மெய்ப் பொருள் – 2. தருண கணபதி

தருண கணபதி

 

ஒவியம் : இணையம்

 

வடிவம் யானை முகம், எட்டுத் திருக்கரங்கள்
மேனி வண்ணம் நண்பகல் சூரியன் போன்ற நல்ல சிவந்த திருமேனி
திருக்கைகள் எட்டுத் திருக்கரங்கள் – செழிப்பையும், வளத்தையும் முன் வைத்து ஒவியங்கள் / சிற்பங்கள்

பாசம், அங்குசம், மோதகம், விளாம்பழம், நாவற்பழம், ஒடிந்த தன்கொம்பு, நெற்கதிர், கரும்பின் துண்டு

பலன் தியானம் கைகூடுதல்

மந்திரம்

பாசாங்குசா பூபகபித்த ஜம்பூ
ஸ்வதநதசாலீஷூமபி ஸ்வஹஸ்தை:|
தத்தே ஸதா யஸ்தருணாருணாப:
பாயாத் ஸ யுக்ஷ்மாந் தருணோகணேச : ||

விளக்கம்

கைகளில் பாசம், அங்குசம், அபூபம்(அப்பவகை), விளாம்பழம், நாவல்பழம், தனது ஒரு தந்தம், நெற்கதிர் மற்றும் கரும்பு ஆகிய இந்த எட்டு பதார்த்தங்களையும் வைத்துக் கொண்டிருப்பவரும், நண்பகலில் விளங்குகின்ற கதிரவனின் ஒளியைக் கொண்டவருமான தருண கணபதி எப்பொழுதும் உங்களைக் காப்பாற்றுவாராக.

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *