அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – நொந்துதல்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  நொந்துதல்

வார்த்தை :  நொந்துதல்

பொருள்

  • அழிதல்
  • தூண்டுதல்.

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை *நொந்தக்கால்*
எய்த வருமோ இருநிதியம்-வையத்து
அறும்பாவம் என்னவறிந்து அன்றிடார்க் கின்று
வெறும்பானை பொங்குமோ மேல்

நல்வழி  –  ஒளவையார் (தீவினையே வறுமைக்கு வித்து)

கருத்து உரை

வெறும் பானையை  (அடுப்பிலே வைத்து எரித்தால்) மேலே பொங்குமோ; (பொங்காது.) அது போல  பூமியிலே (அறஞ்செய்தலினாலே) பாவம் நீங்கும் என்று உணர்ந்து,  அக்காலத்திலே  அறம்  செய்யாதவருக்கு ,  செய்த அப்பாவம் (வறுமைக்கு வித்தாய்) இருக்கும் ;   இப்பொழுது கடவுளை வெறுத்தால், பெரிய திரவியம் பொருந்த வருமோ? (வராது.) 

விளக்கம்

வறியவர் அவ்வறுமைக்கு வித்தாகிய தீவினையைச் செய்த தம்மை நோவாது, தெய்வத்தை நோதலிற் பயன் இல்லை

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *