அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – கபாலம்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  கபாலம்

வார்த்தை :  கபாலம்

பொருள்

  • மண்டையோடு

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

மறையும் ஓதுவர் மான்மறிக் கையினர்
கறைகொள் கண்ட முடைய கபாலியார்
துறையும் போகுவர் தூயவெண் ணீற்றினர்
பிறையுஞ் சூடுவர் பேரெயி லாளரே.

தேவாரம் – 5ம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து உரை

பேரெயில் தலத்து இறைவர், மறையை ஓதுவர்; மான்  ஏந்திய கையினை உடையவர் ; திருநீலகண்டர்; கபாலத்தைக் கொண்ட கையினர்; எத்துறையும் போகுவர்; தூய வெண்ணீற்றினர்; பிறையும் சூடுபவர் .

விளக்க உரை

  • கறைகொள்கண்டம் – முதல்வனும் பேரருள் உடைமையினையும், யாரையும் எவற்றையும் தன்வயப்படுத்தும் செம்பொருட்டன்மையினையும் குறிக்கும்.
  • கபாலியார் – பிரமகபாலம் ஏந்தியவர் . இஃது உயிர்களுக்கு உள்ள யான் எனது என்னும் செருக்கு அறுத்து இனிமை ஊட்ட வல்லான் என்பதைக் குறிக்கும்.
  • துறை போதல் – கரையைச் சென்று அடைதல்,. எனவே , முதல்வன் எக்கலைக்கும் முதற் கருத்தாவாய் இயற்கை முற்றுணர்வு உடையன் என்பதைக் குறித்தபடி.
  • பிறை சூடுதல் உயிர்களின் அக இருளைப் போக்கும் தூய நல்லுணர்வைத் தன் பக்கம் உடையன் என்பதைக் குறிக்கும் .
  • துறையும் போகுவர் – எக்கலைக்கும் முதல்வன் ( சிவபிரான் )

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *