அழலேந்தி

13

பஞ்ச பூதக் கவிதைகள் – பெண் தெய்வங்கள் முன்வைத்து – நெருப்பு

மனிதர்களால் விலக்கப்பட்டு
தனித்த பாதையொன்றில் தென் திசை
நோக்கிப் பயணிக்கிறேன்.
தடம் பதிக்கும் அடிமுன்னே
அனைத்து திசைகளும் பற்றி எரிகின்றன.
விழிநீரும் வெப்பத்தில் உலர்கின்றது..
எதிர்கொண்டு அழைக்கிறது அஞ்சன சுடரொன்று.
‘யார் நீ ‘ என்கிறேன்.
அறு நெருப்பை தோற்றுவித்தவள்,
நெருப்பாகி, நெருப்பால் அறுப்பவளும் நானே
என்கிறது அச்சுடர்
பயணச் சுமைகளால் கீழே விழ
எத்தனிக்கிறேன்.
நிலமென தாங்கிப் பிடித்து
மடியினில் இருத்துகின்றது அச்சுடர்.
பின்னொரு பொழுதுகளில்
பொன் நிறமாய் மாறுகின்றது அச்சுடர்
அப்போது
புற உலகங்கள் மட்டும்
எரிந்து கொண்டு இருக்கின்றன.

 

Loading

சமூக ஊடகங்கள்

அமலம்

அமலம்_KP

புகைப்படம் : Karthik Pasupathy

பிரபஞ்சத்தின் நீட்சியில்
காலபரிமாணம் அற்று
வான்முட்டி கூட்டமாக பறந்தன
சில பறவைகள்.
அறியாத பொழுதொன்றில்
மரித்து தரை சேர்ந்தது
பறவை உடல் ஒன்று.
கத்தின, கூக்குரலிட்டன, கரைந்தன.
உருவம் அழிவதாய் ஒலித்தன
உயிர் கொண்ட பறவைகளின் குரல்கள்.
பின்னொரு பொழுதுகளில்
விரும்பி வானம் கொண்டன.
சலனப்பட்டு இருந்தது காற்று
சலனம் அற்று இருந்தது வானம்.

*அமலம் – மாசு அற்றது

Loading

சமூக ஊடகங்கள்

பாடி காவல்

பாடி காவல்_LakshmiVenkat

புகைப்படம் : Lakshmi Venkataraman

மரணம் கரைந்திருக்கும் வினாடி தேடி
பயணிக்கிறது வாழ்வு;
மரணித்தல் இயல்பாகும் வரை
வாழ்வு தொடரும்;
பின்னொரு பொழுதுகளில்
ஞானத்தின் வாழ்வு தன்னை ஞானம் கவ்வும்
மறுபடியும் ஞானமே வெல்லும்.

 

 
*பாடி காவல் – குற்றம் செய்தவருக்கு அரசன் தரும் தண்டனை

கோடிக் காவனைக் கூறாத நாள் எலாம்
பாடி காவலில் பட்டுக் கழியுமே

Loading

சமூக ஊடகங்கள்

வழக்கு

%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81_nandansridharan_theniiswar
இறையால் இறைக்கப்பட்ட
வறுமைகள் பாதை வழி எங்கும்.
இருள் சூழ்ந்திருக்கும்
வாழ்வை விலக்க முற்படுகிறேன்.
யாருமற்ற தருணமொன்றில்
தலை கோதி பின்னலிடுகிறாய்.
தன்முனைப்பு அற்று முத்தமிட்டு
புன்னகை பூக்கிறாய்.
பெரு வாழ்வு கண்டபின்னும்
மீண்டும் ஒரு தலைப் பின்னலுக்காக
காத்திருக்கின்றன பல ஜன்மங்களும்.

*வழக்கு – ஈகை

புகைப்பட உதவி : நந்தன் ஸ்ரீதரன் மற்றும் தேனி ஈஸ்வர்

Loading

சமூக ஊடகங்கள்

ஆதாளிக்காரன்

%e0%ae%86%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d_vv

புகைப்படம் : Vinod V

விதியின் வழி அடைந்து
செல்வம் கூடி பெற்று வருகிறது பெரு உடல்.
என் எதிர்ப்பட்டு
காலத்தால் முதுமையாக்கப்பட்ட ஒருவன்
வயிற்றின் பெருந்தீக்காக
பொருள் ஒன்றை யாசிக்கிறான்
மின்னலென வருகிறது கோபச் சொற்கள் என்னில்.
புன்னகைத்து விலகுகிறான்.
வினாடிக்குள் மாறுகிறது எனது
இளமையின் புறத் தோற்றமும்

*ஆதாளிக்காரன் - பெரும் பேச்சு உடையவன்

Loading

சமூக ஊடகங்கள்

கூத்துப்பட்டறை

%e0%ae%95%e0%af%82%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b1%e0%af%88_sl

புகைப்படம் :  SL Kumar

வான்வெளிச் செல்லும் தனிப்பறவை
விதைத்து செல்கிறது தன் பிம்பங்களை
எல்லா திசைகளிலும்.
அவ்வாறே உணர்ந்திருக்குமா
பிரதிபிம்பங்களை?

Loading

சமூக ஊடகங்கள்

சப்த ஜாலம்

%e0%ae%9a%e0%ae%aa%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%9c%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-kp

புகைப்படம் :  Karthik Pasupathy

உன்கென்ன ‘ஆசை அறு’ என்று
சொல்லி சென்றுவிட்டாய்.
நானல்லவோ பீடிக் காசிற்கு அலைகிறேன்.

Loading

சமூக ஊடகங்கள்

மலிதல்

%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d

 

யாசித்துப் பெற்ற நாணயங்களைக் கூட்டி
தேனீர் அருந்துகையில் வந்தமைகின்றது
செம்மை நிற நாய்களின் கூட்டமொன்று.

*மலிதல் – மகிழ்தல்

புகைப்படம் : காமேஷ் சிவம்

Loading

சமூக ஊடகங்கள்

ஆதி மௌனம்

%e0%ae%86%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d

புகைப்படம் : இணையம்

பஞ்ச பூதக் கவிதைகள் – பெண் தெய்வங்கள் முன்வைத்து – ஆகாயம்

 

யாருமற்ற இரவொன்று;
விளக்கு சுடர் மற்றும் பிரகாசிக்கின்றது.
இரவின் உறக்கம் கலைத்து
வான் முழக்கம் அருகினில்.
தோழியராய் இரு பெண்கள் அருகினில் வருகிறார்கள்.
யார் என்று வினவுகிறேன்.
நாங்களே சித்தி புத்தி;
‘பர நாதம் பரவி இருக்கும் ஆகாயமே எங்கள் நாதன்.
அவரே எம் கணவர் ஹிரண்ய கணபதி” என்கிறார்கள்.
‘சாஸ்வதமான வாக்கினை கேட்க விரும்புகிறேன்” என்கிறேன்.
‘இறப்பே சாஸ்வதம்’ என்கிறார்கள்.
விக்கித்து நிற்கிறேன்.
‘ஆகாயமும் நாதமும் தொப்புள் கொடி உறவானது
எழுத்துக்களை சொற்களாக்கி
சொற்களை வார்த்தைகளாக்கி
வார்த்தைகளை வாக்கியமாக்கி
ஆகாயத்தில் இருந்து
அடிநாத மௌனம் காண்’ என்கிறார்கள்
பின்னொரு பொழுதுகளில்
ஆதி மௌனம் படரத் தொடங்கி இருந்தது.

 

 

Loading

சமூக ஊடகங்கள்

அனிச்சை நிகழ்வுகள்

அனிச்சை நிகழ்வுகள்_VV

எப்பொழுதாவது தான் நிகழ்கிறது
வாங்கும் ஒன்பதாயிரத்து சொச்சத்தில் மீதம்.
உடைந்து போன கைக்கடிகாரம்
மாற்றாமல் அலையும் கணவனுக்காக
வாங்கத் துடிக்கிறது மனசு ஒன்று.
போன முறை நல்லியில் பார்த்து வந்த
பச்சையும் சிகப்பு பார்டரும் வைத்த
காஞ்சி காட்டனை
நினைவுட்டுகிறது மனசு ஒன்று.
‘ரங்கநாதன் வீதியில்
சில ஆயிரங்களில் பார்த்து வந்த
கம்மலையும் கழுத்து மாலையையும்
வாங்கித் தருகிறாயா’
என்னும் மகளின் வார்த்தைகளை
நினைவுட்டுகிறது மனசு ஒன்று.
அம்மாவுக்கு குக்கர்  வாங்கித் தருவதாக
சொன்னதை
நினைவுட்டுகிறது மனசு ஒன்று.
காலம் அறியாமல் வந்து நிற்கும்
உறவின் திருமணத்திற்கு
பரிசு வாங்க வேண்டும் என
நினைவுட்டுகிறது மனசு ஒன்று.
வேர்வை படிந்த ஈர உடைகளுடன் மகன் வந்து
‘விஜய் போட்டிருக்கும் ஷு மாதிரி வாங்கித் தருகிறாயா?’
என்கிறான்.
இயல்பாய் புன்னகை செய்வதை விட

என்ன செய்துவிட முடியும் மத்யமரால்.

புகைப்படம் :  Vinod Velayutham.

இது எனது 400 வது கவிதை.

எனது நெருக்கமான தோழிகளில் சிலர் என்னுடன் பகிர்ந்து கொண்ட அனுபவங்களே இது. கட்டமைப்பு மட்டுமே படைப்பு.
தேவைகளின் பொருட்டு வேலைக்கு செல்லும் ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு நாளும் உலகளாகிய அனுபவம் பெறுகிறாள். ஆணின் மிகப் பெரிய வலிகளை எல்லாம் பெண்கள் சர்வ சாதாரணமாகக் கடக்கிறார்கள்.  கடந்து செல்லும் எல்லா பெண்களின் கண்ணிலும் உப்பு நீர் படிந்தே இருக்கிறது. மனதிற்கு நெருக்கமானவர்களிடம் மட்டும் அதைக் காட்டுகிறார்கள். மற்றவர்களிடம் அது மாயப் பூச்சாகவே இருக்கிறது. அதன் பொருட்டே இக்கவிதை.
இக் கவிதைகளில்  அதன் அடி ஆழத்தில் நான் வாழ்ந்திருக்கிறேன் என்பதே நிதர்சனம். எல்லா கவிதைகளுக்கு பின்னும் அதன் அடி நாதம், வலி, வேதனை, சந்தோஷ சிறகசைப்புகள், கிழக்கும் மேற்கும் செல்லும் மனநிலை, மெய் தீண்டல்கள், துரோகங்கள், பரிகசிப்புகள், ஏமாற்றங்கள், அதன் பொருட்டான அனுபவங்கள். தாலாட்டுகள், கவிதை பரிமாற்ற அனுபவங்கள், அதன் பொருட்டான கோபங்கள், பின்னொரு புன்னகைக் காலங்கள் என பலவும் இக்கவிதைகளின் வழி கடந்திருக்கிறேன்.
கடந்திருக்கிறேன் என்பதே கடந்ததை குறிக்கிறது. வேறு என்ன இருக்கிறது மத்யமராய் வாழ்வதைத் தவிர.



Loading

சமூக ஊடகங்கள்

தெளிவுறு சித்து

தெளிவுறு சித்து_KP
தடைபடா மௌனத்தில்
ஒடுங்குமிறது
நாதமும்
* தெளிவுறு சித்துதெளிந்த சித்தம்திருமந்திரம் 1064
புகைப்படம் : Karthik Pasupathy

Loading

சமூக ஊடகங்கள்

வல்வினைக் காடு

வல்வினைக்காடு

பஞ்ச பூதக் கவிதைகள் – பெண் தெய்வங்கள் – முன்வைத்து – காற்று
அடர் காடொன்றில் பயணிக்கிறேன்.
தொலைவில் பிண வாடை
காற்றில் கலந்து வருகிறது.
காலம் கரைகளில் உணர்கிறேன்
அது என்னிடத்தில் இருந்து வருவதை.
உடலெங்கும் மனிதர்கள் ஈன்ற மலங்களை
பூசிக் கொள்கிறேன். *
திருநீற்று வாசம்
மனதினை நிறைக்கிறது.
கண் முன்னே சிறு குழந்தை ஒன்று.
என்னைத் தெரியவில்லையா?’ என்கிறது
விதி வழி விலக்கப்பட்ட மாந்தர்களில்
நானொருவன், எவரை அறிந்து
எது நிகழப்போகிறதுஎன்கிறேன்.
செலவழியா பொருளொன்றை ஈய
வந்திருக்கிறேன்என்கிறது அக்குழந்தை.
வியப்புறுகிறேன்.
காற்றே அழியா பொருள், காற்றினைக் கைக்கொள்,
வாசனைகள் அற அதுவே வழிஎன்கிறது.
யார் நீ?’ என்கிறேன்.
தேகம் மறைந்து காற்றில் கரைகிறது
வார்த்தைகள்நானே வாலை‘.
பிறிதொரு பொழுதுகளில்
உலகங்கள் மட்டும் இயங்கின.
*கேட்டறிந்த  உண்மை சம்பவம் முன்வைத்து
 

