குருவும் தற்போதமும் – 2

புகைப்படம் : திரைப்பட இயக்குநர் திரு.ஐயப்ப மாதவன் அவர்கள்

குரு நாதர், மூலகுருநாதர் இவர்கள் புகைப்படம் வெளிட அனுமதி இல்லாததால் அவர்கள் புகைப்படம் வெளியிடப்படவில்லை.

எனது குருநாதர் உரைத்ததை இங்கு உரைக்கிறேன்.

ஒரு முறை குருநாதர் திருபரங்குன்றத்தின் உச்சியில் இருந்த ரங்கூன் சுவாமிகளை சந்திக்க குருநாதர் சென்று இருந்தார். (அப்பொழுது குரு நாதருக்கு வயது தோராயமாக 22) சுவாமிகளுக்கும் குரு நாதருக்கும் ஆன்மீக ரீதியில் நெருங்கிய தொடர்பு உண்டு. ரங்கூன் சுவாமிகள் பெரும்பாலும் பேசமாட்டார், சில நேரங்களில் மட்டும் ஒன்று இரண்டு வார்த்தைகள் பேசுவார்

ரங்கூன் சுவாமிகள் : என்னடா செய்யிற தம்பி ?(குழந்தையின் வேறு பெயர், இன்றும் தன் குழந்தைகளை தம்பி என்று அழைக்கும் இல்லங்கள் உண்டு)
குருநாதர் : சொல்லுங்க ஐயா.

ரங்கூன் சுவாமிகள் : மலையில் இருந்து கீழ போய் சூடாக டீ வாங்கிட்டு வாடா.
குருநாதர் : சரிங்க ஐயா.

குரு நாதர் வந்த போது சுவாமிகள் நிட்டையில் ஆழ்ந்து இருந்தார். கூட்பிடலாமா வேண்டாமா என்று தெரியவில்லை.கண்கள் மூடப்பட்டு இருந்த நிலையில் உடனே கை நீட்டப்பட்டது. கைகளில் தொடமுடியா நிலையில் சூடாக இருந்த டீயினை வாங்கி கணிக்க இயலா நேரத்தில் குடித்துவிட்டார் சுவாமிகள்.

மற்றொருமுறை

ரங்கூன் சுவாமிகள் : மலையில் இருந்து கீழ போய் சூடாக டீ வாங்கிட்டு வாடா
குருநாதர் : சரிங்க ஐயா.

குரு நாதர் டீ வாங்கிகொண்டு வந்த போது சுவாமிகளுக்கு இடது புறத்தில் ஒரு குரங்கும், வலதுபுறத்தில் ஒரு குரங்கும் எதிரே ஒரு நாகம் ஒன்றும் நிட்டையில் அமர்ந்து இருந்தது.

குரு நாதருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

அடுத்த வினாடி சுவாமிகளுக்கு இடது புறத்தில் இருந்த குரங்கு வலது புறத்தில் இருந்த குரங்குடன் சேர்ந்து நின்று கொண்டு கண்களை மூடி தவத்திற்கு சென்றுவிட்டது.

குரங்குகள் இத்தனை அழகாக தவம் செய்கின்றனவே, நாமும் செய்தால் எப்படி இருக்கும் என்று எண்ணி சுவாமிகளுக்கு இடது புறத்தில் இருக்கும் காலியாக இருக்கும் இடத்தில் சென்று அமர்ந்தார். சுவாமிகளின் அருளாற்றால் குரு நாதரை வசீகரம் செய்து விட்டது.

இரவு 7 மணி
ரங்கூன் சுவாமிகள் : டேய், டேய் தம்பி
குருநாதர் :
ரங்கூன் சுவாமிகள் : டேய், டேய் தம்பி எழுந்திரிடா
குருநாதர் : சுவாமி

ரங்கூன் சுவாமிகள் : ஏண்டா, நான் தவம் செய்யும் போது இடைஞ்சல் இல்லாம இருக்கணும் அப்டீன்னு ஒன்னைய காவலுக்கு வச்சா, நீ என்னை காவல் காக்க வச்சிட்டியே.

இருவரும் சிரித்துக் கொண்டே மலையில் இருந்து இறங்கி வந்தார்கள்.

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!