
பாடல்
மூலா தாரமுண்டு கிளியே
முக்கோண வட்டமுண்டு
வாலை கணேசனுண்டு
வல்லபை சத்தியுண்டு கிளியே
அருளிய சித்தர் : ஆதிநாதர் என்ற வேதாந்தச் சித்தர்
பதவுரை
உடலில் இருக்கும் ஆதார சக்ரங்களில் ஒன்றானது மூலாதாரம்; அதில் முக்கோண வட்டம் உடையதாக இருக்கும்; தூய வடிவமாக இருக்கக்கூடிய கணேசனுக்கு அது ஆதார இடமாகும்; அங்கு வல்லபை எனும் சக்தியுடன் அவர் அங்கு இருக்கிறார்.