Loading

சமூக ஊடகங்கள்

சோளக்கொல்லை பொம்மை

சோளக்கொல்லை பொம்மை_KarthikPasupathy
காலத்தின் மாற்றத்தில்
சோளக்கொல்லை பொம்மையாகி
நிற்கும் வாய்ப்பு ஏற்பட்டது.
‘அழகாக உடுத்தி
வீதியின் நிற்றலே வேலை’ என்றார்கள்
கனவுகளுடன் காத்திருக்கையில்
பெரு வயல்வெளிதனில்
கருங்குருவி ஒன்று வந்தது.
விரட்ட எத்தனமானேன்.
‘காகங்களை விரட்டுதலே வேலை
கருங்குருவி விரட்டுதல் அல்ல’
என்றது தலைமை பொம்மை.
பார்வைகள் பதிருக்கும் காங்களில்
பாத்திகளின் மேல் காகங்கள் அமர்ந்தன.
விரட்ட எத்தனமானேன்.
‘பாத்திகள் இருவருக்கு உரித்தானவைகள்’
என்றது மற்றொரு பொம்மை
‘நம்மின் வேலை தொடர்வோம்’ என்றும் கூறின.
முதுகுக்கு பின் சில காகங்கள் வட்டமிட்டன.
விரட்ட எத்தனமாகிறேன்.
‘முன்னே பார்த்தல் மட்டுமே நம் வேலை
பின்னே பார்த்தல் மற்ற பொம்மையின் வேலை’ என்றது தலைமை பொம்மை.
கண் எதிரே சில அண்டங்காக்கைகளும்
சில வீட்டுக் காகங்களும் விளையாடின.
விரட்ட எத்தனமானேன்.
வீட்டுக்காகங்கள் மதிக்கப்பட வேண்டும்
அண்டங்காகங்களை மட்டும் விரட்டப்பட வேண்டும்’
என்றது மற்றுமொரு தலைமை பொம்மை
பிறிதொரு நாளில்
வேறு சில பொம்மைகள் வயல்களில்.
வார்தைகள் அற்று வினவுகிறேன்.
‘மற்ற பொம்மைகளின் படிச் செலவு
மாதம் விடுத்து தினமாகிறது’ என்றது தலைமை பொம்மை.
காலத்தின் மாற்றத்தில்
ஆடைகள் அற்றுக் கிடக்கிறது 
பொம்மை ஒன்று,
சில காகங்கள் மட்டும் சீண்டி விளையாடுகின்றன 
அப் பொம்மையை.

புகைப்படம்: Karthik Pasupathy

Loading

சமூக ஊடகங்கள்

திசை அறிதல்

திசை அறிதல்_KP

பாதங்களின் நிழல் பற்றி
நடந்து செல்லும் பாதைகளில்
தடம் பதியாது பறந்து செல்கிறது

பறவையின் நிழல் ஒன்று.

புகைப்படம் :  Karthik Pasupathy

Loading

சமூக ஊடகங்கள்

பயணித்தல் – இலக்கு நோக்கி

பயணித்தல் - இலக்கு நோக்கி

மனித சஞ்சாரம் அற்ற
காடுடொன்றில் தனித்து பயணிக்கிறேன்.
சிறு மழை பெற்ற பின்னொரு பொழுதாய்
மண்ணில் வாசம்
உச்சரிக்கப்படும் ஒரு நாமம் ஒன்று
பெண்ணாகி என் எதிரே.
இனம் கண்டது எப்படி என்கிறேன்.
மூலத்தின் பிரதி
எப்படி மூலத்தில் இருந்து விலகலாம் என்கிறாள்.
என் காலடி ஓசையுடன் சேர்ந்தே
ஒலிக்கின்றன தண்டையின் ஒலிகள்.
பாதங்கள் பாதைகளில்
பயணிக்கின்றன.
விளையாட்டாய் ஆரம்பிக்கிறது
வார்த்தை விளையாட்டுக்கள்.
‘பிரம்மம் என்ன செய்து கொண்டிருக்கிறது’ என்கிறேன்
‘பிரம்மமாய் இருக்கிறது’ என்கிறாள்.

ஆதி நாளின் சூன்யத்தில் உடல்.


புகைப்படம் : பாலா அவர்கள்
 

Loading

சமூக ஊடகங்கள்

பயன் இயல்

பயன் இயல்

தேனீர் அருந்துதல் என்பது
அத்தனை எளிதானது அல்ல.
‘ஒரு கோப்பைத் தேனீர்’ எனும்
புத்தக வாசிப்பினை உங்களுக்கு தந்திருக்கலாம்;
நினைவுகளில் மூழ்கி இருக்கையில்
தேனீர் பற்றி இருக்கும் சிகரெட்
விரல்களை சுட்ட தருணங்களை
உங்களுக்கு தந்திருக்கலாம்;
தொலைபேசியில் சிரித்துப் பேசியபடி
சந்தோஷங்களை உங்களுக்கு
தந்த தருணமாக இருந்திருக்கலாம்;
யாசிப்பின் மொழி அறிந்து
பெற்ற பெரும் செல்வத்தில்
பசியினை அறுக்க பருகும்
தருணமாக இருந்திருக்கலாம்;
தன்னிடம் இருக்கும் சில சில்லறைகளை ஈந்து
மீதமிருக்கும் சில்லறைகளில்
பிஸ்கோத்து வாங்கி,  நாயிக்குஅளித்து
தானும் அதுவும் ஒன்றாக அமர்ந்து உண்ணும்
தருணமாக இருந்திருக்கலாம்;
மனிதர்களால் விலக்கப்பட்டு
வலிகளின் அடிநாதம் அறிந்து
பிறிதொரு நாளில்
பருகும் கடைசி பாகமாகவும் இருக்கலாம்.
தேனீர் அருந்துதல் என்பது
அத்தனை எளிதானது அல்ல.

புகைப்படம் :  Ram N

 
 

Loading

சமூக ஊடகங்கள்

ப்ரியங்கரீ

ப்ரியங்கரீ_Pawan
பஞ்ச பூதக் கவிதைகள் – பெண் தெய்வங்கள் – முன்வைத்து – நீர்
யாரும் அற்ற தனிமை என்பதே இல்லை
நினைவுகள் இருக்கும் வரை
என அறிந்தே
குப்பைக் காட்டினில்
தனித்திருக்கிறேன்.
கண் முன்னே மெல்லிய ஆடை ஒன்று
பற்றி எரிகிறது.
கண்கள் வியப்புறுகின்றன.
என்னைத் தெரியவில்லையா
என்கிறது அந்த ஆடை.
‘உன்னில் என்னைக் கண்டிருந்தாய்
காலமாற்றத்தில்
நீயும் நானும் விலகினோம்’ என்கிறது.
வாக்கியத்தின் முடிவில்
மற்றொரு ஆடை பற்றி எரிகிறது.
மீண்டும் கண்கள் வியப்புறுகின்றன.
என்னைத் தெரியவில்லையா
என்கிறது அந்த ஆடையும்.
ஆடைகளும், காகிதங்களும்
குப்பைகளும் பெரும் தீ உண்டாக்கி
பற்றி எரியத் துவங்குகின்றன.
ஜுவாலையின் விளிம்புகள்
தேகம் தீண்டுகின்றன.
‘எரிவது நானா, ஆடையா, பிற பொருள்களா’
கேள்விகள் எழுகின்றன.
எழும் கேள்வினை உறுதி செய்ய
பெரு மழை ஒன்று
பூமியினை நனைக்கிறது.
யார் நீஎன்கிறேன்.
பிரளயங்களுக்கு உரித்தானவள் என்கிறாள்அவள்
பின்னொரு பொழுதுகளில்
நீரில் கரைந்திருந்தது மற்றொரு உடல்.
 
புகைப்படம் : இணையம்
ப்ரியங்கரீ – அன்பு செய்பவள். 

Loading

சமூக ஊடகங்கள்

வினை ஒறுத்தல்

ஊன் எங்கும் ஆரத் தழுவி இருக்கின்றன
தழும்புகள்
கண்ணுக்கு தெரியா காலமொன்றில்
ஒன்று தான் இருந்தது.
காலமாற்றத்தில் பெருகிப் போனது.
ஆடை ஒன்றை அணிகிறேன்
ஆடைகள் பல்கி பெருகுகின்றன.
பிறிதொரு நாளில்
காயங்கள்

முற்றுப் பெருகின்றன
நான் நிர்வாணமாகிறேன்.

வினை ஒறுத்தல் –  வினை அனைத்தையும் அழித்தல்
புகைப்படம் : இணையம்

Loading

சமூக ஊடகங்கள்