அப்பா உனக்கு ஒரு திகில் கதை
சொல்லப் போகிறேன் என்கிறாய்.
திகைக்கும் எனது எண்ணம் தாண்டி
கதையை தொடங்குகிறாய்.
ஒரு ஊர்ல ஒரு அம்மா அப்பாவாம்.
அம்மா ஊமச்சியாம்
அப்பா செவிடனாம்.
என் இதழ் வழி வழியும்
புன்னகைக்கான காரணம் தெரியாமல் விழிக்கிறாய்.
உருவேறத் திருவேறும்