ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – உண்ணீர்
பொருள்
- குடிநீர்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
மடல்பெரிது தாழை மகிழினிது கந்தம்
உடல்சிறிய ரென்றிருக்க வேண்டா-கடல்பெரிது
மண்ணீரு மாகா ததனருகே சிற்றூறல்
உண்ணீரு மாகி விடும்.
மூதுரை – ஔவையார்
கருத்து உரை
இதழ்களின் அளவினாலே தாழம்பூ பெரிதாக இருக்கிறது, மகிழம்பூ இதழ்களின் அளவினாலே சிறிதாயினும் மணத்திலே தாழம்பூவினை விடவும் இனிதாக இருக்கிறது, சமுத்திரம் பெரிதாக இருக்கிறது, ஆயினும் அதிலுள்ள நீர் (உடல்) கழுவுவதற்குத் தக்க நீராக ஆகாது; அதன் பக்கத்தே சிறிய மணல் குழியில் சுரக்கும் ஊற்றுநீர், குடிக்கத்தக்க நீராக ஆகும்; எனவே ஒருவரை உருவத்தினாலே சிறியவரென்று மதியாமல் இருக்கவேண்டா.
விளக்க உரை
உருவு கண்டு எள்ளாமை வேண்டும் எனும் பொருள் பற்றிய பாடல்
துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை
மறைஞானசம்பந்தரின் மாணாக்கர் யார்?
உமாபதி சிவம்