சித்த(ர்)த் துளிப்பு – 18-Dec-2020


பாடல்

மூலா தாரமுண்டு கிளியே
   முக்கோண வட்டமுண்டு
வாலை கணேசனுண்டு
   வல்லபை சத்தியுண்டு கிளியே

அருளிய சித்தர் : ஆதிநாதர் என்ற வேதாந்தச் சித்தர்

பதவுரை

உடலில் இருக்கும் ஆதார சக்ரங்களில் ஒன்றானது மூலாதாரம்; அதில் முக்கோண வட்டம் உடையதாக இருக்கும்; தூய வடிவமாக இருக்கக்கூடிய கணேசனுக்கு அது ஆதார இடமாகும்; அங்கு வல்லபை எனும் சக்தியுடன் அவர் அங்கு இருக்கிறார்.

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *