ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – இரங்குதல்
வார்த்தை : இரங்குதல்
பொருள்
- கூறுதல்
- ஈடுபடுதல்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
எழுதியவா றேகாண் *இரங்குமட* நெஞ்சே
கருதியவா றாமோ கருமம்-கருதிப்போய்க்
கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்காயீந்ததேல்
முற்பவத்திற் செய்த வினை.
ஊழின் வலிமை – மூதுரை – ஒளவையார்
கருத்து உரை
நற் பயனைப் பெறலாமென்று நினைத்துப் போய் கற்பகத்தருவை அடைந்தவர்க்கு, அது எட்டிக்காயைக் கொடுக்குமாயின் அதற்குக் காரணம் அவர் முற்பிறப்பிற் செய்த தீவினையாகும்; வருந்துகின்ற அறியாமை பொருந்திய மனமே, செய்தொழில்கள் (நீ) நினைத்தபடியே ஆகுமோ?
விளக்கம்
செய்தொழில்கள் ஊழின்படி யன்றி அவரவர் நினைத்தபடி முடியா