அமுதமொழி – ஹேவிளம்பி – பங்குனி – 24 (2018)

பாடல்

அல்ல லென்செயும் அருவினை யென்செயும்
தொல்லை வல்வினைத் தொந்தந்தா னென்செயும்
தில்லை மாநகர்ச் சிற்றம் பலவனார்க்
கெல்லை யில்லதோ ரடிமைபூண் டேனுக்கே.

தேவாரம் – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

தில்லைமாநகரிலே திருக்கூத்து ஆடி அருருளும் திருச்சிற்றம்பலம் ஆனவர்க்கு அளவில்லாத அடிமைபூண்ட எனக்கு  இப்பிறப்பிலே செய்யும் புண்ணியபாவங்கள் ஆகிய ஆகாமியமாகிய எதிர்வினையும், நுகர்ந்தாலன்றித் தீர்த்தற்கரிய பிராரத்தவினை எனப்படும் நுகர்வினையும், தொந்தம் எனப்படும் பழைய பழைய வினைகளும் எனக்கு என்ன துன்பம் செய்யக் கூடியவை?

விளக்க உரை

  • அவ்வினைகள் ஒரு துன்பமும் செய்யாது என்பது மறை பொருள்.
  • துவந்துவம் – நல்வினை, தீவினை எனும் இரட்டைகளை உடைய வடமொழிச் சொல். தமிழில் தொந்தம்
  • இருவினை இறைவன் ஆணையின் படி வரும் என்பது சாத்திரம். பரமுத்தியில் ஆன்மா முதல்வனுக்கு அடிமையாக ஆவதால் வினை அழியும்.
  • ‘மீளா அடிமை’ என்னும் சுந்தரின் தேவாரம் ஆகிய வாய்மொழி ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *