலடி ஓசையுடன் சேர்ந்தே
ஒலிக்கின்றன தண்டையின் ஒலிகள்.
பாதங்கள் பாதைகளில்
பயணிக்கின்றன.
விளையாட்டாய் ஆரம்பிக்கிறது
வார்த்தை விளையாட்டுக்கள்.
‘பிரம்மம் என்ன செய்து கொண்டிருக்கிறது’ என்கிறேன்
‘பிரம்மமாய் இருக்கிறது’ என்கிறாள்.

ஆதி நாளின் சூன்யத்தில் உடல்.


புகைப்படம் : பாலா அவர்கள்
 

சமூக ஊடகங்கள்

பயன் இயல்

பயன் இயல்

தேனீர் அருந்துதல் என்பது
அத்தனை எளிதானது அல்ல.
‘ஒரு கோப்பைத் தேனீர்’ எனும்
புத்தக வாசிப்பினை உங்களுக்கு தந்திருக்கலாம்;
நினைவுகளில் மூழ்கி இருக்கையில்
தேனீர் பற்றி இருக்கும் சிகரெட்
விரல்களை சுட்ட தருணங்களை
உங்களுக்கு தந்திருக்கலாம்;
தொலைபேசியில் சிரித்துப் பேசியபடி
சந்தோஷங்களை உங்களுக்கு
தந்த தருணமாக இருந்திருக்கலாம்;
யாசிப்பின் மொழி அறிந்து
பெற்ற பெரும் செல்வத்தில்
பசியினை அறுக்க பருகும்
தருணமாக இருந்திருக்கலாம்;
தன்னிடம் இருக்கும் சில சில்லறைகளை ஈந்து
மீதமிருக்கும் சில்லறைகளில்
பிஸ்கோத்து வாங்கி,  நாயிக்குஅளித்து
தானும் அதுவும் ஒன்றாக அமர்ந்து உண்ணும்
தருணமாக இருந்திருக்கலாம்;
மனிதர்களால் விலக்கப்பட்டு
வலிகளின் அடிநாதம் அறிந்து
பிறிதொரு நாளில்
பருகும் கடைசி பாகமாகவும் இருக்கலாம்.
தேனீர் அருந்துதல் என்பது
அத்தனை எளிதானது அல்ல.

புகைப்படம் :  Ram N

 
 

சமூக ஊடகங்கள்