மகேசுவரமூர்த்தங்கள் 20/25 திரிபுராரி
வடிவம்
· உருவத்திருமேனி
· பாவ நிவர்த்தி மூர்த்தம்
· பொன், வெள்ளி, இரும்பாலாகிய மூன்று கோட்டை களையுடைய திரிபுராதியரான தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி ஆகிய மூன்று அசுரர்கள்களை புன்சிரிப்பால் அழித்த வடிவம். அவர்களை எரித்தப்பின் ஒருவரை மத்தளம் வாசிப்பவனாகவும், மற்றஇருவரையும் வாயிற் காப்பாளனாகவும் மாற்றிக் கொண்டார்.
· மேரு – வில், வாசுகி – நாண், தேவர்கள் – படைகள், சூரிய, சந்திரர்கள் – சக்கரம், உலகம் – தேர் , வேதங்கள் – தேர்க் குதிரைகள், விஷ்ணு – அம்பு , வாயு – அலகு, அக்கினி – அம்பின் நுனி ,பிரம்மா – தேரோட்டி
· புரம் எரித்த சம்பவம் நிகழ்ந்த இடம் திருஅதிகை.
· முப்புரம் என்பது மூன்று மலங்கள் (ஆணவம், மாயை மற்றும் கண்மம்) என்று திருமந்திரம் மூலம் அறியலாம்
வேறு பெயர்கள்
திரிபுர அந்தகர்
முப்புராரி
புரரிபு
முப்புர மெரித்தோன்
வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்
· மாமல்லபுர சிற்பம் வடக்குச்சுவர்
· தஞ்சைக்கோயில் கருவறை
· திருவிற்கோலம் – திரிபுராந்தகர் கோயில் – கூவம்
· திருநல்லம் கோணேரிராசபுரம்
· சிதம்பரம்
· கொடும்பாளூர் விமானம்
· காஞ்சி கைலாசநாதர் கோயில்
இதரக் குறிப்புகள்
1.
எரியார் கணையால் எயிலெய் தவனே – திருக்கழிப்பாலை
2.
கரி புராரி காமாரி திரிபுராரி தீயாடி
கயிலையாளி காபாலி கழியோனி
கரவு தாசன் ஆசாரி பரசு பாணி பானாளி
கணமொடாடி காயோகி சிவயோகி
விராலிமலை திருப்புகழ்
3.
பொருப்புச் சிலையில் வாசுகிநாண் பூட்டி அரிகோல் வளிஈர்க்கு
நெருப்புக் கூராம் படைதொடுத்துப் பிரம வலவன் நெடுமறைமா
விருப்பிற் செலுத்து நிலத்தேர்மேல் நின்று தெவ்வூர் வெந்தவிய
அருப்புக் குறுவெண் ணகைமுகிழ்த்த அந்த ணாளன் திருவுருவம்.
மேருவை வில்லாகவும், வாசுகியை நாணியாகவும் கொண்டு பூட்டித் திருமாலை
அம்பாகவும், வாயுவை அலகாகவும், அக்கினியை அம்பின் நுதியாகவும் படை
அமைத்துக் கொண்டு பிரமனைத் தேர்ப் பாகனாகவும் வேதங்களைத் தேர்க்
குதிரையாகவும் கொண்டு பூமியாகிய தேர்மிசை நின்று பகைவர் ஊராகிய
முப்புரம் வெந்தழியும்படி அரும்பு தலையுடைய புன்முறுவல் பூத்த
அறவோராகிய திருபுராரி திருவுருவம்.
– காஞ்சிப் புராணம்
சைவ சித்தாந்தம், சைவம், மகேசுவரமூர்த்தங்கள், திரிபுராரி.
புகைப்படம் : இணையம்
புகைப்படம் : இணையம்