
கேள்வி : சாஸ்திரத்தில் விதிக்காதவாறு செய்த தர்மங்களுக்கு பலன் இல்லாமல் போகுமா?
பதில் : சாஸ்திரம் என்பது எக்காலத்திற்கும் பொதுவானது. யுகம் சார்ந்தும், தர்மம் பற்றியும் செய் தர்மத்தின் அளவு குறைந்து போகும்.
கேள்வி : தற்பெருமை குற்றம் என்றால், தற்போது நடைமுறையில், எல்லோரும் அப்படி இருக்கிறார்களே.
பதில் : யுகதர்மத்தின்படி மனிதர்கள் தம் நிலை மறந்து அவ்வாறு இருக்கிறார்கள். தோராயமாக 86 லட்சம் பிறவிகளுக்கு பின் மனித பிறப்பு என்பது இறையின் கருணையினால் கிடைக்கிறது. அநாதி காலம் தொட்டு சென்ற சில நூற்றாண்டு வரையில் இந்த தற்பெருமையினை விலக்க சொல்லி இருக்கின்றார்கள். (தன்பெருமை எண்ணாமை, தற்போதமே இழத்தல் – சிவபோகசாரம் – தருமை ஆதீன குரு முதல்வர்)
பொதுவில் தர்மம் என்பது இரு காரணங்களுக்காக செய்யப்படும்
- தன்வினைகளை அறுக்க
- அறுக்கப்பட்ட வினைகளை அறிந்து மேல் நிலைக்குச் செல்ல
உதாரணமாக அன்னதானம் என்பதை எடுத்து கொள்வோம். பெறுவர், வழங்குபவர் என இருவர் உண்டு. இருவர் இல்லாமல் இந்த தானம் நிறைவு பெறாது. அவ்வாறு இருக்கும் போது அந்த தானம் பற்றி எவ்வாறு பெருமை கொள்ள இயலும்?
தர்மத்தினை எவரும் அறியாமல் செய்வதே தர்மம்.
இவைகள் எம் தனிப்பட்டக் கருத்துக்கள். (அறிந்தவர்கள் உரைத்தால் அறிந்து கொள்வேன்)