குருவும் தற்போதமும் – 1

புகைப்படம் : திரைப்பட இயக்குநர் திரு.ஐயப்ப மாதவன் அவர்கள்

குரு நாதர், மூலகுருநாதர் இவர்கள் புகைப்படம் வெளிட அனுமதி இல்லாததால் அவர்கள் புகைப்படம் வெளியிடப்படவில்லை.

எனது குருநாதர் உரைத்ததை இங்கு உரைக்கிறேன்
வசதிக்காக

குருநாதர் : என் குரு நாதர்
அவர் குருநாதர் : மூலகுருநாதர்

ஒரு நாள் காசிக்கரையில் குருநாதரும் மூலகுரு நாதரும் பேசிக்கொண்டு இருந்தனர்.

அவ்வழியே ஒரு வண்ணான், பிறரது அழுக்குத்துணிகளை துவைத்து வெண்மையாக அல்லது தூயதாக மாற்றிக் கொடுப்பவன் தனது நம்பிக்கைக்குரிய கழுதையுடன் ஓர் நாள் ஆற்றிற்கு சென்றான்.

அங்கே நீர் குறைவாக இருந்ததால் வேறோர் பகுதிக்கு செல்லும் வழியில் மரத்தினடியில் மூலகுரு நாதர் அமர்ந்திருந்தார் அவரிடம் பலர் ஆசிகள் வாங்கிச் செல்வதைக் கண்டு தானும் சென்று வணங்கினான். அவரோ எழுந்து கழுதையை வணங்கினார்.

மூலகுரு நாதர் : இதில் இருந்து என்ன தெரிகிறது?

குருநாதர் : ஒன்றும் தெரியவில்லை.

மூலகுரு நாதர் : அந்த கழுதை யான் என்று தெரியவில்லையா?

குருநாதர் : பதறிப்போய், சுவாமி, என்ன இந்த விளையாட்டு?

மூலகுரு நாதர் : இல்லை, உண்மையைத் தான் சொல்கிறேன்.

குருநாதர் :…

மூலகுரு நாதர் : இந்த கழுதை என்னச் செய்கிறது?

குருநாதர் : அழுக்குத் துணிகளை எடுத்துச் சென்று அவைகளை துவைத்தப்பின் வெளித்து புதியதாக எடுத்து வருகிறது.

மூலகுரு நாதர் : மனிதர்கள் தூயதாக துவைத்து வழங்கும் தனது ஆடைகளை மறுபடி அழுக்காக மாற்றி விடுகின்றனர். அவர்களின் ஆணவம், கன்மம், மாயை எனும் அழுக்குகளால் கலங்கமடைவதை இறைவன் குரு எனும் வண்ணானாக புதுப்பித்துக் கொடுக்கிறான். இந்தக் கழுதையோ அவர்களின் தூய்மையற்ற மும்மலங்கலை சுமக்கும் மஹா குருவாக மௌனமாக ஆற்றுக்கும் வீட்டுக்குமாக சென்று வருவதாக உணர்ந்து கழுதையை வணங்கினேன்.

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *